Thursday, November 22, 2018

அடுத்தவீட்டு ஜன்னல் - 13 (பகுதி-2)

------------------------
இளங்கோ குமணன்
--------------------------------

S S International (live) நிறுவன இயக்குநர்களில் ஒருவரான இளங்கோ குமணன்..இருபத்தைந்து ஆண்டுகள் முன்னரே தமிழ் நாடக உலகிற்கு அறிமுகமானவர்.பாம்பே கண்ணனின், "நாடகக்காரன்" குழு மூலமாக அறிமுகமாகி.முதலில் சிறு பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து பின்னர் பெரிய பாத்திரங்களிலும்..அடுத்து நாயகனாகவும் நடித்தவர்.பாஸ்கி அவர்களின் ஒரு நாடகத்தில் இரட்டை வேடம் தாங்கி நடித்துள்ளார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு தன் நிறுவனம் மூலம் மீண்டும் நாடக உலகிற்கு வந்திருக்கும் இவர், சென்ற ஆண்டு எழுதி, இயக்கி, அரங்கேற்றிய நாடகம் காஞ்சி மகாபெரியவாளின் நூறாண்டு வாழ்க்கை வரலாற்றைப் பேசும் "தெய்வத்துள் தெய்வம்" நாடகம் ஆகும்.காஞ்சி மடத்தின் ஒப்புத்லுடன் நடைபெற்ற இந்நாடகத்தில் 108 கலைஞர்கள் இடம் பெற்றிருந்தனர்.

இந்நாடக அரங்க அமைப்பை ஏற்றவர் பிரபல் ஆர்ட் இயக்குநர் தோட்டா தரணி ஆவார்,இந்நாடகத்திற்கு இசையமைத்தவர் மாண்டலின் யு.ராஜேஷ்.அருணா சாய்ராம், குருசரண் ஆகியோர் பாடல்களைப் பாடியிருந்தனர்.

இந்நாடகத்திற்காக இரண்டு பாடல்களை குமணன் எழுதியதுடன் நில்லாது, முக்கிய வேடம் ஒன்றினையும் ஏற்று நடித்தார்.

மிகப்பிரம்மாண்டமான படைப்புகளையேத் தர வேண்டும் என எண்ணும் இவரின் கனவு "மகாபாரத"த்தையும் அதே போன்று மேடையேற்ற வேண்டும் என்பதுதான்.

அவர் எண்ணம் நிறைவேற்ற வாழ்த்துவோமாக.

No comments: