Tuesday, May 30, 2017

நீயும் நானும் ஒன்னு - (சிறுகதை)


--------------------------------------
"முனுசாமி...முனுசாமி" என்று தனது குடிசைக்கு முன்னால் நின்று யாரோ அழைப்பதைக் கேட்டு வெளியே வந்தார் எழுபது வயது ஏழுமலை
தனது, வலது கையை, கண்களுக்கு மேல் வைத்துக் கொண்டு"யாரு?" என்றார்
"நான் மாட்டுத் தரகன் பொன்னுசாமி.உங்க வீட்டு மாடு பால் வத்திப் போச்சு..சரியா இப்போ பராமரிக்க முடியல.அதனால... அடிமாட்டுக்குன்னாக் கூடப் பரவாயில்லை, எதாவது கிராக்கியைப் பாரு " அப்படின்னு முனுசாமி சொன்னான்..ஒரு கிராக்கி மாட்டியிருக்கு..அதான்..மாட்டை ஓட்டிக்கிட்டு போகலாம்னு வந்தேன்" என்றான் வந்தவன்
எழுமலை..அவர்களையேப் பார்த்துக் கொண்டிருந்த மாட்டைப் பார்த்தார்
அது, பல ஆண்டுகளுக்கு முன்னால், மாட்டுச் ச்ந்தையில் வாங்கிய மாடு.அந்த மாடு வாங்கியதும்..தனது நிலை சற்று உயர்ந்ததால் அம்மாட்டிற்கு லட்சுமி எனப் பெயரிட்டார்.தினமும் வஞ்சகமில்லாமல் பாலைக்கொடுத்தது. .தனது மகனுக்கும், மகளுக்கும்அவர்கள வளரக் கொடுத்த பாலைத் த்விர மீதத்தை வெளியே விற்றார்..அது வந்த பிறகு ராஜபோக வாழ்க்கை என சொல்ல முடியாவிட்டாலும்..வசதியான வாழ்க்கை வாழ்ந்தார் ஏழுமலை
தன் மகளுக்கு திருமணம் முடித்தார்.முனுசாமிக்கும் செங்கமலத்தை மனைவியாக்கினார்.
லட்சுமி, ஈன்ற கன்றுகளாலும் பயன் அடைந்தார்
.
கிட்டத்தட்ட அந்த வீடே அந்த லட்சுமியால் லட்சுமிகடாட்சத்துடன் இருந்தது
இந்நிலையில்..
எழுமலைக்கும் வயது ஆகிவிட்டபடியால் எந்த வேலையையும் செய்ய முடியவில்லை.
லட்சுமிக்கும் வயதாகியதால் பால் முற்றும் வற்றிவிட்டது.அக்குடும்பத்திற்கு அதனால் இப்போது பயனில்லை
வறுமை வாட்ட...முனுசாமியும், செங்கமலமும் கூலி வேலைக்குப் போகத் தொடங்கினர்
முனுசாமியும், தன் தந்தையை கவனிக்க ஆளில்லாததால் முதியோர் இல்லத்தில் சேர்க்க எண்ணினான்.லட்சுமியையு ம் அடிமாடாக விற்க த்யாரானான்
பொன்னுசாமி சொன்னவற்றைக் கேட்ட ஏழுமலை. வாசலில் கட்டியிருந்த லட்சுமியைப் பார்த்தார்
தன்னை வாங்கத்தான் பொன்னுசாமி வந்திருக்கிறான் என லட்சுமிக்கும் தெரிந்தது.இதுநாள் வரை தன்னால் முடிந்ததைக் கொடுத்துவிட்டோம்.இனி, தன் இறைச்சியை உண்டு மக்கள் பசியாற்ற சந்தர்ப்பம் கிடைத்ததை எண்ணி சற்று மகிழ்ந்தாலும்..அதன் கண்களில் கண்ணீர்
அதைப் பார்த்த ஏழுமலைக்கு, "இவ்வளவு நாள் உன் குடும்பத்துக்கு உழைத்த என்னை..இப்படி அனுப்புகிறாயே!" என்று லட்சுமி சொல்வது போலத் தோன்றியது
முனுசாமிவந்துவிட்டான்
பொன்னுசாமியைப் பார்த்து, "வாங்க..நீங்க இப்பவே மாட்டை ஓட்டிக் கிட்டுப் போகலாம்" என்றான்.
பின் , அவரிடமிருந்து பணத்தை வாங்கி்எண்ணினான்
அப்பாவைப் பார்த்து, "அப்பா..உன்னை முதியோர் இல்லத்தில் சேர்க்க ஏற்பாடு பண்ணிட்டேன்..நாளைக்குப் போகலாம்" என்றான்
இப்போது லட்சுமியை, ஏழுமலைப் பார்த்தார்..
அது, இப்போதுஅவரது நிலையை எண்ணி கண்ணீர் விடுவதைப் போல இருந்தது

No comments: