Showing posts with label நையாண்டி -நகைச்சுவை. Show all posts
Showing posts with label நையாண்டி -நகைச்சுவை. Show all posts

Friday, August 12, 2011

இவர் யார்...வாய் விட்டு சிரிங்க..




1) சம்பந்தா சம்பந்தம் இல்லாம உளரிக்கிட்டு இருக்காரே! அவர் பெயர் என்ன
  கிருஷ்ணா

2)எது எடுத்தெல்லாம் எனக்குத் தெரியாது..என்கிறாரே! அவர் பெயர் என்ன
 மன்மோகன்

3)எதுக்கெடுத்தாலும் பழங்கதையையே பேசிக்கிட்டு இருக்காரே! அவர் பெயர் என்ன
  கருணாநிதி

4)பழிவாங்கும் உணர்ச்சியோட அலைஞ்சுக்கிட்டு இருக்காங்களே..அவங்க பெயர்
 ஜெயலலிதா

5)என்ன நடந்தாலும் வாயை மூடிக்கிட்டு..தனக்கும்..அதுக்கும் சம்பந்தம் இல்லாதது போல இருக்காரே அவர் பெயர்
 சிதம்பரம்

6)தன்னைத் தவிர வேறு யாரையும் பேச விடாத இந்தப் பெண்மணி யார்
 சுஷ்மா

7) கையிலே புத்தகத்தை வைத்துக்கிட்டு பைத்தியம் போல இருக்காரே இவர் யார்?
  தமிழக பள்ளி மாணவன்

8)வீட்லே அடுப்பு எரியலே..செலவு பண்ணி கோவிலுக்குப் போய் அவருக்காக மொட்டை போடும் இவர் யார்
  அந்த நடிகரோட ரசிகன்

8) கோமாளி போல இங்கேயும் அங்கேயும் தாவிவிட்டு இப்போ நடுவே அமர்ந்திருக்காரே..இவர் பெயர்
   ராமதாஸ்

9)தேளு..பாம்பு..என உளறிக்கிட்டு இருக்காரே..இவர் யார்..
  தேவ பிரசன்னம் பார்க்கிறவர்

10)எல்லாரும் ஏமாத்தறாங்கன்னு சொல்லிக்கிட்டு இருக்காரே! இவர் யார்
  இலங்கைத் தமிழர்