பேரன்புமிக்க ஐயா,
வணக்கம்..
நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் ஆன்மா சென்ற 8ஆம் நாள்..ஆரணியில் நடந்த உங்கள் மகன் திருமணத்தையும்..பின்னர் சென்னையில் அன்று மாலை நடந்த ரிசப்ஷன் விழாவிலுமே இருந்திருக்கும்..
நீங்கள் இல்லாத வெற்றிடத்தை நினைத்து..உங்களது மனைவியும்..உங்கள் பிள்ளைகளும் வருத்தப்பட்டிருந்தாலும்..திருமணத்தில் அவர்களது ஒற்றுமையையும்..நடக்கும் நிகழ்ச்சிகளையும் கண்டு உங்களது மனம் குளிர்ந்திருக்கும்..
சரி விஷயத்திற்கு வருகிறேன்..
அடுத்து லைன் கிளியர் ஆகி உள்ள நிலையில்..உங்கள் அன்பு மகன் கார்க்கி திருமணத்திற்குக் காத்திருக்கிறான்..
கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற் கில்லை யிடம்
என்ற வள்ளுவனின் கூற்றுக் கிணங்க..தான் விரும்பும் பெண்ணை எதிர் நோக்கி..தன் கண்ணின் கருமணியில் உள்ள பாவையை..தன் வாழ்வில் வரப்போகும் பாவைக்கு இடமளித்து விட்டு நீ போய் விடு என்று சொல்லும் நிலையில் நீண்ட நாட்களாக உள்ளார்..
தெய்வமாகிவிட்ட நீங்கள் உடனே முனைந்து..சம்பந்தபட்டவர்கள் நினைவில் புகுந்து..கார்க்கியின் ஏக்கத்தைத் தீர்க்க கேட்டுக் கொள்கிறேன்..
நன்றி
அன்புடன்
T.V.ராதாகிருஷ்ணன்