சமீப காலமாக..மென்பொருள் வல்லுனர்களைப் பற்றி பத்திரிகைகள் மனம் போனபடி எழுதி வருகின்றன..
எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல..ஒரு நிகழ்ச்சி சமீபத்தய படம் ஒன்றில் வந்துள்ளது.
வேலையில்லாத ஒருவனுக்கு மென்பொருள் தொழில் வல்லுநராக வேலைகிடைக்கிறது.முதல் வருடம்..நண்பர்களுக்கு இனிப்பு வழங்கும்..அவன்..அடுத்த ஆண்டு 5000 ரூபாய் வரை செலவழித்து ஒரு பார்ட்டி கொடுக்கிறான்..
இரண்டு ஆண்டுகள் கழித்து..சொந்தமாக ஹெலிகாப்டர் வாங்குகிறானாம்..
இப்போது அவன் மாத சம்பளம் 85000 ரூபாய்.இப்படி வந்த படம் அறை எண் 305ல் கடவுள்..
ரஜினி நடித்த சிவாஜியில் 20ஆண்டுகள் ஆர்கிடெக்சல் இஞ்சினீயர் ..அமெரிக்காவில் 200கோடி ரூபாய் வரை சம்பாதித்ததாக வருகிறது.
பார்ப்பனர்களுக்கு அடுத்து இப்போது தாக்கப்படுபவர்களாக..இவர்கள் இருக்கிறார்கள்..
இப்படி எல்லாம் அவர்கள்மீது பொறாமை படும் நண்பர்களே...அந்த நிலைக்கு வர ..அவனது உழைப்பு ..மென்டல் டென்ஷன் ஆகியவை எவ்வளவு இருந்திருக்கும்...அதை எண்ணிப்பாருங்கள்.ஒரு படத்தில் நடிக்க கோடிகணக்கில்..நீங்கள் வாங்கும்போது...மாத உழைப்புக்கு 85000 வாங்குவது கூடாதா?(இப்பணத்தில்..வருமான வரி..படிக்க வாங்கிய வங்கி கடன் மாதத் தவணை..அவனது மருத்துவசெலவு ஆகியவை போக)..அவன் வீட்டுக்கு எடுத்துப் போகும் சம்பளம்..பாதி கூட தேறாது.
அவனே பாவம்...உலக பொருளாதார வீழ்ச்சியால்...தினம் செத்து..பிழைத்துக் கொண்டிருக்கிறான்.அவனை ..திரை உலகமே..பத்திரிகை துறையே..தயவு செய்து விட்டு விடுங்கள்.