Showing posts with label அரசியல் -தமிழகம் -தேர்தல். Show all posts
Showing posts with label அரசியல் -தமிழகம் -தேர்தல். Show all posts

Monday, April 4, 2011

வடிவேலு பிரச்சாரம் செய்ய தகுதியானவரா....

இன்று..இல்லை..இல்லை..
திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்த பிறகு..கலைஞர்களின் கட்சி பங்கு அதிகரித்துள்ளது குறித்து மகிழ்ச்சியே..
இவர்கள் கட்சியில் ஈடுபடலாமா? என்ற வினாவிற்கு..இவர்களும் இந்திய குடிமகன்களே..ஆகவே..அதற்கான தகுதி கண்டிப்பாக இவர்களுக்கு உண்டு என்பதே பதில்..
அந்த நாளில்..தி.மு.க., ஆட்சிக்கு வருவதற்கு முன்...கே.ஆர்.ராமசாமி.எஸ்.எஸ்.ஆர்., எம்.ஜி.ஆர்., போன்றோர் கட்சி வளர்ச்சியில் ஆர்வம் காட்டி உழைத்தனர்.எம்.ஆர்.ராதா..கடைசிவரை பெரியார் கொள்கைகளை பின்பற்றியதுடன்..தி.மு.க., விற்கும் ஆதரவாய் இருந்தார்.என்.எஸ்.கிருஷ்ணனும்..படங்களிலும்..மேடைகளிலும் தி.மு.க., வை ஆதரிப்பது போல பேச்சுகளை வைத்தார்.
இவ்வளவு கலைஞர்கள் இருந்தாலும்..அவர்கள் பேச்சில்..கண்ணியம் இருந்தது..தனி நபர் தாக்குதல் இல்லை..ஆபாசம் இல்லை..
ஆனால் இன்று...
சிரிப்பு நடிகர்கள் கட்சிக்கு ஆதரவு கூட்டத்தில் பேசினால்..கண்ணியத்தைக் காணமுடியவில்லை..ஆபாசத்தை அவர்களால் தவிர்க்க முடியவில்லை.தனிநபர் தாக்குதல்..தனி நபர் விரோதம் என கட்சியை தன் தனி நபர் விரோத போக்கிற்கு பயன் படுத்திக் கொள்கின்றனர்.
இந்த கலாச்சாரத்தை ஆரம்பித்து வைத்தவர் மறைந்த நடிகர் எஸ்.எஸ்.சந்திரன்..இவர் பேசுகையில் கலைஞரை தனிப்பட்டமுறையில் கேவலமாக பேசியுள்ளார்.
இன்றைய நிலையில்...
வடிவேலு பேசுகையில்...விஜய்காந்தை தனிப்பட்ட விரோதம் காரணமாக மனம் போன போக்கில் பேசி வருகிறார்.எல்லோரும் சேர்ந்து விஜய்காந்தை ஒரு குடிகாரன் என்ற அளவிற்கு முத்திரை குத்தி விட்டார்கள்.
வடிவேலுவிற்கு எதிராக அ.தி.மு.க., அணியில் சிங்கமுத்து என்ற நடிகரை களம் இறக்கியிருக்கிறார்கள்.இவர் நகைச்சுவை நடிகர் எனத் தெரியும்..ஆனால் வடிவேலுவிடம் பகை ஏற்பட்ட பின்னரே இவர் பெயர் சிங்கமுத்து என மக்களுக்குத் தெரியும். வடிவேலு சொல்வதற்கு பதில் சொல்லவே இவரை பிரச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளனர்.இவரும் மற்ற எதையும் பேசாது..வடிவேலு படத்தில் விஜய்காந்த் காலை அமுக்கினார்...இவர் மாலை 6 மணிக்கு என்ன செய்வார் எனத் தெரியும்..11 மணிக்கு என்ன செய்வார் தெரியும்..அதை அம்பலப்படுத்துவேன் என்ற ரேஞ்சில் பேசி வருகிறார்.
சமீபத்தில் கட்சியுல் இணைந்த பூ நடிகை..முன்னாள் முதல்வராய் இருந்த ஜெ வை ப் பற்றி உனக்கு என்ன தெரியும் என்ற அளவில் பேசி வருகிறார்.
தமிழ் பேசக்கூடத் தெரியாத இவர் இன்று நான் ஒரு தமிழச்சி என்கிறார்.
மொத்தத்தில் இன்று தேர்தல் கூட்டம் எல்லாவற்றிலும்..சாதனைகளைப் பற்றியும்..சாதிக்கப் போவதைப் பற்றியும் மட்டுமே பேசி வந்த நிலைப் போய் அவரவர் தனிப்பட்ட வாழ்க்கையை கேவலமாக பேசும் நிலை ஏற்பட்டதை எண்ணினால் ..
இன்றைய பேச்சாளர்கள் பிரச்சாரம் செய்ய தகுதியானவர்களா? என்ற ஐயம் அதிகரிக்கிறது.

Sunday, January 30, 2011

2016ல எங்க ஆளுதான் முதல்வர்





தங்களால முடியலேன்னாலும் சிலர் குரல் விடறதுல கில்லாடியாய் இருப்பாங்க..

அதுபோல..தன்னால தனித்து நின்னு ஜெயிக்க முடியாதுன்னு தெரிஞ்சாலும்..நான் தனித்து நின்னா 100 தொகுதிகள் ஜெயிப்போம்..என்றவர் 50..தொகுதி ஜெயிப்போம் என்றார் அடுத்த நாள்.அப்படிப்பட்ட நீங்க ஏன் 30, 40 சீட்டுக்கு கூட்டணி சேரணும்னு நக்கலாய் கேட்ட போதும் இவர் சட்டை செய்யலை.அப்புறம்

நம்ம ஜாதி 2 1/2 கோடி பேர் இருக்கோம்..எல்லாரும் எங்களுக்கு ஓட்டுப் போட்டா..நான் கோபாலபுரத்துக்கும், போயஸ் கார்டனுக்கும் அலையா அலைய வேண்டியதில்லைன்னு புலம்பிக்கிட்டு இருந்தாரு.

அப்புறம்..கொஞ்ச நாள் கழிச்சு..'என் முதல் எதிரியே தி.மு.க., தான்' என்றார்.

அப்பறம்..கூட்டணிப் பற்றி இன்னிக்கு முடிவு,நாளைக்கு முடிவுன்னு தள்ளிப் போட்டுக் கிட்டு வந்தார்..

எல்லாவற்றிருக்கும் முற்றுப்புள்ளிப் போட்டாற்போல கலைஞர் இவரு கூட்டணிலே இருக்கார்னு அறிவிச்சுட்டார்.

இவங்க தான் முதல் எதிரின்னுட்டு ..இப்போ ..அடுத்த எதிரியை தோற்கடிக்க முதல் எதிரியுடன் சேர்ந்து விட்டார்.

இனி..நாங்க எல்லாம் பங்காளி..ஒன்னுக்குள்ள ஒன்னு ன்னு சொல்வார்..

ஏன்னா..பகையாளிக் குடியை உறவாடிக் கெடு ன்னு சொல்றது இவருக்குத்தான் அத்துப்படி.

எந்தக் கூட்டணிலே நாங்க இருக்கோமோ அந்த கூட்டணி ஜெயிக்கும்னாரு..ஆனா பாராளுமன்ற தேர்தல்ல காலி.

சட்டசபை தேர்தல்ல..நாம் ஏன் சொல்லணும்..

இப்போதைக்கு கோபாலபுரத்துல செட்டில்டு..சட்டபை தேர்தல் வரைக்கும்..இல்லை..இல்லை..அதுக்கு அப்பால..ராஜ்யசபா வுக்கு தன் பையனுக்கு சீட் கிடைக்கற வரை அணி மாறமாட்டார்னு உறுதிசொல்வோம்.

அப்புறம்..

அப்புறம் என்ன..2016ல எங்க ஆளுதான் முதல்வர்னு ஆரம்பிச்சுட வேண்டியதுதான்..

டிஸ்கி-.ஆனால் சம்பந்தப் பட்டவரோ...கூட்டணி பற்றி தான் எதுவும் முடிவெடுக்கவில்லை என வழக்கம் போல பேசியுள்ளார்.


ஏழுகுண்டல வாடா..எது உண்மை