Showing posts with label சிவாஜி கணேசன்.. Show all posts
Showing posts with label சிவாஜி கணேசன்.. Show all posts

Friday, December 14, 2012

சிவாஜி ஒரு சகாப்தம் -4



1957ல் வந்த சிவாஜியின் படங்கள்.

மக்களைப் பெற்ற மகராசி...பானுமதி ஜோடி. மருதகாசியின் தேனினும் இனிய பாடல்களுடன்...கிராமத்து விவசாயியாக சிவாஜி வாழ்ந்த படம். மாபெரும் வெற்றி.(மணப்பாற மாடு கட்டி, போறவளே போறவளே போன்ற பாடல்கள்)

வணங்காமுடி..சிவாஜி, சாவித்ரி, தங்கவேலு..நடித்தது.அருமையான கதை அமைப்பு, அளவான நடிப்பு, ஆரவாரமில்லா அருமையான பாடல்கள். (ஓங்காரமாய் விளங்கும் நாதம்...இன்றூம் ஓங்காரமாய் நம்
காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது)

புதையல்...சிவாஜி பத்மினி நடித்த வெற்றி படம். விண்ணோடும் முகிலோடும் என்ற பாடல் இடம்பெற்ற படம்.

மணமகன் தேவை...பானுமதியின் சொந்தபடம்...தோல்வி அடைந்த படம்.

தங்கமலை ரகசியம். சிவாஜி பாதி படத்திற்கு மேல் ..பேசத்தெரியாத...டார்ஜானாக நடித்த படம். கவி சுரதாவின் 'அமுதே பொழியும் நிலவே' ஒலிக்காத இடமே இல்லை அந்த நாட்களில்.ஜமுனா கதாநாயகி.

ராணிலலிதாங்கி, பாக்கியவதி தோல்வி படங்கள்.

அம்பிகாபதி...மீண்டும் சிவாஜி, பானுமதி...வெற்றி படம். மாசிலா நிலவே..பாடல் மறக்கமுடியாதது.இப்படம் தயாரிப்பில் இருந்த போது கலைவாணர் மரணம் அடைந்தார்.அவர் இதில் ஏற்று நடித்த பாத்திரமும்..இறந்து விட்டதாக காட்டப்பட்டது.

தவிர பராசக்தி..தெலுங்கு மொழி படமும் வெளியானது.

1958 படங்கள் அடுத்த பதிவில்.

Sunday, November 25, 2012

சிவாஜி ஒரு சகாப்தம் - 2




1954ல் இவர் நடித்து வெளிவந்த படங்கள்

மனோகரா, இல்லறஜோதி, அந்தநாள், கல்யாணம் பண்னியும் பிரம்மச்சாரி, துளிவிஷம், கூண்டுக்கிளி, தூக்கு தூக்கி, எதிர்பாராதது. இவைத் தவிர..மனோகரா..ஹிந்தி மற்றும் தெலுங்கு.

மனோகரா...மீண்டும் கலைஞர்..கதை வசனம்.மாபெரும் வெற்றி பெற்ற..படம்..பராசக்தி..கோர்ட் காட்சி வசனம் போல்...இப்படத்திலும்...கிளைமாக்ஸில்..கண்ணாம்பா,சிவாஜி வசனங்கள்..தனியாக இசைத்தட்டாகவே வந்து..அனைவராலும் முணுமுணுக்கப்பட்டவை. இப்படத்தில்..கிரிஜா என்னும் நடிகை நடிகர் திலகத்தின் ஜோடி.டி.ஆர்.ராஜகுமாரி,எஸ்.ஏ.நடராஜன்..வில்லி..வில்லன்.

இல்லறஜோதி..கண்ணதாசன்..கதை..வசனம்..படம் எதிர்ப்பார்த்த அளவு பேசப்படவில்லை.

எஸ்.பாலசந்தர் கதை வசனத்தில் வந்த படம்..அந்தநாள்.தயாரிப்பாளர் ஏ.வி.ஏம்.,சிவாஜிக்கு..வில்லத்தனமான கதானாயகன் பாத்திரம்.தேசதுரோகம் செய்யும் அவரை..அவர் மனையாக வரும் பண்டரிபாயே கொலை செய்துவிடுவார்.(பின்னாளில் வந்த கே.பாலசந்தரின்..அச்சமில்லை..அச்சமில்லை.ஞாபகம் வருகிறதா?)அந்தநாளில்..அந்தநாள் தான் பாடல்களே இல்லாமல் வந்த முதல் தமிழ் படம் எனலாம்.

கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி...நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து..பி.ஆர்.பந்துலு எடுத்தபடம்.பத்மினி காதானாயகி.படம் வெளிவந்த போது..எதிர்ப்பார்த்த வெற்றி அடையவில்லை என்றாலும்..இரண்டாவது..மூன்றாவது ஓட்டங்களில்..வசூலை குவித்தது எனலாம்.

துளிவிஷம்...சிவாஜி வில்லன் பாத்திரம்..பாரதிதாசன் கதை என்பதைத் தவிர..சொல்ல ஒன்றுமில்லை.

கூண்டுக்கிளி....தமிழ்த் திரையில்..புரட்சி நடிகரும்..நடிகர் திலகமும் நடித்து வந்த ஒரே படம்.டி.ஆர்.ராமண்ணா தயாரிப்பு..இயக்கம்.பி.எஸ்.சரோஜா நாயகி.சிவாஜிக்கு வில்லன் பாத்திரம்..படம் ஏனோ படு தோல்வி.


எதிர்பாராதது..ஸ்ரீதரின் கதை வசனம்.நாயகனின் நாயகி (பத்மினி)யே..எதிர்பாராமல்..நாயகனுக்கு அம்மா வாகிறார்.(மூன்று முடிச்சு?).படம் வெற்றி. சிற்பி செதுக்காத பொற்சிலையே..என்ற ஏ.எம்.ராஜாவின் பாடல் இன்றும் கேட்க இனிமையானது.

தூக்கு தூக்கி...என்ன சொல்ல முடியும்..வெற்றி..வெற்றி...வெற்றி..தான்.இன்றும் இப்படத்திற்கு ரசிகர்கள் உண்டு.பத்மினி.லலிதா,ராகினி,பாலையா..இப்படி நட்சத்திரக் கூட்டம்.இப்படப் பாடல்களைப் பாட..திருச்சி லோகனாதனைக் கேட்டார்களாம்.அச்சமயத்தில் பீக்கில் இருந்ததால்..அவர் அதிகத் தொகைக் கேட்க தயாரிப்பாளர்கள்..அவ்வளவு முடியாது என உரைக்க ..அப்போ..மதுரைல இருந்து ஒரு
பையன் வந்திக்கான்..அவனை பாடச்சொல்லுங்க..என்றாராம்..லோகநாதன். அந்த பாடகர்தான்..டி.எம்.எஸ்.,

பெண்களை நம்பாதே...ஏறாத மலைமேலே..அபாய அறிவிப்பு, சுந்தரி சௌந்தரி..குரங்கிலிருந்து போன்ற அற்புதமான பாடல்கள் நிறைந்த படம் இது.

இனி 1955ல் வந்த படங்கள்...அடுத்த பதிவில்...


Monday, November 19, 2012

சிவாஜி ஒரு சகாப்தம்..- 1




(2009ல் என் வலைப்பூவில் இத்தொடரை எழுதினேன்.இன்று பல புதியவர்கள் இணையத்தில் எழுத  ஆரம்பித்துவிட்ட நிலையில், இத் தொடரை மீள் பதிவிடுவது அவசியம் எனக் கருதியதால் ...மீள் பதிவிடுகிறேன்)

சிவாஜி கணேசன்...

தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்..

இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான்.

ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது.
படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப்படித்தான் இருப்பார்கள்..என்று நம் கண் முன் நிறுத்திய ஒப்பற்ற கலைஞன்.

ஆம்...அவர் ஒரு பல்கலைக்கழகம்..சகாப்தம்..

இனி வாரம்தோறும் ..1952 முதல் அவர் நடித்த படங்கள் பற்றி..எழுதலாம் என்ற ஆசை.இப்பதிவு..அவர் நடிப்புப் பற்றி மட்டுமே..இதில்..அரசியல் வாழ்க்கை போன்றவற்றை எழுதப்போவதில்லை.

என் நினைவிலிருந்தும்..படித்த சில புத்தகங்களை வைத்தும் இப்பதிவு எழுதப்படுவதால்..இதில்..ஏதேனும் விட்டுப்போயிருந்தாலோ..தவறிருந்தாலோ..அவற்றை சுட்டிக்காட்டினால்..பதிவில் மாற்றம் செய்துவிடுகிறேன்.

இனி..கலையுலக சக்கரவர்த்தியாய் திகழ்ந்தவர் பற்றி..

தமிழ் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த வி.சி.கணேசன் 1952ல் பராசக்தி மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானார்.இவர் ஏற்ற பாத்திரத்தில் ..கே,ஆர்.ராமசாமி நடிக்க வேண்டும்..என்று சம்பந்தப் பட்டவர்கள் கூற.. அப்படத்தின் கதை வசனம் எழுதிய கலைஞர் பிடிவாதமாக..கணேசன் தான் நடிக்க வேண்டும் என்றாராம்.கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் கணேசன் பேசிய முதல் வசனம் 'சக்சஸ்..சக்சஸ்" என்பதுதான்.பின் திரையில் வெற்றியுடன் ஆட்சி புரிந்தார் என்று நாம் அறிவோம்.

அதே வருஷம் வந்த படம் பணம்..என்.எஸ்.கே.,மதுரம்.,பத்மினி., ஆகியோர் நடித்தது.

பராசக்தி 42 வாரங்கள் ஓடி மாபெரும் வெற்றியைப் பெற்றது.

1953ல் சிவாஜி நடித்து வந்த படங்கள்..பூங்கோதை,திரும்பிப்பார்,அன்பு,கண்கள்,மனிதனும் மிருகமும்,பரதேசி(தெலுங்கு),பொம்புடு கொடுகு(தெலுங்கு)

பூங்கோதை
-----------------

தெலுங்கில் பர்தெசி என்றும் தமிழில் பூங்கோதை என்றும் எடுக்கப்பட்ட படம் அஞ்சலி பிக்க்ஷர்ஸ் தயாரிப்பு.திரைக்கதை,இயக்கம் எல்.வி பிரசாத்.இசை ஆதி நாராயண ராவ்.

சிவாஜி யின் முதல் படமாக இது வெளிவந்திருக்கக் கூடும்.ஆனால்..நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் கேட்டுக் கொண்டதன் பேரில்..சற்று தள்ளி ..சில மாதங்கள் இடைவெளியில் வந்த படம் இது. 7-2-53 அன்று இப்படம் வெளியானது.

நடிகர் திலகத்துடன் ஏ.நாகேஸ்வர ராவ், அஞ்சலி தேவி, ரங்காராவ் நடித்திருந்தனர்..

சீகிரி என்னும் மலை வாசஸ்தலத்தில் பூ வியாபாரம் செய்து வருபவ்ள் லட்சுமி
சந்திரன் அங்கு வந்து தங்கும் நேரத்தில் ,அப்பூக்காரியுடன் காதல் ஏற்பட்டு..ஒரு கோயிலில் இருவரும் மணமுடிக்கின்றனர். லட்சுமி கரு தரித்ததும் ..மணமான செய்தியை அறிகிறார் அவர் தந்தை.சந்திரனை அவர் பார்க்க விரும்புகிறார்.ஆனால்..அவனோ தவிர்க்க முடியாத காரணங்களால் அவ்விடத்தை விட்டு ..லட்சுமியிடமும் சொல்லாது சென்று விடுகின்றான்.

இடைபட்ட காலத்தில்..லட்சுமியின் தந்தை ஊராரின் ஏச்சுகளைக் கேட்க முடியாது தற்கொலை செய்து கொள்கிறார்.லட்சுமிக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. இதனிடையே அவளைத் தேடிவரும் சந்திரனிடம் அவள் இறந்து விட்டதாகத் தகவல் சொல்லப் படுகிறது.
சந்திரனின் நண்பரின் மகன் ஆனந்த.நண்பன் இறக்கும் நேரத்தில் ..ஆனந்தை வளர்க்கும் பொறுப்பை சந்திரனிடம் ஒப்படைக்கிறான்.

லட்சுமியின் பெண் வளர்ந்து வளர்ந்து..ஆனந்தை விரும்புகிறாள்.ஆனால் லட்சுமி அதை  விரும்பவில்லை..

சந்திரன் ,லட்சுமியை மீண்டும் சந்தித்தானா..ஆனந்த் லட்சுமியின் மகளை மணந்தானா..என்பதே மீதக்கதை.

திரும்பிப்பார்
------------------



அடுத்து.திரும்பிப்பார்..

வெளியான தேதி 10-7-1953


இதிலும் கலைஞர் வசனம்..

மாடெர்ன் தியேட்டர்ஸ் தயாரிக்க டி ஆர் சுந்தரம் இயக்கம்.
ஜி ராமநாதன் இசையில்  எஸ்.சி.கிருஷ்ணன் பாடிய "கலப்படம்..கலப்படம்" என்ற பாடல் பிரபலம்

பண்டரிபாய் நடித்திருந்தார்...படம் வெற்றி..இதில் இவர் ஏற்று நடித்த பாத்திரம் பெயர் பரந்தாமன்..
திரும்பிப்பார் படத்தில் செக்ஸ் ஒன்றே வாழ்க்கையின் பரமானந்தம் என நினைத்து, யாராக இருந்தாலும் பெண்டாள துடிக்கிற மோசமான வேடம் பாத்திரம்.. பராசக்தி குணசேகரனுக்கும் அடுத்த ஆண்டு வந்த திரும்பிப்பார் பரமானந்தத்திற்கும் இடையேதான் நடிப்பில் எவ்வளவு வேறுபாடு..
.படம்..மாபெரும் வெற்றி படமாக அமைந்தது எனலாம்.

1954..அடுத்த பதிவில்...