Monday, May 22, 2017

கிறுக்கல் கவிதைகள்

1)நான் கோடு போட்டா
ரோடு போடுவாள்
நான் புள்ளி வைச்சா
கோலம் போடுவாள்
நான் காதலிச்சேன் - அவள்
திருமணம் செய்துச் சென்றாள்

2)இரயில் நிலையத்தில்
வரவேற்க வந்தவரின் 
பார்வையோ 
என் கை மஞ்சள் பையில்

3)பிஞ்சுக் கைகளில்
பிடிக்கு அடங்கா மூங்கில்
பஞ்சு பாதங்களை
பதம் பார்க்கும் கயிறு
கழைக்கூத்தாடி சிறுமி

4)அவசர அவசரமாக 
செல்லும் போதும்
எதிரில் வருபவரை
குசலம் விசாரிக்கும்
எறும்பு வரிசை

5)விடியலின் 
பனித்துளிகள்
போதையில்
மலர்கள்

6)உயிர்மெய் எழுத்தென்ன
கேட்டதும் சொன்னது
காகம்

No comments: