Monday, June 2, 2008

85 வயது இளைஞருக்கு நம் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

தமிழக முதல்வரின் 85ம் பிறந்த நாளான இன்று அவர் பல்லாண்டு நீடூழி வாழ இறைவனை(இயற்கையை?) வேண்டுவோம்.
இந்த இளைஞரின் இன்றைய நிகழ்ச்சியை பாருங்கள்.
காலை7 மணி - அண்ணா நினைவிடம்
7.15 -பெரியார் நினைவிடம்
8 மணிக்கு-கோபாலபுரம் இல்லத்தில் வாழ்த்து பெறுதல்
(இதில் பல்வேறுஅரசியல் கட்சிகள் தலைவர்கள்,அரசு அதிகாரிகள்,திரைஉலக
பிரமுகர்கள் பலரும் வாழ்த்துவர்.)
9 மணிக்கு -அண்ணாஅறிவாலயம் -லட்ச்சக்கணக்காண தொண்டர்களை சந்திக்கிறார்
(இது 1 மணி வரை)
பின்னர் சி.ஐ.டி.காலனி வீட்டிற்கு செல்கிறார்
இரவு 7 மணிக்கு தீவுத்திடலில் பல மத்திய அமைச்சர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம்.

இதற்கான பாதுகாப்பு ஏற்பாடில் 3 இணை கமிஷனர்கள்,10துணைகமிஷனர்கள்,50 உதவி கமிஷனர்கள்
123 இன்ஸ்பெக்டர்கள்,182 சப் இன்ஸ்பெக்டர்கள்,1100போலீசார்,700 ஆயுதப்படை போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
(உபரிச்செய்தி. நான் நீண்டநாள் வாழ ஆசைப்படக்காரணம்..இன்னும் தமிழுக்கு தொண்டு செய்ய வேண்டிய து
பாக்கி இருக்கிறது என்று சொன்ன கலைஞர்'என் பிறந்தநாளில் யாசகம் கேட்கிறேன்..சேதுதிட்டத்தை நிறைவேற்றித்தாருங்கள்'என உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.)

1 comment:

Anonymous said...

I love DMK karunanathi sir