Showing posts with label -புனைவு. Show all posts
Showing posts with label -புனைவு. Show all posts

Saturday, October 13, 2012

அபி அப்பாவும்..காவல்துறையும்...




அபி அப்பா..சென்னையில் அவரது செல் ஃபோனை தவறவிட்டதாகவும்..அதை காவல்துறையினரிடம் புகார் அளித்ததாகவும்..காவல்துறை அக்கறையுடன் கண்டுபிடித்துக் கொடுத்ததாக ஒரு பதிவிட்டு..அவர்களை நண்பர்கள்தான் என வாழ்த்தியிருந்தார்.

காவல்துறை இன்று முதல்வர் ஜெ யிடம் உள்ளது.அத்துறை சிறப்பாக செயல்பட்டதாக அபியப்பா எழுதியிருந்தது அதிர்ச்சியை அளிக்கிறது.

அபி அப்பா..ஒரு திமுக என்பது காவல்துறைக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.அப்படி தெரிந்திருந்தால்..அவர் செல்ஃபோனும் கிடைத்திருக்காது...அவரையும் ஏதேனும் அபகரிப்பு வழக்கில் குண்டர் சட்டத்தில் (அபி அப்பா ஒல்லியாக இருந்தாலும்) கைது செய்திருப்பார்கள்.

ஆகவே..அவர் அவசரப்பட்டு காவல்துறையை அணுகியது அவரது அசட்டுத் துணிச்சலையேக் காட்டுகிறது என்கிறார் ஒரு திமுக முக்கியப் புள்ளி.

தவிர்த்து..காவல்துறையை அபி அப்பா பாராட்டிவிட்டதால் கலைஞர் சற்றே வருத்தத்தில் உள்ளதாக நம்பத் தகுந்த வட்டார செய்தி ஒன்று தெரிவிக்கிறது.