Friday, December 14, 2018

சாகித்ய அகடெமி விருதுகள்

இந்தக் கட்டுரை "சாகித்ய அகடெமி" விருதுகள் பற்றியோ அல்லது அதைப் பெற்றவர்கள் தகுதிகள் குறித்தோ எழுதப் பட்டதல்ல என்பதை மனதில் இருத்திக் கொண்டு படிக்கவும்.

இந்த ஆண்டு சாகித்ய அகடெமி விருது பெற்றவரின் நாவல்  2014 ஆம் ஆண்டு பதிப்பிக்கப் பட்டது.

விருது பெற்றவர் பெயர் வெளியாவதற்கு முன் சில பிரபல எழுத்தாளர்கள் பெயர்கள் உலா வந்தன..

எனக்கு எழுத்துள்ள சந்தேகம்..

1)தேர்வுக்கான எழுத்தாளரைத் தேர்ந்தெடுத்த பின் அவர் எழுதியுள்ள நாவல்களைப் படித்து (எப்போது எழுதி இருந்தாலும் பரவாயில்லை என)தேர்வாளர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறதா?

2)அல்லது பிரசுரமாகியுள்ள அனைத்து எழுத்தாளர்களின் எழுத்துகளை , அது பதித்து எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் பரவாயில்லை என பார்க்கப்படுகிறதா? (இது சாத்தியமில்லை)

3)இல்லை..விருதிற்காக சில எழுத்தாளர்களின் எழுத்துகளே படிக்கப் படுகிறதா?


பின் எப்படி ஒரு எழுத்து 4 ஆண்டுகளுக்குப் பின் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப் படுகிறது?அத்ற்குப் பிறகு இந்த எழுத்தாளர் எவ்வளவோ எழுதி விட்டாரே!

மேலே சொன்ன முதல் காரணப்படி எனில், பல எழுத்தாளர்களின் சிறந்த படைப்புகள் இவர்கள் கண்களில் படாமல் போகும் சந்தர்ப்பங்கள் அதிகமாயிற்றே!

விவரம் அறிந்தவர்கள் சந்தேகங்களைத் தீர்த்து வைப்பார்களா?

No comments: