Friday, February 15, 2013

வாய் விட்டு சிரிங்க..





1)நோயாளி- (மருத்துவரிடம்) டாக்டர் சளி அதிகமாய் இருக்கு..உடனே கரைக்கணும்
மருத்துவர்-முதல்ல ஒரு ஆபரேஷன் பண்ணிடறேன்..அப்புறம் உங்க உறவு..கரைக்கறது..எரிக்கிறது எல்லாம் தீர்மானிக்கட்டும்.

2)நீதிபதி-துணிக்கடையில நுழைந்து ஒரு லட்சம் மதிப்புள்ள பொருள்களை திருடினதை ஒப்புக்கொள்கிறாயா
குற்றவாளி-75000 மதிப்பு பொருள் தாங்க..கடையில் 25 சதவிகிதம் தள்ளுபடி அறிவிச்சிருக்காங்களே

3)தலைவர் கிரிக்கெட் மேட்சுன்னா விட மாட்டார்..கண்டிப்பா போயிடுவார்..
கிரிக்கெட் மேல அவ்வளவு பற்றா
சேச்சே..சியர்ஸ் கேர்ள்ஸ் ஆட்டத்திலதான் பற்று

4)தலைவருக்கு தமிழ் மேல பற்றுன்னு எப்படி சொல்ற
சிரிக்கும் போது கூட ஹி..ஹி..ன்னு சிரிக்காம கீ..கீ..ன்னுதான் சிரிக்கிறார்

5)என்னங்க..அடுத்த ஜென்மத்திலும் நீங்கதான் என் கணவராய் வருவீங்கன்னு ஜோசியக்காரன் சொன்னான்
அப்போ..எனக்கு திரும்பவும் நரகம் தானா

6)உன் கூடப் பொறந்தவங்க..எத்தனைப் பேர்..
ம்..மூணு சகோதரன்..நாலு சகோதரி..இல்லை இல்லை ம்ம்..
இதுக்குப் போய் இப்படி யோசிக்கறே
எங்கப்பா யோசிக்கலையே..அதுதான்.

8 comments:

கார்த்திக் சரவணன் said...

கீ கீ கீ கீ

Unknown said...

ஹா ஹா ஹா... சிறப்பு

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஸ்கூல் பையன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Ayesha

Muruganandan M.K. said...

ஹா ஹா அருமை

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Muruganandan M.K. sir

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ரைட்டு தலைவரே...

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
கவிதை வீதி... சௌந்தர்