Showing posts with label மகளிர் தினம் - TVR. Show all posts
Showing posts with label மகளிர் தினம் - TVR. Show all posts

Thursday, March 7, 2013

மங்கையராய் பிறந்திடவே.....

           



பெண் குழந்தை - சாதாரணமாக மகனைவிட, மகளுக்கே தந்தையிடம் அதிகம் பாசம் இருக்கும்.சற்றே வளர்ந்ததும்..நாம் தாயை இழந்திருப்போம்...மனைவிக்கு வயதாயிருக்கும்...அப்போது..'தாயினும் சாலப் பரிந்து:' நம் மீது பரிவு காட்டுபவள் மகளே..

மனைவி - மனைவி அமைவதெல்லாம்..இறைவன் கொடுத்த வரம்..என்பார்கள்.உண்மைதான்...இல்லாள் சரியாக அமைந்தால்..அவன் இல்லானாக ஆகவே மாட்டான்.மனைவி சரியாக அமைய கொடுப்பினை வேண்டும்.ஒருவன் மனைவியை நேசிக்கிறது...பெரிசல்ல..அதை வெளிப்படுத்தணும்.
 ஒருத்தனோட வாழ்க்கையில் முதல் பாதிலே துணையாக வருபவர் தாய்..பின் பாதியிலே வருபவர் மனைவி.தாய் மறைந்தும் தாரம் இருப்பதால் தான்..அந்த இழப்பை நம்மால் சமாளித்துக் கொள்ள முடிகிறது.ஆனா..தாரத்தையும் இழந்தபின் அவன் கிட்டத்தட்ட அனாதை ஆகிறான்.அப்படிப்பட்ட உறவு மனைவி.

தாய் - இவரைப் பற்றி என்னத்தை சொல்ல...இறை மறுப்பு கொள்கை உள்ளவனும்..காணும் கடவுள் இவள்தான்.தனக்கென வாழாது..தன் குழந்தைகளுக்காக, கணவனுக்காக வாழும் தியாக தீபம் இவள்.

சாதாரணமாக..ஒரு பெண் வாழ்நாளில் ..எல்லா நாட்களிலும்..யாரேனும் ஆணைச் சார்ந்திருக்க வேண்டும் என்று கூறுவர்..

ஆனால்..உண்மையில்..ஒரு ஆண்மகன் தான்...பெண்ணை சார்ந்திருக்கிறான்..இதுதான் யதார்த்தம்..

மகளிர் தினத்தில்..அனைத்து மகளிருக்கும் என் அன்பான வாழ்த்துகள்.