Wednesday, July 3, 2013

புற்றுநோயும்..விளம்பர படங்களும்....



இப்போதெல்லாம் விளம்பரங்களுக்கு என்னதான் செய்வது என்று இல்லாமல்..சற்று எல்லை மீறியே வருகின்றன.

குறிப்பாக, முடி கொட்டுவதற்கான ஒரு தைல விளம்பரத்தில், பெரியவர்களுக்குத் தெரியாத ஒன்றை..பள்ளி சிறுவர்களுக்குத் தெரிந்திருப்பது போல காட்டப்படுகிறது.

அதுவாவது பரவாயில்லை..பதினைந்தே வயது நிரம்பியுள்ளது போன்ற ஒரு பெண், தந்தைக்கு சாக்லேட் கொடுக்க, தந்தை அதற்காக மேலும் இரண்டு சுற்று ஓட வேண்டும் என்கிறார்.அவரை அனுப்பி விட்டு தனது பாய் ஃப்ரண்டுக்கு விசில் அடித்து கூப்பிடுகிறாள் அப்பெண்.இது பிரபல சாக்லெட் நிறுவன விளம்பரம்.(இந்த சாக்லேட் அப்பாவை ஏமாற்ற என்கிறார்களோ)

அதைவிட கொடுமை...

ஒரு தனியார் மருத்துவமனை விளம்பரப்படம்.

புற்று நோய்க்கு வைத்தியம் பார்க்கிறார்களாம் சிறப்பாக..அதற்கான விளம்பரத்தில்..

ஒரு சிறுவனுக்கு (அவனுக்கு பத்து வயதிருக்குமா) புற்று நோய் என குடும்ப வைத்தியர் கூறி, அந்த குறிப்பிட்ட மருத்துமனையை சிபாரிசு செய்கிறாராம்.

யாருக்கு உடம்பிற்கு வந்தாலும் வருத்தமே..ஆனால் ஒரு சிறுவனுக்கு (குழந்தை என்று சொல்லலாமா) புற்று நோய் வந்துள்ளது எனக்காட்டுவது..மனம் ஆறவில்லை.அவனை பெற்றோர் கவலையுடன், கண்கள் கலங்க அம்மருத்துவமனையில் சேர்க்கிறார்களாம்.அங்கு வைத்தியர்..புற்று நோய் தடுப்பு வீரன் என்ற பேட்ஜ் குத்திவிட..அவன் ஒரு போர் வீரனாக நடிக்கிறான்.அவனைப் பெற்றோர் கண் கலங்க கைதட்டுகின்றனர்.

இது என்ன விளம்பரம்.ஒரு மருத்துவ மனை , கிட்டத்தட்ட ஆட்கொல்லி நோய்க்கு... சிறந்த மருத்துவம் கொடுப்பது மகிழ்ச்சி.ஆனால் அதை விளம்பரமாக்கி, அதையும் ஒரு சிறுவனைக்காட்டுவது..

சே....கோபம் வருகிறது..கூடவே..விளம்பர நோக்குக் கொண்ட அந்த மருத்துவமனை மீது அருவெறுப்பும் வருகிறது.

1 comment:

ராஜி said...

பணத்துக்காக அதை விளாம்பரப்படுத்தும் தொல்லைக்காட்சிகளாஇ என்ன பண்ணாலாம்?!