Showing posts with label அரசியல் சமுகம். Show all posts
Showing posts with label அரசியல் சமுகம். Show all posts

Monday, September 22, 2008

இறங்கி வரும் கலைஞர்...

இவ்வளவு நாட்கள் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றாலும்..தனித்தே ஆட்சி அமைத்து வந்தது தி.மு.க., அக்கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மையும் கிடைத்து வந்தது.இந்நிலையில் 2006 தேர்தலில்..காங்கிரஸ்,பா.ம.க.,வலது,இடது கம்யூனிஸ்ட்..மற்றும் சில உதிரி கட்சிகளுடன் கூட்டணி அமைத்தது.90 இடங்களே தி.மு.க.வென்றது.ஆனாலும் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்தது.
இதனால்..பிரதான எதிர்கட்சியான அ.அ.தி.மு.க., மைனாரிட்டி தி.மு.க.அரசு என்றே கூறி வந்தது.
அண்மையில்..பா.ம.க.ராமதாஸ் அரசை கடுமையாக விமரிசித்து வந்ததால்..அவர் கட்சியைச் சேர்ந்த முன்னாள் சட்டசபை உறுப்பினர் ஒருவர்.,கலைஞரை என்றோ விமரிசித்து பேசியதை..ஆற்காட்டாரை விட்டு மீண்டும் ஞாபகப்படுத்தி வைத்து..கலைஞரும் பேச...பா.ம.க.கூட்டணியிலிருந்து விலகியது.காடுவெட்டி கைது செய்யப்பட்டார்.
கம்யூனிஸ்ட் கட்சிகள்..மத்தியில் ஆதரவை வாபஸ் பெற....ஸ்டேட்டில் அவர்கள் ஆதரவு கேள்விக்குறியானது.
கம்யூனிஸ்ட் யூனியங்கள் நிலைப்பாட்டால்...கலைஞர் கம்யுனிஸ்ட் தலைவர் ஒருவரை வசைப்பாட...நிலை முற்றி இரண்டு கம்யூனிஸ்ட் களும் ஆதரவை வாபஸ் பெற்றது.
மீண்டும் பா.ம.க.வை உள்ளே கொண்டுவர திருமாவளவன் முயற்சி தோற்றது. பின் ப.சிதம்பரம் ,கலைஞரை சந்தித்ததும்...பா.ம.க.மீண்டும் இணைந்தால் சந்தோசப்படுவேன் என்றார் முதல்வர்.இச்சமயத்தில் தான் அவருக்கு தனது ஆட்சி மைனாரிட்டி அரசு என தெரிந்தது என எண்ணுகிறேன்.
உடனே...ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ளவும்...தேர்தல் வந்தால் அதை சந்திக்கவும் 1 ரூபாய்க்கு அரிசி திட்டம் அமுல்படுத்தப்பட்டது.
ஆனால்..வில்லனாக..நாட்டில்..இதுவரை இல்லாத மின்வெட்டு.
சட்டசபை குளிர்காலக் கூட்டம் தொடங்கும் நேரம்...தனது ராசி சரியில்லை என உணர ஆரம்பித்திருக்கிறார் முதல்வர்.அவருக்கு தன் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள காங்கிரஸ் ஆதரவு அவசியம் தேவை.அதனால் தான்...இவ்வளவு நாள்..காங்கிரஸ் மாநில தலைவர்கள்..ஆட்சியில் பங்கு கேட்டது காதில் விழாது இருந்தவர்...திருச்சி கூட்டத்திற்குப் பிறகு..சோனியா
விரும்பினால்..அது பற்றி பரிசீலிக்கப் படும் என இறங்கி வந்திருக்கிறார்.
கலைஞரின் முதல் சறுக்கல் ஆரம்பமாகி விட்டது.