Showing posts with label கவிதை - டி .வி.ஆர் .. Show all posts
Showing posts with label கவிதை - டி .வி.ஆர் .. Show all posts

Sunday, February 2, 2020

எதிர்ப்பாரா எதிர்பார்ப்பு

எதிர்ப்பார்ப்புகள்
ஏமாற்றம் தருகின்றன
என்றிட்டேன்
எதிர்பாராததை
எதிர் பார்..
ஏமாற்றம் இருக்காது
என்றிட்டான்..
சுட்டப் பழம்
சுடாப்பழம்
போதித்தவன்.

Wednesday, February 28, 2018

ஆ(ற)ரத் தழுவினேன்



கடலலைகள்

கரையைக் கண்டு மிரண்டு

கரைந்து உள்ளிடுதலும்

கார்முகில் கண்டு

கலாபம் விரிக்கும் தோகையும்

விடியலில் விண்ணின்

வண்ணக் கலவையும்

ஆலம் விழுதுகளின்

ஆகம் தழுவலும்

விதிமீறல் அன்று

இயற்கை

இல்லா ஒன்றை நாடும்போது

இருக்கும் ஒன்றையும்

இழக்கலாமா

வெற்றி இலக்கிற்காக

வீறு கொண்டு முயன்றால்

தோற்பது யார்..

விட்டுக்கொடுத்தேன் வெற்றியை

அனைவரும் வெறுக்கும் தோல்வி

அணங்கை

ஆ(ற)ரத் தழுவினேன்

Tuesday, February 27, 2018

வறுமைக் கோடு



குச்சிக் கால்கள்

எலும்பு துருத்தியகைகள்

ஒட்டிய கன்னம்

வயிற்று சுருக்கங்கள்

உருக்குலைந்த மேனி

இதில்

வறுமைக்கோட்டை

தீர்மானிக்கப் போகும்

அளவுகோல் எது

Saturday, August 2, 2014

கரு உருவாகுமுன் (கவிதை)


                           


கவிதை எழுத

வெள்ளைத் தாளில்

நேர்க்கோடிட்டேன்

ஆகா..அற்புதம்

கவிதை அற்புதம்

என்றிட்டான் ஒருவன்

மற்றவனோ

நேர்மையை வலியுறுத்தும்

பாங்கு அருமை என்றான்

அடுத்தவன்

வாழ்வில் நிமிர்ந்து நில்

வளமாய்ச் சொல்கிறது

என்றான்

நானோ

கவிதையின் கரு தேடி

விட்டத்தைப் பார்த்தேன்

Friday, August 1, 2014

சிரிக்கின்றாய்...நீ..சிரிக்கின்றாய் (கவிதை)


                       





நெற்றி சுருக்கி

புருவம் உயர்த்தி

கண்கள் விரித்து

பற்கள் தெரியாது

உதடுகள் மடித்து

சிரிப்பது தெரியாது

சிரிக்கிறாய்

நான் குழந்தையாய்

தவழ்ந்த போது

எடுத்தெதென

புகைப்படம் ஒன்றைக்

காட்டியதும்

Wednesday, July 30, 2014

எமக்கு என்ன ...


                               



இவனுக்கு இவள்

இவளுக்கு இவன்

பேசி நடத்தியவர்கள்

கோர்ட்டுக்கு

வருவதில்லை

விவாகரத்தின் போது


Saturday, July 19, 2014

எதிர்பார்ப்பு (சிறிய கவிதை)



வாசமுடன்
மொட்டொன்று மலர்ந்து
மலராகியது
சூடுவோர் இன்மையால்
பிறவிப்பயன் பெறாது
உலர்ந்து
உதிர்ந்து
மீண்டும் வளர்ந்து
மொட்டாய் நிற்கிறது
எதிர்பார்ப்புடன்

Tuesday, August 13, 2013

சூரியனுக்கே டார்ச்...



(வண்ணதாசனின் கவிதை ஒன்றை பாராட்டி என் கவிதை)


வண்ணத்துப் பூச்சி
விரலிடுக்கில்
வண்ணத்தை
விட்டுச் செல்லல் போல்
வண்ணதாசா..
உன் எழுத்தின்
வண்ணம்..மனதில்..
வன்மையாய் ஒட்டிக்கொள்ளும்
வண்ணம்..கோலில்..
விடுப்பது என்ன மை..

Wednesday, April 3, 2013

விருந்தும் ....மீனவனும்


           



ஐந்தாண்டு பதவி வேண்டி

ஐந்து நட்சத்திர ஓட்டலில்

பலவகை மீன்களுடன்

பலமான விருந்து

போதை ஏறியதும்

தட்டில்

தண்ணென கிடந்த

ஒவ்வொரு மீனும்

தமிழக மீனவனாகவும்

கொண்டு வந்த வெயிட்டர்

சிங்கள கடற்படையாயும்

கண்ணுக்குத் தெரிந்தது

தலைவனுக்கு

Sunday, March 28, 2010

சங்கமம்

தனித்திருந்தேன்

விழித்திருந்தேன்

பசித்திருந்தேன்

தற்கொலை முயற்சி செய்தேன்

கொள்வாரோ

கொடுப்பாரோ இல்லை

தீராத பசி

தீர்ப்பாரைத் தேடி

விழிகள்