வைகோ சீமானை சந்தித்து பேசிய பின்..பின் அ.தி.மு.க., கூட்டணியில் இணைவது கிட்டத்தட்ட முடிவாகி விட்ட ஒன்று.
சீமானை..சிறைக்கு அனுப்பியது..கலைஞராகவே இருக்கட்டும்..
ஆனால்..கலைஞர் ஆட்சிப் பொறுப்பில் இருந்ததால் ஈழத் தமிழர் பிரச்னையில்..காங்கிரஸ் செய்ததற்கெல்லாம் தலையாட்டிக் கொண்டு இருந்ததாகவே இருக்கட்டும்..அதிக பட்சம் நான்கு மணி நேரம் உண்ணாவிரதம் மட்டுமே அவரால் இருக்க முடிந்ததாகவே இருக்கட்டும்..சீமான் சற்று எண்ணிப் பார்க்கட்டும் ஜெ ஆட்சியில் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார் என.
தேவையில்லாமல் பொடா சட்டத்தில் வைகோ வை சிறையில் அடைத்தவர் அவர்..
கலைஞர் இடமாவது சற்று உண்மையான வருத்ததை எதிர்பார்க்கலாம்.ஜெ..யிடம்..
எம்.ஜி.ஆரை.யே செயல்பட முடியா முதல்வர்..என்னை முதல்வராக ஆக்குங்கள் என ராஜீவிடம் கூறியவர்.
ஜானகி மீது இவர் சொன்ன குறையைச் சொல்லக் கூட எனக்கு மனமில்லை.
பதவிக்காக எதையும் செய்யக்கூடியவர் அவர்.
ஜெ இப்போது பதவி வெறியில் உள்ளார்..எப்பாடு பட்டாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என எண்ணுகிறார்.
ராஜா விவகாரத்தில்..காங்கிரஸ் அரசுக்கு நிபந்தனை அற்ற ஆதரவு அளிப்பதாகச் சொன்னதை சீமான் மறந்துவிடக் கூடாது.
நாளைக்கே..காங்கிரஸ் அ.தி.மு.க., கூட்டணி ஏற்பட்டால்..தன்னிடம் இருக்கும் அனைவரையும் கழட்டிவிடவும் அவர் தயாராய் இருப்பார்.
சீமான் மிகவும் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டிய தருணம்..
அரசியலுக்கு வந்து சட்டசபைக்குச் செல்ல சீமான் ஆசைப்படுவது தவறல்ல..அந்த ஆசையை..தனக்கு சாதகமாக ஆக்கிக் கொள்ள நினைக்கும் சக்திக்கு இரையாகி விடக் கூடாது.
சீமான் ஒரு முறைக்கு பத்து முறை யோசித்து முடிவுக்கு வரட்டும்.
பதவிக்காக காவு கொடுக்க பலிகடா தேடுபவர்களிடம் மாட்டிக் கொள்ள வேண்டாம் என்றே தோன்றுகிறது.
டிஸ்கி- ஆடு கசாப்புக் கடைக்காரரைத்தான் நம்புமாம்..