Friday, January 16, 2009

தேங்காய்...மாங்காய்...பட்டாணி...சுண்டல்... (17-1-09)

1.பொங்கல் நாளில் சூரியனை..வாழை.கரும்பு,மஞ்சள்.இஞ்சி..ஆகியவற்றை வைத்து வழிபடுகிறோம்.அதன் காரணம் தெரியுமா?

வாழை-வாழையடி வாழையாக வாழை வளர்வது போல..நமது சமுதாயமும்,நமது குடும்பமும்..வாழ வேண்டும் என்ற கருத்தில் வாழை பொங்கல் வழிபாட்டில் இடம் பெறுகிறது.

கரும்பு-ஓங்கி உயர்ந்து வளரும் இயல்புடையது.அதுபோல நம் வாழ்க்கையும் ஓங்கி உயர்ந்து, வளர்ச்சி பெற வேண்டும் என்ற கருத்தில் பொங்கல் வழிபாட்டில் கரும்பு இடம் பெறுகிறது

மஞ்சள்,இஞ்சி-பூமிக்கடியில் ஆழமாக பதிந்து வளரும் இயல்புடையது.அதுபோல உயர்ந்த,புனிதமான கருத்துக்கள் நம் வாழ்க்கையை மங்களகரமாக நெறிப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இவை இடம் பெறுகின்றன.

2.எல்லாம் நானே..என்ற அகந்தை வேண்டாம்..யாரோ போட்ட சாலையில் தான் நாம் வாகனங்களை ஓட்டிச் செல்கிறோம், யாரோ கூலியாட்கள் கட்டிய வீட்டில்தான் நாம் வசதியாக வாழ்கிறோம்,யாரோ நெய்த ஆடையைத்தான் நாம் கம்பீரமாக அணிந்துக் கொள்கிறோம்,யாரோ விளைவித்த தானியங்களைத்தான் உண்ணுகிறோம்.சீப்பில் இருந்து செருப்பு வரை நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருள்களும் யாரோ செய்ததுதான். அதை ஞாபகத்தில் வையுங்கள்.

3.உலகத்தில் எந்த மூளையில் இருந்து பார்த்தாலும் சில விஷயங்கள் அழகாய்த்தான் இருக்கும்.சூரியன்,சந்திரன்,குழந்தைகள்,புன்னகை,முதுமை,கடல் இவையெல்லாமே எங்கிருந்தாலும் அழகுதான்.

4.புக்கர் பரிசுக்காக சிபாரிசு செய்யப்படும் நாவல்களை படிக்கும் நீதிபதிக்கு ஒரு நாவலை படிக்க கொடுக்கப்படும் பணம் எவ்வளவு தெரியுமா?கிட்டத்தட்ட இந்திய ரூபாயில் 2.4 லட்சங்கள்.

5.ஒருமுறை அண்ணா..ஒரு கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த போது..நடுவில் எம்.ஜி.ஆர். வர ஒரே ஆரவாரம்.அதைப்பயன்படுத்தி அண்ணாவிடம், எம்.ஜி.ஆர்.,உங்களை விட புகழ் பெறப் பார்க்கிறார்
என சிலர் புகார் கூற..அண்ணாவோ..'எம்.ஜி.ஆர்., பொன் முட்டையிடும் வாத்து..அவர் எப்போது வேண்டுமானாலும்..வரலாம்..போகலாம்'என்றார்.

*********************** **************************
ஒரு ஜோக்

தலைவர் என்ன யோசனையில் இருக்கிறார்?
அவரது கொள்ளு பேரன் கட்சியில் பதவி கேட்கிறானாம்..பேசாமல்..குழந்தைகள் அணி செயலாளர் ஆக்கிடலாமா..என்ற யோசனையில் இருக்கிறார்.

யாரைக் கொன்றுவிட்டு

ஆதவன் ஓடி ஒளிகிறான்

கீழ்வானத்தில் இரத்த சிவப்பு.

No comments: