Tuesday, December 30, 2014

2014 எனக்கு எப்படி....



எனது நாடகம் "சாலையோரப் பூக்கள்" குட்வில் ஸ்டேஜ் குழுவினரால் மேடை ஏற்றப்பட்டு..பல சபாக்களில் நடந்து வருகிறது.

தவிர்த்து, இவ்வாண்டு, நான் மிகவும் எளிமைப் படுத்தி எழுதிய, "மகாபாரதம்" திரு சிவராமன், திரு முருகன் ஆகியோர் ஊக்குவிப்பில் சூரியன் பதிப்பகத்தாரால், "மினியேச்சர் மகாபாரதம்' என்ற பெயரில் நூலாக  வெளிவந்துள்ளது

மற்றபடி 2014 ல் மனிதர்களுக்கு அவ்வப்போது வந்து போகும் சிறு சிறு உபாதைகளும்..துன்பங்களும் எனக்கும் வந்து , பின், இவன் இதற்கெல்லாம் பயப்பட மாட்டான் என விலகி ஓடின.

2015ல் செய்ய நினைப்பவை..

ஏற்கனவே,எனது ஐந்து நாடகங்கள் ஒரு பிரபல பதிப்பகத்தால் இவ்வாண்டு புத்தகமாக வர உள்ளது.

"தந்தையுமானவள்" என்ற நாடகம் ஏப்ரல் மாதல் மேடையேற உள்ளது.

வால்மீகி ராமாயணம்.. எளிய நடையில் எழுதி, முடிக்கும் நிலையில் உள்ளது.

ஐம்பெரும் காப்பியங்களையும் எளிமைப் படுத்தி  எழுத எண்ணம்.(முக்கிய நோக்கம்..சிலப்பதிகாரம் தவிர்த்து மற்றவை பெரும்பாலானோருக்கு தெரியாது என எண்ணுகிறேண்.ஆகவே இம்முயற்சி)

திரு சிவராமன் மாதிரியும், திரு முருகன் மாதிரியும் நண்பர்கள் கிடைத்தால் இவற்றையும் நூலாக வெளியிட எண்ணம்.

வார, மாத இதழ்கள், இணையத்தில் என எழுதிய 30க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் புத்தகமாக்க ஆவல்

பார்ப்போம்...

நமக்கும் மீறிய சக்தி ஒன்று உள்ளது..அது என் எண்ணங்களுக்கு ஒத்துழைக்குமா என்று.

மற்றபடி

2014க்கு விடை கொடுத்து 2015 வரை வரவேற்போம்...நமக்கு அதனால் ஒரு வயது கூடுகிறது என்றாலும்.

அனைத்து நண்பர்களுக்கும் புத்தாண்டு மகிழ்ச்சியை கொண்டு வரட்டும்.

என் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.

2 comments:

ராமலக்ஷ்மி said...

இந்த ஆண்டில் எண்ணியபடியே புதிய நூல்கள் வெளிவரட்டும். தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

ராமலக்ஷ்மி said...

இந்த ஆண்டில் எண்ணியபடியே புதிய நூல்கள் வெளிவரட்டும். தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!