ராணுவத்திற்கு ஃபோஃபர்ஸ் பீரங்கி வாங்கியதில் ஊழல் நடந்ததை நம் பத்திரிகைகள் வெளிக் கொணர்ந்தது நாம் அறிந்ததே.இதில் மகாத்மா காந்தி அவர்கள் பெயரும் இடம் பெற்று அவர் அடுத்து நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்ததும் நமக்குத் தெரியும்...
என்ன தலையைப் பிய்த்துக் கொள்ளத் தோன்றுகிறதா..?
தமிழக காங்கிரஸின் கீழே கண்ட அறிக்கை ஒன்று பார்த்ததால் வந்த வினை...
இந்திரா காந்தியை சோனியா காந்தியாக ஆக்கியவர்கள்..இனி வரும் காலங்களில் ராஜீவ் காந்தியை..மகாத்மா காந்தியாக ஆக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்!!!!
ஆமாம்...இவர்கள் டைம் பத்திரிகையை டயம்ஸ் ஆஃப் இந்தியா என எண்ணியவர்கள் தானே!!
