Wednesday, September 24, 2014

குறுந்தொகை - 114


தோழி கூற்று
(தலைவியை அவனை சந்திக்கும் இடத்தில் நிறுத்தி வந்த தோழி தலைவனிடம் வந்து அதனைக் குறிப்பாகப் புலப்படுத்தியது.)

நெய்தல் திணை - பாடலாசிரியர் பொன்னாகன்.

இனி பாடல்-

நெய்தற் பரப்பிற் பாவை கிடப்பி
   
நின்குறி வந்தனெ னியறேர்க் கொண்க
   
செல்கஞ் செலவியங் கொண்மோ வல்கலும்
   
ஆர லருந்த வயிற்ற

நாரை மிதிக்கு மென்மக ணுதலே.

                -பொன்னாகன்.

உரை-

இயற்றப்பட்ட தேரை உடைய தலைவனே! நெய்தல் நிலத்தில் எனது பாவையை வளர்த்திவிட்டு நீ இருக்குமிடத்து வந்தேன்.இரவு வருதலும் ஆரல் மீனை அருந்தி நிறைந்த வயிற்றையுடைய ஆகிய நாரைகள் என் மகளாகிய அப்பெண்ணின் நெற்றியை மிதிக்கும்.நான் செல்கிறேன்.அவளை போகும்படி நீயே சொல்வாயாக.
   
   

     (கருத்து) தலைவியைக் கண்டு அளவளாவி விரைவில் விடுப்பாயாக.


     (என் மகள் என்றது பாவையை, பாவையினிடத்தே அன்பு பூண்டு அதனைப் போற்றி வளர்த்தலும், மணம் முதலிய செய்து மகிழ்தலும் மகளிர்க்கு இயல்பு.)

No comments: