Showing posts with label கமல்...- ரஜினி. Show all posts
Showing posts with label கமல்...- ரஜினி. Show all posts

Saturday, March 9, 2013

சொத்தைக் காக்கத் தெரியாதவரா கமல்...




தன் வீட்டை அடமானம் வைத்து..'விஸ்வருபம்' எடுத்ததாகவும், அது வெளிவாராவிடில் தன் வீடு போகும் அபாயம் உள்ளதாகவும்..பட வெளியீட்டுக்கு முன் கமல் கூறியிருந்தார்.

பிறகு...விஸ்வரூபம் வெளியாகி, ஓரளவு வசூலும் பெற்றுவிட்டதால்..வீட்டை மீட்டு விட்டதாகவும் தகவல் வந்தது.

இந்நிலையில், கமலை சந்தித்த ரஜினி, "வீட்டை பிள்ளைகள் பெயரில் எழுதி வைத்துவிடுங்கள்..'என்றும், இனி, "வீட்டை வைத்து படமெடுக்கிறேன் ' என்று சொல்லாதீர்கள்..என்று சொன்னதாகவும், இணையத்தில் செய்திகள் வந்துள்ளன.

ஆரம்ப காலம் முதல்..பெரிய பெரிய தயாரிப்பாளர்கள்...தனது வயது தளர்ந்த காலத்தில்..இருந்ததையெல்லாம் இழந்து...வாழ்க்கையை ஓட்டவே துன்பப்பட்டதெல்லாம் நாம் அறிவோம்.

ரஜினி, அப்படி சொல்லியிருந்தது உண்மையானால்...
கமலும், தான் சம்பாதித்த பணத்தை, அந்தத் துறையிலேயே முதலீடு செய்பவர்.அவருக்கும் அப்படி ஒரு நிலை வரக்கூடாது என ரஜினி விரும்பினாரோ என்னவோ தெரியவில்லை. அதனால் தான் இந்த அறிவுரை போலும்.

எது எப்படியோ, கமலின் அந்த பிரஸ் மீட்..அவரை சற்று தரம் தாழ்த்திவிட்டதோ என்ற ஐயப்பாடு எழுகிறது.கமல் அதை தவிர்த்திருக்கலாமோ..என்று தோன்றுகிறது.