ஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்
Showing posts with label கமல்-விஸ்வரூபம். Show all posts
Showing posts with label கமல்-விஸ்வரூபம். Show all posts
Sunday, December 9, 2012
பட்டையை கிளப்பப்போகும் விஸ்வரூபம்
தசாவதாரக் கமலின் விஸ்வரூபம்
கமலின் விஸ்வரூபம் படம் ஜனவரி 11ஆம் நாள் வெளியாகிறது.பொங்கலை ஒட்டி முக்கிய நடிகர்கள் படங்கள் சிலவும் வெளியாவதால்...தியேட்டர் பிரச்னைகள் கண்டிப்பாக ஏற்படும்.எதிர்ப்பார்த்த தியேட்டர்கள், காட்சிகள் ஆகியவை குறையக் கூடும்.
தவிர்த்து...இப்போதெல்லாம்..எவ்வளவு முடியுமோ..அவ்வளவு காட்சிகளை படம் வெளியாகி..விமரிசனங்கள் வருவதற்குள்..நடத்தி வசூலைப் பெறுவதே நோக்கமாகி உள்ளது.
இந்நிலையில்..தியேட்டர் எண்ணிக்கை..பொங்கல் வெளியீடு படங்களுக்கு குறையும்.தவிர்த்து.100 கோடிகளுக்கு மேல் செலவு செய்து எடுக்கப்படும் படங்கள்.. ஒருவேளை சரியாய் இல்லையெனில்..தயாரிப்பாளர்..விநியோகஸ்தர்கள் நஷ்டம் அடையக்கூடும்.
அதற்கு என்ன வழி..என எண்ணியே கமல்..தன் படம் வெளியாகும் முதல் நாள் ஒரு காட்சியை டிடிஎச் சில் ஒளிபரப்ப ஏற்பாடுசெய்துள்ளார்.இதற்காக 50 கோடிகள் விலை பேசியுள்ளதாகத் தகவல்.(ஒரு இணைப்பிற்கு 1000 ரூபாய் என்பது வேறு விஷயம்..)
இப்போது..படம் வெளியாவதற்கு முன்னதாகவே தயாரிப்பாளர்..செலவில் கணிசமான தொகை கிடைத்து விடுகிறது.
இப்போது..இப்படம்...பொங்கல் விடுமுறை காலத்தில்...அதாவது..வெளியான நாளிலிருந்து 15ஆம் நாள் வரை..அதாவது ஐந்து நாட்களில் அரங்கு நிறைந்த காட்சிகளாக நடைபெறும்.அப்போது..மீண்டும் கணிசமான வசூல் கிடைக்கும்.மேலும்..வெளிநாடுகளில் வசூல்...இவையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால்..படம் ஹிட் ஆகாவிடினும்..தயாரிப்பாளர் நஷ்டத்திலிருந்து தப்பிவிடுவார்.
இதுபோல..இனி வரும் நாட்களிலும்..லோ பட்ஜெட் படங்களும்..வெளியிடும் முன் சேனல்களுக்கு விற்கப்படலாம்
இது எல்லாப் படங்களுக்கும்..அதன் அதன் செலவிற்கேற்ப வசூல் ஆகும் நிலையை உருவாக்கும்.
கமலின் இந்த முடிவு..கண்டிப்பாக வரவேற்க வேண்டிய ஒன்று..
திரையரங்க உரிமையாளர்களிடமிருந்து இதற்கு எதிர்ப்புகள் வரலாம்..ஆனால் காலப் போக்கில்..எல்லா படங்களுக்கும் இனி திரையரங்குகள் கிடைக்கும் நிலை வரும்.மேலும் திரையரங்கில் படம் பார்ப்பவர்கள் அரங்கிற்குத் தான் வருவர்.
துப்பாக்கி படம் .திருட்டு டிவிடியில் வந்தும் ..திரையரங்கிற்கு மக்கள் வரவில்லையா..
மாற்றான்..வெளியானதுமே..விமரிசனங்கள் வந்தும்..முதல் சில நாட்கள் வசூலில் பட்டையைக் கிளப்பவில்லையா..
ஆகவே..இப்படி யாகுமோ...அப்படியாகுமோ என மைதாசாக எண்ணாமல்..கமலின் இந்த முடிவு...திரையுலகை அடுத்த ஒரு புது பாதைக்கு அழித்து செல்லும் என நம்புவோமாக.
Wednesday, November 21, 2012
வரலாறு படைக்கப் போகும் விஸ்வரூபம்..
சமீபத்தில் கமல்ஹாசன்..விஸ்வரூபம் படம் வெளியாவதில் தாமதம் ஏன்? என்பதற்கு...
இப்படம் 3000 பிரிண்டுகள் போடப்படுகின்றன.அதனால்தான் படம் வெளியிடுவதில் தாமதம் ஏற்படுகிறது என்றார்.
3000 பிரிண்டுகள் எனில் கண்டிப்பாக 3000 திரையரங்குகள்.ஒரு அரங்கில் குறைந்த பட்சம் நாளைக்கு நான்கு காட்சிகளாவது திரையிடப்படுமெனில்..ஒருநாளைக்கு 12000 காட்சிகள்.ஒரு காட்சிக்கு நிகர வருமானம் 20000 என்று வைத்துக் கொண்டாலும்..ஒரு நாளைக்கான வசூல் 24 கோடி.படம் ஐந்து நாட்கள் ஓடினாலும் வசூல் நூறு கோடிகளைத் தாண்டும்.
ஆகவே படம் வெற்றியடைய வாழ்த்தினாலும்...வசூலிலும் அது சாதனைப் புரியும் என எதிர்பார்க்கலாம்.
Subscribe to:
Posts (Atom)