பிரபல பதிவரும், எழுத்தாளருமான ஷைலஜா அவர்களின் தந்தையும். முதுபெரும் எழுத்தாளருமான ஏ.எஸ்.ராகவன் காலமானார்
எழுத்தாளர் ஏ.எஸ்.ராகவன் சென்னையில் இன்று மதியம் அவரது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 85.
1960 - 70 களில் ஆனந்தவிகடன், கல்கி, கலைமகள், அமுதசுரபி உள்ளிட்ட அனைத்து பத்திரிகைகளிலும் சிறுகதைகள், தொடர்கதைகள், குறுந்தொடர்கள் எழுதியவர். தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் புலமை பெற்ற இவர், எழுத்தாளராக மட்டுமல்லாமல் ஓர் சமூக ஆர்வலராகவும் விளங்கியவர். இவர் சென்னை நங்கநல்லூரில் வசித்துவந்தார்.
மறைந்த ஏ.எஸ்.ராகவன், எழுத்தாளர்கள் ஷைலஜா, ராஜரிஜி ஆகியோரின் தந்தை. எழுத்தாளர் இந்திராசௌந்தர்ராஜனின் பெரியப்பாவுமாவார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்.
ஷைலஜா, ராஜரிஷி ஆகியோருக்கு இப்பிரிவை தாங்கும் திறனை அளிக்க இயற்கையை வேண்டுகிறோம்.