Thursday, November 24, 2016

கலைஞர்



திரைப்பட வசனகர்த்தா, காதாசிரியர்,பாடலாசிரியர், படத்தயாருப்பாளர்,நாடக நடிகர்,இலக்கியவாதி,அரசியல்வாதி, பத்திரிகையாளர், மனித நேயம் மிக்கவர்..அப்பப்பா...இவருக்குத்தான் எத்தனை முகங்கள்
எதற்கெடுத்தாலும் நேரமில்லை என சோம்பித்திரியும் பலரை நாம் அறிவோம்.இயற்கை அவர்களுக்கு அளித்துள்ள ஒரு நாளுக்கான இருபத்தி நான் கு மணி நேரத்தைத்தான் கலைஞருக்கும் வழ்னகி இருக்கிறது.ஆனால், அதை வைத்துக் கொண்டு அவர் வாழ்நாளில் அவர் சாதித்துவரும் சாதனைகள்...இதை எண்ணும்போது பிரமிப்பாய்த்தான் இருக்கிறது
நாகப்பட்டிணம் மாவட்டம், திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3ஆம் நாள் முத்துவேல், அஞ்சுகம் தம்பதியருக்கு பிறந்தது ஒரு ஆண் மகவு.அக்குழ்ந்தைக்கு தட்சிணாமூர்த்தி என்று பெயர் இடப்பட்டது.அக்குழ்ந்தையே பின்னாளில் பல சாதனைகள் புரிந்த கலைஞர் கருணாநிதி ஆவார்.
1947ஆம் ஆண்டு ராஜகுமாரி என்ற படம் மூலம் அவரது திரையுலக பிரவேசம் நடந்திருந்தாலும், அவரது எழுத்தாற்றல் 14 வயதிலேயே கையெழுத்துப் பிரதி பத்திரிகை நடத்தும் அளவிற்கு இருந்தது
அவரது வயது ஏற ஏற..எழுத்தாற்றலும் வளர்ந்தது.பகுத்தறிவு, திராவிடம் ஆகிய கருத்துகளின் அடிப்படையில் கதைகள், கட்டுரைகள், அண்ணா நடத்தி வந்த திராவிட நாடு முதலிய பத்திரிகைகளில் வந்தன
நாடகத் துறையிலும் அவரது பேனா சென்றது.பழநியப்பன் என்ற நாடகத்தில் ஆரம்பித்து தூக்கு மேடை,மணிமகுடம்,விமலா அல்லது விதவையின் கண்ணீர்,அம்மையப்பன், வாழமுடியாதவர்கள் என அவர் எழுதிய நாடகங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்
தூக்குமேடை நாடகத்திற்கு வந்த எம் ஆர் ராதா, கருணாநிதிக்கு, கலைஞர் என்று பட்டமளித்து பாராட்டினார்.
அதுவே அவரது பெயராகக் குறிப்பிட ஆரம்பித்துவிட்டது எனலாம்
தமிழ்த் திரைப்ப்ட உலகில் பெரும் திருப்புமுனையை உண்டாக்கிய அவரின் எழுத்துக்கள், வீரம்,காதல்,சோகம், நையாண்டி,தத்துவம் என அணைத்து பரிமாணங்களிலும் விளையாடியது,தன் திரைப்பணி மூல்மாக சமுக மாற்றத்தை ஏற்படுத்தியவர் எனலாம்
வெறும் கதை, வசனகர்த்தாவாக மட்டுமில்லாமல் ஒரு தயாரிப்பாளராக மேகலா பிக்சர்ஸ்,அஞ்சுகம் பிக்சர்ஸ்,கலையெழில் கம்பைன்ஸ்,பூம்புகார் புரடக்சன்ஸ் ஆகிய நிறுவனங்கள் மூலமாக 29 படங்களை கலைஞர் தயாரித்துள்ளார்.
60 ஆண்டுகளில் 75 திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதி, திரைப்பட ரசிகர்களின் உள்ளத்தைக் கொள்ளைக் கொண்டவர் இவர்.
நூற்றாண்டு கண்ட திரையுலகில் 70ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வருபவர்.வெள்ளித்திரை மட்டுமின்றி, சின்னத்திரையிலும், ரோமாபுரி பாண்டியன், ராமானுஜர், தென் பாண்டி சிங்கம் என சாதனை புரியும் சாதனையாளர்
திரையுலகின் தாதா சாகேப் பால்கே விருது, இந்த மாமனிதருக்கு இன்னமும் வழ்ங்கப்படாதது துரதிருஷ்டமே.
திரையுலகின் மூத்த பெருமகனான இவருக்கு அந்த விருது கிடைத்திட...இப்பதிவைக் காணும் அனைவரும் ஷேர் செய்யவும்.திரையுலகைச் சேர்ந்தவர்கள்..சம்பந்தப் பட்டவர்களிடம் சொல்லவும்.
முடிந்தால்..கலைஞர் பாணியிலேயே மைய அரசுக்கு கடிதங்களையும் எழுதலாம் ஆயிரக்கணக்கில்

No comments: