Showing posts with label கோமல் சுவாமிநாதன் - டி வி ஆர். Show all posts
Showing posts with label கோமல் சுவாமிநாதன் - டி வி ஆர். Show all posts

Friday, November 9, 2018

அடுத்தவீட்டு ஜன்னல் - 9 (பகுதி -1)

---------------------------
கோமல் சுவாமிநாதன்
------------------------------------

1935ஆம் ஆண்டு பிறந்தவர் சுவாமிநாதன்
தஞ்சை மாவட்டத்தில் உள்ள கோமல் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் .சென்னையில் பள்ளி ஒன்றில் தமிழாசிரியராக தன் வாழ்நாளைத் தொடங்கியவர்.பின்னர் ஊரின் பெயரான "கோமல்" இவர் பெயருடன் ஒட்டிக்கொள்ள கோமல் சுவாமிநாதன் ஆனார்.

புதுமைப்பித்தனின் எழுத்துகளால் கவரப்பட்டவர் இவர்.எஸ் வி சஹஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ் குழுவிற்காக இவர் எழுதிய முதல் நாடகம் "புதிய பாதை" ஆகும்.

பின்னர், 1971ல் தனது நாடக்குழுவான ஸ்டேஜ் ஃபிரண்ட்ஸ் துவக்கினார்.பொதுவுடமைக் கொள்கைகளில் மிகவும் பற்று கொண்டவர் கோமல்

இவர் தன் குழுவிற்காக 33 நாடகங்கள் எழுதினார்.அவற்றில் சில..

"கோடு இல்லாத கோலங்கள்" ஆட்சி மாற்றம்" சுல்தான் ஏகாதசி"பெருமாளே சாட்சி,"யுத்த காண்டம்" "செக்கு மாடுகள்" "கிராம ராஜ்ஜியம்" "ஒரு இந்தியக் கனவு"

1980ல் இவர் எழுதிய "தண்ணீர் தண்ணீர்" மாபெரும் வெற்றி நாடகமாகும்.இந்நாடகம் 250 முறைகளுக்கு மேல் மேடையேறியுள்ளது.இந்நாடகத்தில் வாத்தியாராக வந்த "ராமன்" பின்னாளில் கோமலின் இணைபிரியா நண்பர் ஆனார்.மக்களால் வாத்தியார் ராமன் என்றே அறியப்பட்டார்.

கோமலின் நாடககுழுவில் நடித்த மேலும் சில நடிகர்கள் , ராஜ்மதன்,ஏ கே வீராச்சாமி.,சாமிக்கண்ணு ஆவர்.

வெள்ளித்திரை நடிகர் சத்தியராஜ், கோமலின் "கோடில்லா கோலங்கள்" 'சுல்தான் ஏகாதசி" "நவாப் நாற்காலி' ஆகிய நாடகங்களில் நடித்தவர் ஆவார்.

(அடுத்தவீட்டு ஜன்னல் - 9 அடுத்த பதிவிலும்)