Thursday, November 20, 2014

குறுந்தொகை-159


தோழி கூற்று
(தலைவன் கேட்கும் அருகிலேயே நின்றானாக, “தலைவியின் துயரத்தை உணர்ந்து இரங்காதாரை யுடையதாயிற்று இவ்வூர்” என்று கூறும் வாயிலாகத் தலைவியை இற்செறிக்கக் கருதி யிருப்பதைத் தோழி அவனுக்குப் புலப்படுத்தியது.)

குறிஞ்சித் திணை- பாடலாசிரியர் வடம வண்ணக்கன் பேரிசாத்தன்.

இனி பாடல்-

தழையணி யல்கு றாங்கல் செல்லா
   
நுழைசிறு நுசுப்பிற் கெவ்வ மாக
   
அம்மெல் லாக நிறைய வீங்கிக்
   
கொம்மை வரிமுலை செப்புட னெதிரின

யாங்கா குவள்கொல் பூங்குழை யென்னும்
   
அவல நெஞ்சமொ டுசாவாக்
   
கவலை மாக்கட்டிப் பேதை யூரே.


                -வடம வண்ணக்கன் பேரிசாத்தன்.
உரை-.

 இந்தப் பேதைமையையுடைய ஊர்,  தழையை அணிந்த பெண்மையை,  பொறுத்தலாற்றாத,  நுணுகிய சிறிய இடைக்கு,  துன்பம் உண்டாகும்படி,  அழகிய மெல்லிய மார்பகம் நிறையப் பருத்து, பெருமையையும் தேமலையும் உடைய நகில்கள்,  செப்போடு மாறுபட்டன; பூத் தொழிலையுடைய குண்டலத்தை யணிந்த தலைவி,  என்ன துன்பத்தையுடையள் ஆவளோ,   என்று எண்ணும் கவலையையுடைய நெஞ்சத்தோடு,  ஏனென்று கேளாத,  கவலையையுடைய மாக்களை உடையது.


    (கருத்து) என்தாய் முதலியோர் என் நிலையை உணர்ந்திலர்.

No comments: