Showing posts with label அனுபவம் நிகழ்வு. Show all posts
Showing posts with label அனுபவம் நிகழ்வு. Show all posts

Saturday, January 17, 2009

2.3 லட்சம் இலங்கை தமிழர்கள் தவிப்பு..

இலங்கை ராணுவம் முல்லைத்தீவு பகுதியில் சண்டை இட்டு வருவதால் 2.3 லட்சம் தமிழர்கள் நிலைமை மிகவும் மோசமாகியுள்ளது.அவர்கள் காடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல முடியவில்லை.

முல்லைத்தீவு பகுதியில்..முப்படை தாக்குதல் நடந்து வருகிறது.போர் விமானங்கள் வேறு சரமாரியாக குண்டுகள் வீசி வருகின்றன.இந்த நிலையில்..முல்லைத்தீவு பகுதியில் சிக்கியுள்ள தமிழர்கள்..உயிரை கையில் பிடித்தபடி காட்டுப்பகுதியில் குடும்பத்துடன் தஞ்சம் புகுந்துள்ளனர்.பசியும், பட்டினியுமாக குழந்தைகள் திண்டாடிக் கொண்டிருக்கின்றன.அவர்களின் நிலை மோசமாக இருப்பதாக ஐ.நா.சபை தன் கவலையைத் தெரிவித்துள்ளது.அவர்களுக்கு ஐ.நா.,சபை, மற்றும் உதவி நிறுவனங்களால் உணவு கிடைத்தாலும்..இருப்பிடம்,குடிநீர்,துப்புரவு,சுகாதார வசதிகள் இல்லை.

இதனிடையே...இலங்கை சென்ற வெளியுறவு செயலர் சிவசங்கர் மேனன், ராஜபக்சே வை சந்தித்து..இலங்கை தமிழர் பிரச்னை குறித்து பேசினார்.தவிர..இருவரும் பல்வேறு பிரச்னைகள் குறித்து.(??!!)
பேசியதாகவும் தெரிகிறது.

திருமாவளவனின் உண்ணா நிலை 4 வது நாளாக தொடர்கிறது.

கலைஞரோ..இன்னும் சிலநாள் பொறுத்திருந்து பார்ப்போம் என்கிறார். அவர் மனோகராவில் எழுதிய 'பொறுத்தது போதும்..பொங்கி எழு' என்ற வசனத்தை அவருக்கு ஞாபகமூட்டுகிறோம்.

Friday, January 16, 2009

தேங்காய்...மாங்காய்...பட்டாணி...சுண்டல்... (17-1-09)

1.பொங்கல் நாளில் சூரியனை..வாழை.கரும்பு,மஞ்சள்.இஞ்சி..ஆகியவற்றை வைத்து வழிபடுகிறோம்.அதன் காரணம் தெரியுமா?

வாழை-வாழையடி வாழையாக வாழை வளர்வது போல..நமது சமுதாயமும்,நமது குடும்பமும்..வாழ வேண்டும் என்ற கருத்தில் வாழை பொங்கல் வழிபாட்டில் இடம் பெறுகிறது.

கரும்பு-ஓங்கி உயர்ந்து வளரும் இயல்புடையது.அதுபோல நம் வாழ்க்கையும் ஓங்கி உயர்ந்து, வளர்ச்சி பெற வேண்டும் என்ற கருத்தில் பொங்கல் வழிபாட்டில் கரும்பு இடம் பெறுகிறது

மஞ்சள்,இஞ்சி-பூமிக்கடியில் ஆழமாக பதிந்து வளரும் இயல்புடையது.அதுபோல உயர்ந்த,புனிதமான கருத்துக்கள் நம் வாழ்க்கையை மங்களகரமாக நெறிப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இவை இடம் பெறுகின்றன.

2.எல்லாம் நானே..என்ற அகந்தை வேண்டாம்..யாரோ போட்ட சாலையில் தான் நாம் வாகனங்களை ஓட்டிச் செல்கிறோம், யாரோ கூலியாட்கள் கட்டிய வீட்டில்தான் நாம் வசதியாக வாழ்கிறோம்,யாரோ நெய்த ஆடையைத்தான் நாம் கம்பீரமாக அணிந்துக் கொள்கிறோம்,யாரோ விளைவித்த தானியங்களைத்தான் உண்ணுகிறோம்.சீப்பில் இருந்து செருப்பு வரை நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருள்களும் யாரோ செய்ததுதான். அதை ஞாபகத்தில் வையுங்கள்.

3.உலகத்தில் எந்த மூளையில் இருந்து பார்த்தாலும் சில விஷயங்கள் அழகாய்த்தான் இருக்கும்.சூரியன்,சந்திரன்,குழந்தைகள்,புன்னகை,முதுமை,கடல் இவையெல்லாமே எங்கிருந்தாலும் அழகுதான்.

4.புக்கர் பரிசுக்காக சிபாரிசு செய்யப்படும் நாவல்களை படிக்கும் நீதிபதிக்கு ஒரு நாவலை படிக்க கொடுக்கப்படும் பணம் எவ்வளவு தெரியுமா?கிட்டத்தட்ட இந்திய ரூபாயில் 2.4 லட்சங்கள்.

5.ஒருமுறை அண்ணா..ஒரு கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த போது..நடுவில் எம்.ஜி.ஆர். வர ஒரே ஆரவாரம்.அதைப்பயன்படுத்தி அண்ணாவிடம், எம்.ஜி.ஆர்.,உங்களை விட புகழ் பெறப் பார்க்கிறார்
என சிலர் புகார் கூற..அண்ணாவோ..'எம்.ஜி.ஆர்., பொன் முட்டையிடும் வாத்து..அவர் எப்போது வேண்டுமானாலும்..வரலாம்..போகலாம்'என்றார்.

*********************** **************************
ஒரு ஜோக்

தலைவர் என்ன யோசனையில் இருக்கிறார்?
அவரது கொள்ளு பேரன் கட்சியில் பதவி கேட்கிறானாம்..பேசாமல்..குழந்தைகள் அணி செயலாளர் ஆக்கிடலாமா..என்ற யோசனையில் இருக்கிறார்.

யாரைக் கொன்றுவிட்டு

ஆதவன் ஓடி ஒளிகிறான்

கீழ்வானத்தில் இரத்த சிவப்பு.

Monday, November 3, 2008

புரிந்துணர்வும்...அன்பு உள்ளமும்..

காந்தக்கல் இருக்கிறதே..அது..தான் எவ்வளவு பெரியவன் என்று பார்ப்பதில்லை..தன்னருகே வரும்..சிறு இரும்பு ஊசியையும்..தன்னுள் இழுத்துக்கொள்கிறது.

கொடிகளை..மரங்கள் அரவணைத்துக்கொள்கின்றன.

நதிகளின் சங்கமமாக கடல் திகழ்கிறது.

நம் மனமும்..அதுபோல நம்மை அறியாது..யாருடனாவது லயித்து விடுகிறது.அது நட்பு..பாசம்..காதல்..என இடத்திற்கு ஏற்றார் போல பெயரைப் பெறுகிறது.

ஒருவரிடம் நாம் வைக்கும் அன்பு..அல்லது ..மதிப்பு..பண்டமாற்று போல ..ஏதோ ஒரு பொருளுக்கு ஏதோஒரு பொருள் ..வழங்குவது போல அல்ல.,

நீ எப்படி இருக்கிறாயோ..அதேபோல..நான் எப்படி இருக்கிறேனோ.அதே போல் இருந்து விட்டுப் போவோம் என்பதில் புரிந்துணர்வு இருப்பதாய் ..நான் நினைக்கவில்லை.இருவருக்கும் இடையே,,ஏற்றுக்கொள்ள இயலா..மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும்..அந்த நட்பு நிலைக்க வேண்டும்.

ஈ.வெ.ரா.விற்கும் ராஜாஜிக்கும் அப்படிப்பட்ட நட்புதான் இருந்தது.

என் மனதில் அழுக்கு இல்லை..கண்ணாடி போல சுத்தமாக இருக்கிறது...அதே போன்று என்னை புரிந்துக்கொள்ளாதவன் மனமும் இல்லை என்றால் கவலை இல்லை.ஆனால்..என்னை புரிந்துக் கொண்டவன் மனமும் அப்படி இல்லை என்றால்..மனம் சங்கடப்படவே செய்கிறது.

அன்பு செலுத்தாமல் இருந்தோமெனில்..அதில் என்ன ஆனந்தம் இருக்க முடியும்?

நாம் அன்பு செலுத்தும் நபரிடமிருந்து என்றாவது பிரிய நேரிடுகிறது மன வேதனையுடன்.இல்லை அவர் நம்மை விட்டுப் பிரிகிறார் அதே வேதனையுடன்.

இப்படியெல்லாம் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

அன்பைவிட்டு துவேஷம் நம் மனதில் குடியேறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.ஏற்றத்தாழ்வின்றி அன்புடன் இருக்க வேண்டும்.அன்பற்ற வாழ்வு வாழ்ந்து வாழ்க்கையை வீணடிப்பதில் என்ன லாபம்?

ஆகவே..நண்பர்களே..அன்பு..சாதி..மதங்களுக்கு அப்பாற்பட்டதாய் இருக்கட்டும்.

இந்த புரிந்துணர்வு இருந்தால்...எல்லாம் நன்மையாய் முடியும்.

( மீள்பதிவு )