Showing posts with label இளங்கோ குமணன் - டி வி ஆர். Show all posts
Showing posts with label இளங்கோ குமணன் - டி வி ஆர். Show all posts

Thursday, November 22, 2018

அடுத்தவீட்டு ஜன்னல் - 13 (பகுதி-2)

------------------------
இளங்கோ குமணன்
--------------------------------

S S International (live) நிறுவன இயக்குநர்களில் ஒருவரான இளங்கோ குமணன்..இருபத்தைந்து ஆண்டுகள் முன்னரே தமிழ் நாடக உலகிற்கு அறிமுகமானவர்.பாம்பே கண்ணனின், "நாடகக்காரன்" குழு மூலமாக அறிமுகமாகி.முதலில் சிறு பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து பின்னர் பெரிய பாத்திரங்களிலும்..அடுத்து நாயகனாகவும் நடித்தவர்.பாஸ்கி அவர்களின் ஒரு நாடகத்தில் இரட்டை வேடம் தாங்கி நடித்துள்ளார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு தன் நிறுவனம் மூலம் மீண்டும் நாடக உலகிற்கு வந்திருக்கும் இவர், சென்ற ஆண்டு எழுதி, இயக்கி, அரங்கேற்றிய நாடகம் காஞ்சி மகாபெரியவாளின் நூறாண்டு வாழ்க்கை வரலாற்றைப் பேசும் "தெய்வத்துள் தெய்வம்" நாடகம் ஆகும்.காஞ்சி மடத்தின் ஒப்புத்லுடன் நடைபெற்ற இந்நாடகத்தில் 108 கலைஞர்கள் இடம் பெற்றிருந்தனர்.

இந்நாடக அரங்க அமைப்பை ஏற்றவர் பிரபல் ஆர்ட் இயக்குநர் தோட்டா தரணி ஆவார்,இந்நாடகத்திற்கு இசையமைத்தவர் மாண்டலின் யு.ராஜேஷ்.அருணா சாய்ராம், குருசரண் ஆகியோர் பாடல்களைப் பாடியிருந்தனர்.

இந்நாடகத்திற்காக இரண்டு பாடல்களை குமணன் எழுதியதுடன் நில்லாது, முக்கிய வேடம் ஒன்றினையும் ஏற்று நடித்தார்.

மிகப்பிரம்மாண்டமான படைப்புகளையேத் தர வேண்டும் என எண்ணும் இவரின் கனவு "மகாபாரத"த்தையும் அதே போன்று மேடையேற்ற வேண்டும் என்பதுதான்.

அவர் எண்ணம் நிறைவேற்ற வாழ்த்துவோமாக.

அடுத்தவீட்டு ஜன்னல் - 13

இளங்கோ குமணன்
----------------------------------

ஒரு எழுத்தாளர்/இயக்குனர் படைப்புகள் பற்றி, அந்த எழுத்தாளரோ/இயக்குனரோ பேசக்கூடாது.அவர்கள் படைப்புகள் பேச வேண்டும் என்பார் "இளங்கோ" குமணன்

இந்த "இளங்கோ" குமணன் தமிழ் நாடக உலகின்  பெருமையை பரப்ப வந்த தாமதமான வரவு என்றாலும், முக்கியமான வரவாகும்

எஸ் .எஸ் ஈன்டெர்னேஷனல் (லைவ்) (S S International (live) என்னும் விளம்பர நிறுவனம் 2014ல் , தங்கள் முதல் படைப்பாக கல்கி அவர்களின் "பொன்னியின் செல்வன்" நாடகத்தை  Magic Lantern  குழ்வினரை வைத்து அரங்கேற்றினர்.

80க்கும் மேற்படட் கலைஞர்கள், அரங்க அமைப்பு தோட்டா தரணி.பால் ஜேகப் அவர்களின் நேரடி இசை என நான்கு மணி நாடகமாக இருந்தது இது.

மேடையிலேயே உண்மையான வாள் சண்டை காட்டப்பட்டது.
நாடகக் காவலர் மனோகருக்கு இணையான அளவிற்கு பிரம்மாண்டத்தை இவர்கள் மேடையில் காட்டினர் என்றால் மிகையில்லை.

தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும், சிங்கப்பூரிலும் இந்நாடகம் நடத்தப்பட்டது.

திரைப்பட பிரபலங்கள், பசுபதி, குமரவேள் ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.

குமரவேல் நாடகமாக்கம் செய்திருந்த இந்நாடகத்தை லாண்டன் ப்ரவீன் இயக்கி இருந்தார்

அடுத்து இவர்களின் அரிய படைப்பாக "பாலக்காடு மணி ஐயரின்" வாழ்க்கை வரலாறு "மணியோசை" என்ற பெயரில் மேடை நாடக மாக அறங்கேறியது.இந்நாடகமும் (இதை நாடகம் என்று சொல்லலாமா? எனத் தெரியவில்லை) ஒரு புதுமைப் படைப்பாக அமைந்தது.

கர்நாடக இசைக் கலைஞர்கள், நித்யஸ்ரீ மகாதேவன்,சுதா ரகுநாதன், சௌம்யா,விஜய் சிவா, குருசரண்,அனந்தகிருஷ்ணன்,தஞ்சாவூர் குமார்,உமாசங்கர் மற்றும் பல கலைஞர்கள் இணைந்து இந்நாடகத்தில் நாடகக்கலைஞர்களாக மாறி இந்நிகழ்ச்சியை வெற்றியடைய வைத்தனர்.

இந்நாடகத்தை, எம்.ஆர்.ராஜாமணியின் எம் ஆர் ஆர் தியேட்டர்ஸிற்காக "கீழ் வானம் சிவக்கும்" என்ற நாடகத்தை எழுதித் தந்தவரும் (இந்நாடகம் பின்னர் சிவாஜி நடிக்க அதேபெயரில் வெள்ளித்திரைக்கு வந்தது), விசு அவர்களின் "அரட்டை அரங்கம்" நிகழ்ச்சியை இயக்கியவருமான "குரியகோஸ்" ரங்கா எழுதி, இயக்கி இருந்தார்.

(இவர்கள் வீட்டு ஜன்னல் பார்வை தொடரும்)