Friday, January 2, 2015

குறுந்தொகை-186


தலைவி கூற்று
(தலைவன் கூறிச் சென்ற கார்ப்பருவம் வரவும் அவன் வாராமையால் தலைவி துயருறுவாள் என்று வருந்திய தோழியை நோக்கி, “தலைவனை நினைந்து துயிலேன் ஆயினேன்” என்று தலைவி கூறியது.)

முல்லைத் திணை- பாடலாசிரியர் ஒக்கூர் மாசாத்தி

இனி பாடல்-
 
ஆர்கலி யேற்றொடு கார்தலை மணந்த
   
கொல்லைப் புனத்த முல்லை மென்கொடி
   
எயிறென முகைக்கு நாடற்குத்
   
துயிறுறந் தனவாற் றோழியென் கண்ணே.


                                  -ஒக்கூர் மாசாத்தி.

    என் கண்கள்,  மிக்க முழக்கத்தையுடைய இடியேற்றோடு,மேகம் மழைபெய்து கலந்த, முல்லை நிலத்திலுள்ளனவாகிய,  மெல்லிய முல்லைக் கொடிகள்,  பற்களைப் போல அரும்பும் நாட்டையுடையதலைவன் பொருட்டு, உறக்கத்தையொழிந்தன.

 

    (கருத்து) தலைவன் இன்னும் வாராமையின் நான் துயிலொழிந்து வருந்துகின்றேன்.

No comments: