Sunday, February 17, 2013

வாய் விட்டு சிரிங்க..




1.நேற்று ரமேஷ் வீட்டுக்குப் போனேன்..ஒரு காஃபி கூட குடுக்கலை
அவர் கஷ்டம் அவரோட போகட்டும்னு நினைச்சிருப்பார்

2.பஞ்ச பாண்டவருக்கு ஒரே மனைவி..
இதில் என்ன ஆச்சர்யம்..எனக்கும் ,என் அண்ணனுக்கும் கூடத்தான் ஒரே மனைவி
என்ன சொல்ற நீ
அவருக்கும் ஒரு மனைவி...எனக்கும் ஒரு மனைவி...அதைத்தான் சொன்னேன்

3.டாக்டர்- முன்னே எல்லாம்..நான் ஒரு நாளைக்கு இருபது ஆபரேஷன் செய்வேன்..ம்..அதெல்லாம்..இறந்த காலம்
நோயாளி-இப்ப நீங்க ஒரு ஆபரேஷன் செய்தாலும்..அது நோயாளியோட இறந்த காலம்

4வயதானவர்-(கல்யாண தரகரிடம்) நல்ல பெண்ணாயிருந்தா சொல்லுங்க..
தரகர்-யாருக்கு
வயதானவர்-எனக்குத்தான்..அடுத்த மாசத்தோட எனக்கு அறுபது வயசாகிறது.அப்போ ஒரு கல்யாணம் பண்ணிகலாமாமே...

5.கலாவதியை காதலிச்சுட்டு இருந்தியே..அது என்னாச்சு
அது காலாவதி ஆயிடுச்சு

6.பெண்ணின் தந்தை- என் பொண்ணு..தமிழும்..ஆங்கிலமும் கலந்து நுனி நாக்குல பேசுவா
நண்பர்-சுருக்கமா...தமிழ் டி.வி.சானல்ல காம்பியரிங்க் பண்றான்னு சொன்னா போதுமே..



6 comments:

கார்த்திக் சரவணன் said...

ஹா ஹா ஹா... ரசித்தேன்...

”தளிர் சுரேஷ்” said...

நகைக்க வைத்த நகைச்சுவைகள்! நன்றி!

கும்மாச்சி said...

நல்ல நகைச்சுவை, பகிர்விற்கு நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி S suresh

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஸ்கூல் பையன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி கும்மாச்சி