ஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்
Showing posts with label சினிமா - விமரிசனம். Show all posts
Showing posts with label சினிமா - விமரிசனம். Show all posts
Sunday, October 21, 2012
பீட்சா..(மாற்றான விமரிசனம்)
பீட்சா படம் பற்றி விமரிசனம் செய்ய ஆசை.
நாம் ஒரு நல்ல படத்தைப் பார்த்தால்...அந்த சந்தோசத்தை அனைவரிடமும் பகிர்ந்து கொள்வோம்.
படம் பற்றி..விவாதிப்போம்..கிளைமாக்சை அலசுவோம்.
படம் நன்றாய் இருந்தால்..விமரிசனம் நன்றாக எழுதுவோம்.
ஆனால் பீட்சா பற்றியும் விமரிசிக்க ஆசை.
படத்தின் முடிவை வெளியே சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதால்...
ஆரம்பம் பற்றி மட்டும் கூறிவிட்டு..முடிவைக் கூறாவிட்டால் முழு விமரிசனமும் ஆகாது என்பதால் படம் பற்றி விமரிசனம் செய்வதைத் தவிர்த்திருக்கிறேன்.
இதற்கு மேலும் எழுதினால்...நான் முடிவைச் சொல்லிவிடுவேனோ என அஞ்சுகிறேன்.
வெள்ளித்திரையில் மட்டுமே பார்த்து..முடிவை உங்களுக்குள் வைத்துக் கொள்ளுங்கள்.
Monday, September 19, 2011
எங்கேயும் எப்போதும்...என் பார்வையில்..
நமக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும் நிகழ்ச்சியை மற்றவர்களுடன் பகிர்ந்துக் கொள்வதில் இரட்டிப்பு சந்தோஷம் அடையலாம்.
அந்த எண்ணத்தை தோற்றுவித்ததால்..இப்படம் பற்றி எழுதுகிறேன்..
அவ்வப்போது தமிழில் சில நல்லப் படங்கள் வந்துக் கொண்டிருக்கின்றன..அப்படிப்பட்ட லிஸ்டில் இருக்கிறது இந்த படம்.
மேலும் இப்படம் ஒரு செய்தியையும் சொல்கிறது.
சரவணன் அவர்கள் இயக்குநராக அறிமுக மாகியுள்ள இப்படத்தின் கதையையும் அவரே எழுதியுள்ளார்.
தேசிய நெடுஞ்சாலையில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொள்வதால் உண்டாகும் மரணம்..அதனால்அவதிப்படும்..பாதிக்கப்படும் மக்கள்...இதுதான் கதையின் ஒன் லைன்..
அதில் இளம் காதலர்கள்,வெளிநாட்டிலிருந்து பல ஆண்டுகள் கழித்து தன் குடும்பத்தை காணவரும் நபர்..புதிதாக காதல் அரும்பும் கல்லூரி இளசுகள்...என சிறு சிறு நிகழ்வுகள்..காட்சிகள்.
கதிரேசன் என்னும் இளம் தொழிலாளி (ஜெய்)..அவனுடன் மனதில் தோன்றியதை..யதார்த்தத்தை பட்..பட் ..என பேசும் நர்ஸ் மணிமேகலை(அஞ்சலி)திருச்சியில் வாழ்பவர்கள்.திருச்சியை இது வரை படங்களில் வராத கோணங்களில் படமாக்கியுள்ளார் ஆர்.வேல்ராஜ்.இவர்கள் திருச்சியிலிருந்து பேருந்தில் பயணிக்கின்றனர்.
கிராமத்துப் பெண் அமுதா (அனன்யா)..சாஃப்ட்வேர் இஞ்சினீயர் கௌதம் (சர்வா) என மற்ற ஜோடி.நடிப்பில் ஒருவருக்கு ஒருவர் போட்டிப் போட்டு நடிக்கின்றனர்.அப்பாவியாக ஜெய் தூள் கிளப்பினால்..அடாவடியாக அஞ்சலி அருமை.
கிராமத்துப்பெண்ணாக ஏதுமறியாதவளாக அனன்யா அசத்தினால் சாஃப்ட்வேர் இஞ்சினியராக சர்வா அட்டகாசம்.
ஆங்காங்கே இந்த ஜோடிகள் வரும்போது வசனங்களில் நகைச்சுவை எட்டிப் பார்க்கிறது.சிறந்த திரைக்கதை..திறமையான இயக்குநர் ,டெக்னீஷியன்ஸ் இருந்தால் படம் வெற்றி பெரும் என்பதற்கு இப்படம் மற்றொரு உதாரணம்.
இப்படிப்பட்ட படங்களுக்கு தனியாக நகைச்சுவை நடிகரோ..நகைச்சுவை டிராக்கோ தேவையில்லை என்பதை மற்ற இயக்குநர்களுக்கு உணர்த்தியுள்ள படம்.
பேருந்தில் நடைபெறும் நிகழ்வு..பழைய ஃப்ளாஷ்பேக் என மாறி மாறி காட்டினாலும்..சற்றும் குழப்பாத திரைக்கதை அமைப்பு.படத்தின் எடிட்டர் கிஷோர்..அவருக்கு பாராட்டுகள்.
ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ நிறுவனத்துடன்..(Fox star studios) A.R.முருகதாஸ் இணைந்து எடுத்துள்ள படம்..
பேருந்து வெகு வேகமாக சாலை விதிகளை மதிக்காமல் செல்வது..பார்க்கும் போது ஆடியன்சும் அந்த பேருந்தில் பயத்துடன் இருப்பது போன்ற சூழலை உருவாக்குகிறது.இதற்காகவே இயக்குநருக்கும்..சினிமாடொகிராஃபி வேல்ராஜுக்கும் மீண்டும் பாராட்டுகள்.விபத்திற்குப் பின் நடைபெறும் சூழல் அருமை.
கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய படம்.
Saturday, July 10, 2010
மதராசபட்டினம் - ஒரு பார்வை

சாதாரணமாக நான் எல்லா படங்களைப் பார்த்தாலும்..அவற்றை விமரிசித்து பதிவிடுவதில்லை.
சில..அருமையான..அற்புத..சிறந்த படைப்பாய் இருந்தால்..மனதில் மகிழ்ச்சி ஏற்படுவதுடன்..அதை மற்றவர்களுடன் பகிர்ந்துக் கொள்ளவேண்டும் என விழைபவன்.
அப்படி..உங்களுடன் நான் பகிர்ந்துக் கொள்ள நினைத்து எழுதிய கடைசி விமரிசனம் 'அங்காடித் தெரு'
இப்போது..மற்றொரு சந்தர்ப்பம் வந்துள்ளது..ஆம்..நான் பார்த்த 'மதராசபட்டினம்'
ஆரம்பம் டைடானிக்..பின் சில நிகழ்ச்சிகள் லகான் ஆகியவற்றை நினைவூட்டினாலும்..படத்தில் சில குறைகள் இருந்தாலும்...மன நிறைவை ஏற்படுத்திய படம் இது.
லண்டனில் வசிக்கும் மூதாட்டி ஏமி..வாழ்வின் இறுதிக் கட்டத்தில் இருக்கும் போது..இந்திய சுதந்திரத்திற்கு முன் இந்தியாவில் தான் காதலித்த வாலிபன் பரிதியைத் தேடி வருகிறாள்.அவளது பார்வையில் படம் சொல்லப் படுகிறது Flash back உக்தியில்.
தமிழ்த்திரைக்கு இக்கதை புதிதல்ல என்றாலும்..கதைக் களம்...கலைஞர்கள் அனைவரின் உழைப்பு ஆகியவை இப்படத்தை வெற்றிப் படமாக ஆக்குகின்றன.தனியாக காமெடிக் கென தனி டிராக் இல்லாவிடினும்..எல்லாப் பாத்திரங்களும் ஆங்காங்கே பேசும் வசனங்கள் நமக்கு சிரிப்பை வரவழைக்கின்றன.
ஆர்யாவின் நடிப்பு சூப்பர்..பாத்திரத்தில் ஒன்றி விட்டார் எனலாம்..ஆத்திரப்படுவதும்,காதலை கண்களால் சொல்வதும், சண்டைக் காட்சிகளிலும், கிளைமாக்சிலும்....நகைச்சுவை இடங்களிலும் (வாத்தியார் வீட்டுக் கதவைத் தட்டி..நன்றி என்பதற்கு ஆங்கிலத்தில் என்ன எனக் கேட்கும் காட்சியில் ஆகட்டும்..ஏ.பி.சி.டி., கற்றுக் கொள்ளும் போதும் பிரமாதம்) அசத்தல் நடிப்பு.
கதாநாயகி ஏமி...ராவணனையும் பொறாமைப் படவைக்கும் அழகு..படம் பார்ப்பவர்களை எளிதில் கவர்ந்து விடுகிறார்..'மறந்து விட்டியா' என்று கேட்கும் காட்சி ஒன்றே எடுத்துக்காட்டுக்கு போதும்.
படத்தின் வெற்றிக்கு பெரும் பங்கு வகிப்பது ஆர்ட் டைரக்டர் செல்வகுமார்..1947 மதராசபட்டினம்..இவரது உழைப்பை பறைசாற்றுகிறது.கூவம் ஆறு,போட் சவாரி,சென்ட்ரல் ஸ்டேஷன்,கை ரிக்க்ஷா (கலைஞர் நினைவிற்கு வருகிறார்),டிராம்,வால்டேக்ஸ் சாலை,பாரிமுனை,செகண்ட் லைன் பீச்..ஹேட்ஸ் ஆஃப் டு ஹிம்..
ஒளிப்பதிவாளர் நிரவ்ஷாவின் திறமைக்கு கிளைமாக்ஸ் காட்சி ஒன்றே போதும்.இசை ஜி.வி.பிரகாஷ்குமார்...பாடல்கள் கேட்க வைக்கின்றன...தியேட்டரில் இருந்து எழ வைக்கவில்லை.
..எல்லாத் துறையிலும்..அனைத்து நபரும் உழைத்து வந்த படம் இது..இயக்குநர் விஜய் எவ்வளவு பாராட்டினாலும் தகும்..
படத்தில் குறை என்று சொன்னால்தானே விமரிசனம்..
இடைவேளை..கிட்டத்தட்ட 90 மணித்துளிகள் கழித்து வருவதால்...பக்கத்தில் படம் பார்ப்பவர்...இந்த படத்திற்கு இடைவேளையே கிடையாது எனக் குரல் கொடுத்தார்..உண்மை...முழுப் படம் பார்த்த ஆயாசம் இடைவேளையில் தோன்றிவிடுகிறது. அதுவே படம் மெதுவாக நகர்வது போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிடுகிறது.
லகானில் மழையே இல்லாமல் மேகங்கள் திரண்டுவருகையில்...டான்ஸும்..பாட்டும் இருந்தது..இங்கு அப்படி ஒரு நிலையில்லாதபோது..மழையைக் கண்டு அவ்வளவு மகிழ்ச்சி..ஆட்டம்...ம் ஹூம்..ஒட்டவில்லை.
எல்லாவற்றையும் திறமையாய் கையாண்ட செல்வகுமார்..இரு விஷயங்களில் கோட்டை விட்டுள்ளார்..சென்ட்ரல் ஸ்டேசன் முகப்பு கடிகாரம்..அப்போதெல்லாம்..இன்னும் பிரம்மான்டமாய் இருந்தது.பாரிமுனையில் பேருந்தை காட்டும் இவர்..அப்போதெல்லாம் பேருந்து இஞ்சின் வெளியே (இன்றைய லாரிகள் போல் இருக்கும்)இருக்கும்..அதையும் கோட்டைவிட்டு விட்டார் எனலாம்.
இவை சிறுகுறைகளே..மற்றபடி..
படம் அருமை..அனைவரும் பார்க்க வேண்டிய படம்..
தமிழ்த் திரையுலகில் திறமை மிக்க இயக்குநர்கள் உருவாகிவருவது..பெருமகிழ்ச்சியைக் கொடுக்கிறது
Subscribe to:
Posts (Atom)
