Saturday, August 2, 2014

கரு உருவாகுமுன் (கவிதை)


                           


கவிதை எழுத

வெள்ளைத் தாளில்

நேர்க்கோடிட்டேன்

ஆகா..அற்புதம்

கவிதை அற்புதம்

என்றிட்டான் ஒருவன்

மற்றவனோ

நேர்மையை வலியுறுத்தும்

பாங்கு அருமை என்றான்

அடுத்தவன்

வாழ்வில் நிமிர்ந்து நில்

வளமாய்ச் சொல்கிறது

என்றான்

நானோ

கவிதையின் கரு தேடி

விட்டத்தைப் பார்த்தேன்

No comments: