தீபாவளியை முன்னிட்டு பதிவர் சந்திப்பு சென்னையில் ஒரு சத்திரத்தில் நடந்தது..அதில் கலந்துக் கொள்ளுமாறு புரூனோ அனைவருக்கும் எஸ்.எம்.எஸ்., பண்ணியிருந்தார்..தவிர்த்து அனைவரையும் அலைபேசியில் 'வந்துடுங்க..வந்துடுங்க.." என்று அழைத்தார்.
முதலில் மண்டபத்திற்கு வந்த டோண்டு யாரும் இல்லாததால் தனக்குத் தெரிந்த பதிவர்களை அலைபேசியில் அழைத்து..6 மணிக்கு பதிவர் சந்திப்பு என்றீர்கள்..இதுவரை யாரும் வரவில்லையே..எங்க வீட்டு அம்மா பார்த்தசாரதி கோவிலுக்கு போற வழியில் கார்ல என்னை இறக்கிவிட்டுட்டுப் போயிட்டாங்க என புலம்பத் தொடங்கிவிட்டார்.
அலைபேசி அடித்ததும்..நான் இணை இயக்குநரா இருக்கிற பட ஹீரோயின் அழைக்கறாங்கன்னு நினைச்சு ஆவலா போனை எடுத்தா புரூனோ..'சரி வரேன்..னு சொல்லிட்டு மணிஜீயை அழைச்சுண்டு கிளம்பினா ..வழியில ஒரு கட்டிங் போட்டாத்தான் மணிஜி வருவேன்னு சொல்லிட்டார்..சரின்னு அவரோட கிண்டிவரை போய் கட்டிங் போட்டுட்டு..பக்கத்தில ராமலிங்க விலாஸ் னு ஒரு ஓட்டல்..அங்கே ஃபிஷ் ஃப்ரையை..அளவா உப்பு, காரம் போட்டு தயார் பண்ணுவாங்க..ரொம்ப சூபராயிருக்கும்..அதையும் சாப்பிட்டு பதிவர் சந்திப்புக்குக் கிளம்பினோம்.என்றார் கேபிள்..
இந்தத் தீபாவளியாவது தோழியுடன் கொண்டாடலாம்னு பார்த்தேன்..'ம்..ம்..ம்' என சலித்துக் கொண்டார் கார்க்கி
நான் லோகல்தான்..எக்ஸ்பிரஸோ..மைலோ இல்லை..அதனால என்னாலே லேட்டாய்தான் போகமுடியும் என மெதுவாகக் கிளம்பி வந்தார் ஜாக்கி..
பணத்தைத் தேடித்தான் மக்கள் ஓடறாங்க..சந்திப்பிலே கலந்துக்க பணம் கிடைக்கும்னா..திருட்டு ரயில்/பஸ் ஏறியாவது வந்துவாங்க கூட்டம் என்றார் செந்தில்.
என் வாழ்க்கை திருப்திகரமா போயிட்டு இருக்கு..அதுக்காக நான் யாரையும் போய் பார்க்கணும்ங்கறதில்லே..ஃபெட்னாக்கு போன போது கூட இதை நான் ஒருத்தர்கிட்ட சொன்னேன்..என்றார் அப்துல்லா
நடுவே டோண்டு..'ஆமாம் இந்த சத்திரத்துக்கு எவ்வளவு வாடகை..யார் யார் தராங்க?' 'என வினவினார்..கையில் ஒரு நோட்டு புத்தகத்தைத் திறந்துவைத்துக் கொண்டு.
வண்டியை தாம்பரத்தில விட்டுட்டு..மின்சார ரயில் பிடிச்சு மாம்பலத்திலே இறங்கினா..'ரங்கநாதன் தெரு'வை தாண்டரதுக்குள்ள தாவு தீர்ந்துப் போச்சு என்று ஆதியிலிருந்து சொல்ல ஆரம்பிச்சார் ஆதி.
'இதைத்தான்..'குறுந்தொகை'யில ஒரு பாட்டில சொல்லியிருக்காங்க.வரப்புல ஒரு சமயம் என் நண்பனோட நடந்து வரப்போ..'ந்னு நர்சிம் ஆரம்பிக்க..அவர் இடுகையை படிக்கும் ஞாபகத்தில் அனைத்து பதிவரும்..'அருமை..அருமை..'என்றனர்.
'என் வலைய தமிழ் மக்களே!'என ஆஜரானார் உண்மைத் தமிழன்..நான் சாதாரணமா பதிவர் சந்திப்புக்கு வருவதில்லை..இன்றும் அப்படியே' என்றவரிடம்..பின்ன ஏன் இங்கு வந்தீங்க என மணீஜீ விசாரிக்க..'போடா'ன்னு ஒரு படம் பார்த்தேன்..என்னைச்சேர்த்து 12 பேர் தான் தியேட்டர்ல.பதிவர் சந்திப்புக்கு அதைவிட கொஞ்சமாவது அதிகமாக வருவாங்க்ன்னு தெரியும்..அதனால அந்த பட விமரிசனத்தை இங்கே சொல்லிடலாம்னு..வந்தேன்' என்றார்.
'அண்ணே..அதை முதல்லேயே நான் சொல்லிட்டேன்' என்று குரல் கொடுத்தார் ஜெட்லீ..
நான் ஷூட்டிங்ல பிசியா இருக்கறதாலே அப்படத்தை இன்னும் பார்க்கலை ன்னு கேபிள் வருத்தப்பட்டார்.தன் மொபைல்ல வந்தவங்களை பட்ம் பிடித்தார் காவேரி கணேஷ்.
லக்கியும்,அதிஷாவும்..கூட்டம் டீக்கடைக்கு கிளம்பும் நேரம் வந்து சேர்ந்தனர்.இவர்களுக்காக டீக்கடையில் காத்திருந்த ஜ்யோவ்ராமை சுற்றி மேலும் சிலர் நின்று அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.
கூட்டமாக வந்தாலும்..குரூப்..குரூப்பாக டீ ஆர்டர் செய்ய..நாப்பது டீ போட்டோம்..முப்பதுக்குத்தான் காசு வந்ததுன்னு டீக்கடைக்காரர் புலம்பினார்.
ஆமாம்..தீபாவளி பதிவர் சந்திப்புன்னாங்க..தீபாவளிப் பற்றியும் பேசலை..வேற எந்த விஷயங்களையும் எப்போதும் போல பேசலையே என அவரவர் நினைத்துக் கொண்டு பிரிந்தனர்
ஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்
Showing posts with label புனைவு - நகைச்சுவை. Show all posts
Showing posts with label புனைவு - நகைச்சுவை. Show all posts
Tuesday, November 2, 2010
Tuesday, August 17, 2010
நசரேயன்.. (ஒரு பக்கக் கதை)
'என்னங்க..இன்னிக்கு நம்ம பையன் ஸ்கூல்ல.. அப்பாவையோ..அம்மாவையோ..அழைச்சுட்டு வரச் சொன்னாங்களாம்..நீங்க இன்னிக்கு ஆஃபிஸிற்கு லீவைப் போட்டுட்டு போயிட்டு வாங்களேன்' என்கிறார் அம்மா.
'அதெல்லாம்..முடியாது..எனக்கு ஆஃபீஸ்ல வேலை அதிகம் இருக்கு..அவன் உனக்கும் பிள்ளைதானே..நீயே போயிட்டு வா' என்று அப்பா சொல்லிவிட்டார்.
அம்மா..மகனை அழைத்துக் கொண்டு பள்ளிக்குச் சென்று முதல்வரைப் பார்த்தார்.அவர்..'இதோ பாருங்க அம்மா..இப்பவெல்லாம் எட்டாவது வகுப்பு வரை யாரையும் எந்த வகுப்பிலேயும் ஃபெயில் பண்ணக்கூடாது.அதை வைச்சு உங்க பையன் எட்டாவது வரை வந்துட்டான்..இனி ஒன்பதாம் வகுப்பிலே இருந்து..இறுதித் தேர்வில் தேறினால்தான் அடுத்த வகுப்பிற்குப் போகமுடியும்.அப்படி உங்க பையன் போகணும்னா..தமிழை தப்பில்லாம எழுதணும்.அதனால முதல் காரியமா..இன்னும் தாமதப் படுத்தாம அவனை தமிழில் தப்பு இல்லாம எழுத பழக்குங்க' என்றார்.
'சரி' என அவரிடம் தலையாட்டி விட்டு வெளியே தனது மகனுடன் வந்த அம்மா...அவனைப் பார்த்து 'இப்படியே இருந்தா..என்ன செய்யப் போறே..' என்றார்.
'கவலைப்படாதே அம்மா...தமிழ்த் தெரியாத ஊர்ல போய் என் தமிழை வளர்த்துப்பேன்' என்றான் மகன்.
அதன் படியே எப்படியோ தேறி..(போலி மதிப்பெண்ணா..அல்லது போலி சான்றிதழா!!) வெளி நாட்டில் வேலை செய்ய கிளம்பிவிட்டான் மகன்
'அதெல்லாம்..முடியாது..எனக்கு ஆஃபீஸ்ல வேலை அதிகம் இருக்கு..அவன் உனக்கும் பிள்ளைதானே..நீயே போயிட்டு வா' என்று அப்பா சொல்லிவிட்டார்.
அம்மா..மகனை அழைத்துக் கொண்டு பள்ளிக்குச் சென்று முதல்வரைப் பார்த்தார்.அவர்..'இதோ பாருங்க அம்மா..இப்பவெல்லாம் எட்டாவது வகுப்பு வரை யாரையும் எந்த வகுப்பிலேயும் ஃபெயில் பண்ணக்கூடாது.அதை வைச்சு உங்க பையன் எட்டாவது வரை வந்துட்டான்..இனி ஒன்பதாம் வகுப்பிலே இருந்து..இறுதித் தேர்வில் தேறினால்தான் அடுத்த வகுப்பிற்குப் போகமுடியும்.அப்படி உங்க பையன் போகணும்னா..தமிழை தப்பில்லாம எழுதணும்.அதனால முதல் காரியமா..இன்னும் தாமதப் படுத்தாம அவனை தமிழில் தப்பு இல்லாம எழுத பழக்குங்க' என்றார்.
'சரி' என அவரிடம் தலையாட்டி விட்டு வெளியே தனது மகனுடன் வந்த அம்மா...அவனைப் பார்த்து 'இப்படியே இருந்தா..என்ன செய்யப் போறே..' என்றார்.
'கவலைப்படாதே அம்மா...தமிழ்த் தெரியாத ஊர்ல போய் என் தமிழை வளர்த்துப்பேன்' என்றான் மகன்.
அதன் படியே எப்படியோ தேறி..(போலி மதிப்பெண்ணா..அல்லது போலி சான்றிதழா!!) வெளி நாட்டில் வேலை செய்ய கிளம்பிவிட்டான் மகன்
Friday, July 16, 2010
அபி அப்பாவும்..தொண்டர்களும்..
உடன்பிறப்பு இடுகை ஒன்றிற்கு அபி அப்பாவின் பின்னூட்டம் இது..
//அபி அப்பா said...
கோவை பொதுகூட்டத்திலே புரட்சி தலைவி இந்த மைனாரிட்டி திமுக ஆட்சியிலே விவசாயம் அழிஞ்சு போச்சுன்னு ஒப்பாரி வச்சாங்க. அதுக்கு உடன்பிறப்பு பதில் சொல்லலைன்னா நான் அ.தி.மு.கவுக்கு போய்விடுவேன் என மெரட்டுகின்றேன்:-))//
அதைப் படித்ததால் இந்த இடுகை
அபி அப்பா உண்மையில் அ.தி.மு.க., வில் சேரப்போவதாகச் சொல்லியிருக்கிறார் என எண்ணிய 'ஜெ' சசிகலாவைக் கூப்பிட்டு..'யாரையேனும் அனுப்பி அவரை என் முன்னிலையில் அ.தி.மு.க., அலுவலகத்தில் வந்து சேரச் சொல்..உடன் ஜெயகுமாரிடம் சொல்லி ஆயிரம் பேரை ஏற்பாடு பண்ணச் சொல்,,அபி அப்பா ஆயிரம் பேருடன் வந்து அ.தி.மு.க.,வில் சேர்ந்தார் என நமது எம்.ஜி.ஆரில் போட்டுவிடுவோம்' என்கிறார்.
சசிகலா உடன் பன்னீரைக் கூப்பிடுகிறார்..அம்மா சொன்னதைச் சொல்லி அபி அப்பாவைப் பார்க்கச் சொல்கிறார்..சசியைக் கண்டதும் கும்பிட்ட பன்னீர் 'ஆமாம் ..இதுக்கு மட்டும் நான் வேணும்..மத்த சமாச்சாரங்களுக்கு தினகரனும்..இளவரசியும்......' முணுமுணுக்க ஆரம்பிக்கிறார்.
அவர் முணுமுணுப்பை முடிப்பதற்குள்..'என்ன..'என மிரட்டல் தொனிக் கேட்க..'உடனே செஞ்சுடறேன்' என்கிறார்.
ஜெயகுமாரைப் பார்த்து ஆயிரம் பேர் விஷயத்தைச் சொன்னதும்...அதற்கென்ன இரண்டாயிரம் பேரையே ஏற்பாடு செய்கிறேன்..என்கிறார் அவர்.
பன்னீர் அபி அப்பாவைப் பார்த்து விஷயத்தைச் சொன்னதுடன் நில்லாது..அம்மாகிட்ட 2011லே ராஜ்யசபா சீட்டும் வாங்கித் தரேன் என்கிறார்.
சிறிது யோசித்த அபி அப்பா ஒப்புக் கொள்கிறார் ..அதற்குள் விஷயம் மாயவரம் முழுதும் பரவ ஆயிரக்கணக்கில் அ.தி.மு.க. வினர் அபி அப்பா வீடுமுன் கூடிவிடுகின்றனர்.அவர்களிடம் தான் ஒரு நிமிடம் தனியாக பேச வேண்டும் என்கிறார் அபி அப்பா.பன்னீரும் ஒப்புக் கொள்கிறார்.
அடுத்த நாள் அம்மா கட்சி அலுவலகத்தில் பத்திரிகையாளருடன் காத்திருக்கிறார்.
ஆனால் அபி அப்பா அழைத்து வந்த பல்லாயிரக்கணக்கான அ.தி.மு.க.வினர் தி.மு.க.வில் சேர்ந்ததாக முரசொலியில் செய்தி வருகிறது
//அபி அப்பா said...
கோவை பொதுகூட்டத்திலே புரட்சி தலைவி இந்த மைனாரிட்டி திமுக ஆட்சியிலே விவசாயம் அழிஞ்சு போச்சுன்னு ஒப்பாரி வச்சாங்க. அதுக்கு உடன்பிறப்பு பதில் சொல்லலைன்னா நான் அ.தி.மு.கவுக்கு போய்விடுவேன் என மெரட்டுகின்றேன்:-))//
அதைப் படித்ததால் இந்த இடுகை
அபி அப்பா உண்மையில் அ.தி.மு.க., வில் சேரப்போவதாகச் சொல்லியிருக்கிறார் என எண்ணிய 'ஜெ' சசிகலாவைக் கூப்பிட்டு..'யாரையேனும் அனுப்பி அவரை என் முன்னிலையில் அ.தி.மு.க., அலுவலகத்தில் வந்து சேரச் சொல்..உடன் ஜெயகுமாரிடம் சொல்லி ஆயிரம் பேரை ஏற்பாடு பண்ணச் சொல்,,அபி அப்பா ஆயிரம் பேருடன் வந்து அ.தி.மு.க.,வில் சேர்ந்தார் என நமது எம்.ஜி.ஆரில் போட்டுவிடுவோம்' என்கிறார்.
சசிகலா உடன் பன்னீரைக் கூப்பிடுகிறார்..அம்மா சொன்னதைச் சொல்லி அபி அப்பாவைப் பார்க்கச் சொல்கிறார்..சசியைக் கண்டதும் கும்பிட்ட பன்னீர் 'ஆமாம் ..இதுக்கு மட்டும் நான் வேணும்..மத்த சமாச்சாரங்களுக்கு தினகரனும்..இளவரசியும்......' முணுமுணுக்க ஆரம்பிக்கிறார்.
அவர் முணுமுணுப்பை முடிப்பதற்குள்..'என்ன..'என மிரட்டல் தொனிக் கேட்க..'உடனே செஞ்சுடறேன்' என்கிறார்.
ஜெயகுமாரைப் பார்த்து ஆயிரம் பேர் விஷயத்தைச் சொன்னதும்...அதற்கென்ன இரண்டாயிரம் பேரையே ஏற்பாடு செய்கிறேன்..என்கிறார் அவர்.
பன்னீர் அபி அப்பாவைப் பார்த்து விஷயத்தைச் சொன்னதுடன் நில்லாது..அம்மாகிட்ட 2011லே ராஜ்யசபா சீட்டும் வாங்கித் தரேன் என்கிறார்.
சிறிது யோசித்த அபி அப்பா ஒப்புக் கொள்கிறார் ..அதற்குள் விஷயம் மாயவரம் முழுதும் பரவ ஆயிரக்கணக்கில் அ.தி.மு.க. வினர் அபி அப்பா வீடுமுன் கூடிவிடுகின்றனர்.அவர்களிடம் தான் ஒரு நிமிடம் தனியாக பேச வேண்டும் என்கிறார் அபி அப்பா.பன்னீரும் ஒப்புக் கொள்கிறார்.
அடுத்த நாள் அம்மா கட்சி அலுவலகத்தில் பத்திரிகையாளருடன் காத்திருக்கிறார்.
ஆனால் அபி அப்பா அழைத்து வந்த பல்லாயிரக்கணக்கான அ.தி.மு.க.வினர் தி.மு.க.வில் சேர்ந்ததாக முரசொலியில் செய்தி வருகிறது
Subscribe to:
Posts (Atom)