Showing posts with label அரசியல் ஜோக்ஸ். Show all posts
Showing posts with label அரசியல் ஜோக்ஸ். Show all posts

Tuesday, September 6, 2011

வாய் விட்டு சிரிங்க..(அரசியல் ஜோக்ஸ்)




பாபர் போஸ்துமஸ் கைதா..ஏன்ன சொல்ற
ஆமாம்..அவர் மன்னரா இருந்தப்போ பாபர் மசூதி இருக்கிற நிலத்தை அபகரிச்சதா புகார் வந்துள்ளதாம்

2) பேட்டா கடையில்- இந்த செருப்பு 99,999 ரூபா99 பைசான்னு போட்டிருக்கே
  கடைக்காரர்-ஆமாங்க..தனி விமானத்திலே மும்பையிலிருந்து வந்த செருப்பு

3)தலைவர் இப்ப எங்கே இருக்கார்..
 கடைசி நிலவரப்படி சேலத்தில...நாளைக்கு பாளையம்கோட்டைப் போனாலும் போவார்

4)என் கணவர் பிரதமர் போல இருக்கார்
  என்ன சொல்ற
  எது சொன்னாலும்..எது நடந்தாலும் மௌனமாகவே இருக்கார்

5)மனைவி-ப்ளீஸ் சிட் டௌன்..ப்ளீஸ் .சிட் டௌன்..அப்படி சொல்லிக்கிட்டே இருக்கீங்களே ஏன்?
 கணவன்- நாளைக்கு மாதிரி பாராளுமன்றத்தை அலுவலகத்தில் நடத்த இருக்கிறோம்..அதில் நான் சபாநாயகர்..

6)ஆசிரியர்- பாடம் நடத்தறப்போ..உங்க பையன் அப்பப்ப..வெளியே போயிடறான்
 தாய்- அவன் அப்பா மாதிரி
 ஆசிரியர்- என்ன சொல்றீங்க..அவன் அப்பா யார்
 தாய்-எதிர்க் கட்சித் தலைவர்

7)ஆளும் கட்சியில் எம்.எல்.ஏ., க்களை எல்லாம்..அசையாச் சொத்துக் கணக்கில் காட்டியிருக்காங்களாம்

8)எதிர் கட்சித் தலைவர்-அண்ணா சமாதியில் மரியாதை செலுத்த வந்த நம்மை ஆளும் கட்சியினர்..அவமதித்துள்ளனர்.அண்ணா மட்டும் உயிருடன் இருந்திருந்தால் அவர் சமாதியை அவர்களை தொட விட்டு இருப்பாரா?