Thursday, December 6, 2018

அடுத்தவீட்டு ஜனன்ல் - 17

_________________
எஸ்.ராதாகிருஷ்ணன்  (ராது)
____________________________

1962ஆம் ஆண்டு..இந்திய-சீன யுத்தம் நடக்கிறது.மக்கள் தங்களால் ஆன நன்கொடைகளை யுத்தநிதியாக வழங்கி வருகின்றனர்,
இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் சென்னைக் கிளையும் ஒரு நாடகம் நடத்தி யுத்தநிதியினைத் திரட்ட நினைத்தது.
இதுநாள்வரை பிற நாடகக் குழுக்களின் நாடகங்களைக் கண்டு ரசித்து வந்த ரிசர்வ் வங்கி ஊழியர் ராதாகிருஷ்ணன்  'ஜெயம் நமதே"என்ற நாடகத்தை எழுதினார்.இது இவரின் கன்னி முயற்சி.
இவரே, பினனாளில் நாடக உலகில் ராது என அறியப்பட்ட பெரும் சக்தியாய் திகழ்ந்தார்.
தன் நண்பர்களுடன் சேர்ந்து "கீதா ஸ்டேஜ்" என்ற குழுவினை ஆரம்பித்தார் ராது. இன்றும் மக்களால் மறக்க முடியாத 45 ஆண்டுகளுக்கும் மேல் பல்வேறு நடிகர்களால் நடிக்கப்பட்ட "கல்யாணத்தில் கலாட்டா" என்ற நாடகத்தை எழுதி அரங்கேற்றினார்.
இவரது அடுத்த நாடகம் "வாய்ச்சொல்லில் வீரரடி"
இந்நிலையில், ஆனந்த விகடனிலும் பின்னர் இதயம் பேசுகிறது என்ற பத்திரிகையிலும் ஆசிரியராய் இருந்த மணியன், "மயன் தியேட்டர்ஸ்" என்ற குழுவினை ஆரம்பித்து அதை ராதுவிடம் ஒப்படைத்தார்.
"சப்தஸ்வரங்கள்" நாடகம் அரங்கேறியது.அதில், பிரபல நகைச்சுவை நடிகர் கே.ஏ தங்கவேலுவும். எம் சரோஜாவும் நடித்தனர்
இவரால் நாடக மேடைக்கு வந்தவர்கள் ஏராளம்.காத்தாடி ராமமூர்த்தி, வி.கோபாலகிருஷ்ணன், நவ்ரங் விசு,அறந்தை மணியன் ஆகியோர் இவர் குழுவில் நடித்தவர்கள்

1983ல் ஒரே நாளில் "கல்யாணத்தில் கலாட்டா" நாடகம் எட்டு முறை நடத்தப் பட்டு லிம்கா புக் ஆஃப் ரிகார்ஸில் இடம் பெற்றது.தவிர்த்து ஒரே நாடகம் பத்து முறை நடந்து மீண்டும் ரிகார்ட ஆனது
1992ல் இவரது 15 நாடகங்கள் ஒரே நாளில் நடந்துள்ளன
எஸ்.வி.சஹஸ்ரநாமம் குழுவினரால் நடத்தப்பட்டு, பி எஸ் ராமையா எழுதிய "போலீஸ்காரன் மகள்",. "பிரஸிடெண்ட் பஞ்சாட்சரம்" ஆகிய நாடகங்களை 1992ல் ராது மீண்டும் நாடகமேடையேற்றினார்.
தன் குழுவினரைத்தவிர, தில்லை ராஜன், நவ்ரங் விசு,அமிர்தம் கோபாலின் கீதாஞ்சலி ஆகியோருக்கும்  இவர் நாடகம் எழுதித் தந்துள்ளார்
நவ்ரங் ஆர்ட்ஸிற்கு இவர் எழுதித்தந்த . "மை டியர் குட்டிப் பிசாசு".தரை தட்டிய கப்பல்" "மண்ணில் தெரியுது வானம்" ஆகிய நாடகங்களும், தில்லை ராஜனுக்கு எழுதிய , "பாவ மன்னிப்பு",  ஆகியவை மறக்க முடியா நாடகங்கள்.
தவிர்த்து, நாடக அகடெமி என்ற நிறுவனம் ஒன்றைத் தொடங்கி, பல நாடகக்குழுக்களின் நாடகத்திற்கு வாய்ப்பளித்தார்
தமிழக அரசின், "கலைமாமணி" விருது பெற்ற ராதுவின் கலைப்பணி அளப்பரியது
2009ல் நம்மைவிட்டுப் பிரிந்த இவரது சேவையைத் தொடர்ந்து இவரது மகள் பிரியா,மருமகன் கிஷோர் ,பேரன் அம்பரீஷ் ஆகியோர் தொடர்ந்து வருகின்றனர்   

No comments: