Showing posts with label மு. க. Show all posts
Showing posts with label மு. க. Show all posts

Saturday, April 3, 2010

அழகிரி தி.மு.க., தலைவர்...?

எம்.ஜி.ஆர்., உருவாக்கிய அ.தி.மு.க., அவர் இருந்தவரை..ஒரு அசைக்க முடியாத சக்தியாய் இருந்தது..

படுத்துக்கொண்டே ஜெயிப்பேன்..என்று சொன்ன கர்மவீரரைக் கூடத் தோற்கடித்த மக்கள்...படுக்கையில் கிடந்த...தொகுதிப் பக்கம் பிரசாரத்திற்கு ஒரு முறைக் கூட வராத இருந்த புரட்சித் தலைவரை வெற்றி பெறச் செய்தனர்..ஏனெனில்..அவரிடம் அகங்காரமோ..தலைக்கனமோ..அளவிற்கு அதிகமான தன்னம்பிக்கையோ இருந்ததில்லை.

அப்படி அவரால் கட்டிக் காக்கப்பட்ட கழகம்..அவர் மறைவிற்குப் பின் உடைந்தது..இரு அணிகளாகப் பிரிந்தது.எம்.ஜி.ஆர்., மனைவியின் பெயரில் ஒரு அணியும்..ஜெயலலிதாவின் தலைமையில் ஒரு அணியும் உருவானது.. ஒற்றுமையின்மையாலும்..பதவி ஆசையாலும் பிரிந்த இக்கழகத்தை...புரட்சித்தலைவரால் தொடங்கப்பட்டிருந்தாலும்..அதை எண்ணாது மக்கள் புறக்கணித்தனர்.

மீண்டும்..அது ஒன்றிணைந்ததுமே..மக்களால் அங்கீகரிக்கப்பட்டது.

இது..மக்கள் மதிப்பு வைத்தவரால் ஆரம்பிக்கப்பட்ட தாயினும்..ஒற்றுமையில்லையேல் தூக்கி எறியப்படுவர் என்பதை உணர்த்தியது.

இந்த இடுகையை ஏன் இப்போது இடுகிறேன் என்பதற்கான முக்கியக் காரணம் உள்ளது.

சில கருத்து வேறுபாடுகளால்..தி.க., விலிருந்து வெளியேறி தி.மு.க., வை அண்ணா..தன் ஆதரவாளர்களுடன் ஆரம்பித்த போது..அது ஆலமரமாய் தழைத்து..தமிழக அரசியலில் பெரும் இடத்தைப் பிடிக்கும் என்று கூட அரசியல் புரிந்தோர் ஆருடம் கூறியிருக்க முடியாது.

தி.மு.க., பதவிக்கு வந்து..பின் அண்ணா மறைவிற்குப் பின் முதல் கட்டத் தலைவர்களிடையே..சிற்சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்..அவர்கள் ஒற்றுமையாய் இருந்ததால்தான்..கலைஞரால் கழகத்தை கட்டிக்காக்க முடிந்தது.எம்.ஜி.ஆர்., வெளியேற்றத்தை மக்கள் விரும்பாததால்...தி.மு.க., ஆட்சி சில காலம் தமிழகத்தில் இல்லாமல் போனது.அவர் மறைவிற்கு பின்..நான் மேலே கூறிய படிக்கு அ.தி.மு.க., உடைய கலைஞர் மீண்டும் ஆட்சியைப் பிடித்தார்.

ஆமாம்..இதெல்லாம்..தெரிந்த விஷயம்தானே..இப்போது என்ன என்கிறீர்களா?

தி.மு.க., இப்போது அப்படிப்பட்ட நிலையில் உள்ளது..சமீபத்தில் அழகிரி பத்திரைகையாளர்களுக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில்..'கலைஞரை மட்டுமே தன்னால் தலைவராக ஏற்றுக் கொள்ள முடியும் 'என்றும்..கழகத் தலைவர் பதவிக்கு போட்டி வந்தால்..தேர்தலில் நின்று வெல்வேன் என்றும் கூறியுள்ளார்.

'ஒன்று பட்டால் உண்டு வாழ்வு..நம்மில்.ஒற்றுமை நீங்கின்...'

மீனுக்காக காத்திருக்கும் கொக்குகள் நம்மை விழுங்க காத்துக் கொண்டிருக்கின்றன..

தி.மு.க., மேல் மட்டக் குழு..இப் பிரச்னைக்கு உடனே தீர்வு காண வேண்டும்...

இன்னும் தேர்தல் வர ஒரு வருடமே உள்ள நிலையிலும்..ராகுல் சமீபத்தில்..'அ.தி.மு.க., உடன் கூட்டா' என்ற கேள்விக்கு..வெறும் சிரிப்பை பதிலாகக் கொடுத்ததையெல்லாம் பார்த்து..சிந்தித்து..அனுபவசாலி கலைஞர் உடனே செயல்படுவார் என்றே தோன்றுகிறது.

(அழகிரி..தி.மு.க., தலைவராகவும்..ஸ்டாலின்..முதல்வராகவும்..கனிமொழி மத்திய அமைச்சராகவும் ஆக வாய்ப்பு உள்ளதாக பட்சி சொல்கிறது)