Saturday, November 8, 2014

குறுந்தொகை-149



தலைவி கூற்று
(தோழி தலைவனுடன் போகவேண்டுமென்று கூறத் தலைவி அவனுடன் செல்லுதலால் நாண் அகலுமென்று இரங்கிக் கூறியது.)

பாலைத் திணை- பாடலாசிரியர் வெள்ளி வீதியார்

இனி பாடல்-
 
அளிதோ தானே நாணே நம்மொடு
   
நனிநீ டுழந்தன்று மன்னே யினியே
   
வான்பூங் கரும்பி னோங்குமணற் சிறுசிறை
   
தீம்புன னெரிதர வீய்ந்துக் காஅங்குத்

தாங்கு மளவைத் தாங்கிக்
   
காம நெரிதரக் கைந்நில் லாதே.


                     -வெள்ளி வீதியார்

     உரை-

(தோழி) நம்மோடு மிக நெடுங்காலம் உடனிருந்து வருந்தியது, இனிமேல் வெள்ளிய பூவையுடைய கரும்பினது உயர்ந்த மணலையுடைய சிறிய கரை ,இனிய நீர் நெருங்கி அடித்தலால் அழிந்து வீழ்ந்தாற் போல தடுக்கும் வரையில் தடுத்து காமம் மேன்மேலும் நெருக்க என்பால் நில்லாது போய்விடும்.அஃது இரங்கத்தக்கதாகும்

No comments: