Showing posts with label -கவிதை. Show all posts
Showing posts with label -கவிதை. Show all posts

Saturday, March 3, 2018

குருதிப்புலன்

மனப் புண்ணை
நினைவுகள் எனும்
காக்கைகள்
கொத்திக்
கொத்திக்
குருதியை
கொட்டவைத்தன

Tuesday, November 30, 2010

சோம்னாத் கோயில் (கவிதை)


சோம்னாத் கோயிலை
கஜினி
சூறையாடினான்
படிக்கும்
மகள் கேட்டாள்
கோவிலை சூறையாடுவது
நடக்குமா
அலைவரிசையில் நடக்கையில்
இது நடக்காதா
என்றிட்டான் மகன்

Monday, November 15, 2010

ஊழல் (கவிதை)


                                                  (புகைப்படம் நன்றி இணையம் )

அலறினேன்



பிதற்றினேன்



தவமிருந்தேன்



இறைவன் தோன்றி



வரமளித்தேன் கேள் என்றான்



ஊழலற்ற சமுதாயம் என்றிட்டேன்



அப்படியே ஆக



எவ்வளவு வெட்டுவாய்



எனக்கென்றிட்டான்

Sunday, July 4, 2010

கொஞ்சி விளையாடும் தமிழ் - 18

பாரதியைப் புகழ்ந்து பலர் பாடியுள்ளனர்..பாரதியின் பால் கொண்ட ..பக்தியால்..பெயர் மாறி பாரதிதாசனாக ஆன கனகசுப்பு ரத்தினம்..பாரதியை 'பைந்தமிழ்ப் பாகன்,செந்தமிழ்த் தேனீ,சிந்துக்குத் தந்தை,கவிக்குயில், என்றெல்லாம் பாடிப் புகழ்ந்துள்ளார்.

பின்னர் பல ஆண்டுகள் கழிந்து...புதுக்கவிதையினால் வைரமுத்து அந்த மீசைக் கவிஞனைப் பாடியுள்ளார்.

ஒரு சிறிய வீரியம் மிக்க விதை நிலத்தில் முளைக்கையில் வெற்றி கொள்கிறது.ஒரு சிறிய விதைக்கான ஆற்றல் இப்படி இயலும் எனில் பாரதியை ஈன்ற அன்னையின் கருப்பை நெருப்பைச் சுமப்பதும், ஒரு தீக்குச்சி எரிமலையைச் சுட்டெரிப்பதும் இயலும்.இதையே வைரமுத்து...

அது எப்படி?
எட்டயபுரத்தில் மட்டும்
ஒருத்திக்கு
நெருப்பைச் சுமந்த் கருப்பை?
அது கூடச் சாத்தியம்தான்
ஆனால்- இது எப்படி
ஏகாதிபத்திய எரிமலையை
ஒரு
தீக்குச்சி சுட்டதே
இது எப்படி?

என்கிறார்...

தவிர்த்து பாரதியின் எளிமை, இனிமையை.. தமிழன்னை விரும்பினாள்..ஆகவேதான் அவனின் 'கிழிசல் கோட்டில் தஞ்சம் புகுந்தாளாம் ..

உன் பேனா
தமிழ்த் தாயின் கூந்தலுக்குச்
சிக்கெடுத்தது!
கிழிசல் கோட்டு
கவிதா தேவிக்குப்
பீதாம்பர மானது

என்கிறார்.

(கவியரசு வைரமுத்துவின் 'நிலத்தை ஜெயித்த விதை' என்னும் கவிதையில் இடம் பெற்றுள்ள வைர வரிகள் மேலே குறிப்பிட்டுள்ளவை)