Showing posts with label -2016. Show all posts
Showing posts with label -2016. Show all posts

Sunday, November 22, 2015

வரும் தேர்தலில் திமுக முதல்வரா? அ தி மு க முதல்வரா?



பீஹார் தேர்தல் குறித்தும், அங்கு அமைந்தக் கூட்டணிக் குறித்தும், விழுந்த வாக்கு விழுக்காடு விவரங்களையும் படித்தவாறு இருந்தேன்...

எப்போது கண் அயர்ந்தேன்..தெரியவில்லை..

அப்போது....

கலைஞர், ஜெ..இருவரும் வருகின்ற தமிழக சட்டசபைத் தேர்தல் குறித்து பேசிக்கொண்டிருந்தனர்..

கலைஞர் _  ஆயிரம் வேறுபாடுகள் உண்டு நம்மிடையே..இதை உபயோகப் படுத்திக் கொண்டு அந்நியர் ஆட்சியைப் பிடிக்க விட்டுவிடக் கூடாது..

ஜெ- இந்த விஷயத்தில் நான் எண்ணியதையே...நீங்களும் கூறியுள்ளீர்கள்...என்ன செய்யலாம்?

கலைஞர்- நான் கூறினால்...அதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா எனத் தெரியவில்லை..

ஜெ- நம்மிடையே விரோதத்தை உண்டாக்க பலர் முயலுகிறார்கள். அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது.நீங்கள் அரசியல் சாணக்கியர் என்பது மறுக்க முடியாத உண்மை.நீங்கள் எது சொன்னாலும்
     அதை பரீசலிக்கிறேன்

கலைஞர்- வரும் தேர்தலில், நாம் இருவரும் கூட்டணி வைத்துக் கொள்வோம்.ஒவ்வொருவரும் 117 தொகுதிகளில் போட்டியிடுவோம்.நம்மில், யார் அதிகத் தொகுதிகளில் வெற்றி பெறுகிறோமோ, அவர்கள்
          கட்சி முதல்வர் பொறுப்பேற்கட்டும்.மற்றவர் துணை முதல்வர். என்ன சொல்கிறீர்கள்

.ஜெ_ அருமையான யோசனை.இதனைக் கேள்விப்படும் மற்ற கட்சியினர் கும்பி கருகட்டும்..குடல் வேகட்டும்..

கலைஞர்- நன்றி ஜெ

கலைஞர்- நன்றி என்ற பெரிய வார்த்தையெல்லாம் ஏன்..உங்கள் அன்பு சகோதரி நான்.

கலைஞர் ..ஜெ -(இருவரின் மைன்ட் வாய்ஸ்) இடத்தேர்தல் ஃபார்முலாவை..நமக்கு ஒதுக்கப்பட்ட எல்லா தொகுதியிலும் நடத்திட நமக்கு சொல்லிக் கொடுக்க வேண்டுமா..என்ன்?)


தமிழக மக்கள்- அப்பாடா...இனி இவர்களை அவர்கள், அவர்களை இவர்கள் குற்றம் சொல்லிக் கொண்டிருக்காமல் ஆட்சியை நமக்காக நடத்தட்டும்

.(இருவருக்கும் நடந்த பேச்சு வார்த்தையைக் கேட்டு..ஒருகட்சி..கோடாரியும் கையுமாக மரங்களைத் தேடிப் போக, மற்றொரு கட்சியினர்..தன் தலைவன் அடி தலைமேல் படாதிருக்க ஹெல்மெட் அணைந்து அலைய..அகில இந்தியக் கட்சிகள்..அண்டை மாநிலம் நோக்கி கூட்டணிக்கு விரைகிறார்கள்.)