Showing posts with label மரணதண்டனை. Show all posts
Showing posts with label மரணதண்டனை. Show all posts

Tuesday, August 30, 2011

மரணதண்டனை..சில விவரங்கள்




சுதந்திரம் பெற்றது முதல் இதுவரை இந்தியாவில் 52 பேர் மரணதண்டனை (தூக்கிலிடப்பட்டதாக) அடைந்துள்ளதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.
1995ல் ஆடோ சங்கர் தூக்கிலிடப்பட்டார்.2004ல் ஆகஸ்ட் மாதம் தனஞ்செய் சட்டெர்ஜி என்பவர் தூக்கிலிடப்பட்டார்.அதன் பின் இ துவரை தூக்குதண்டனை நிறைவேற்றப்படவில்லை.
1992 முதல் 29 கருணை மனுக்கள் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.அதில் சாந்தன்,முருகன்,பேரறிவாளன் ஆகியோர் மனுக்களும் அடக்கம்.
அரிதினும் அரிதான வழக்கில்தான் மரணதண்டனை வழங்க வேண்டுமென 1983 ஆம் ஆண்டில் உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதுவரை 96 நாடுகள் மரணதண்டனையை நீக்கிவிட்டன.34 நாடுகள் தண்டனையை நீக்காவிடினும் இது போன்ற தண்டனையைக் கொடுக்கமாட்டோம் என அறிவித்துள்ளன.ஆனால் அமெரிக்கா,இந்தியா,சீனா உட்பட 58 நாடுகள் இன்னும் தூக்குதண்டனையை விடவில்லை.
பஞ்சாப் முதல்வராய் இருந்த கெய்ரோன்சுட்டுக் கொல்லப்பட்டார்.இவ்வழக்கில் தயாசிங் என்பவர்க்கு மரணதண்டனை வழங்கப்பட்டது.இவரது கருணைமனுவும் நீண்ட நாட்கள் கழித்து நிராகரிக்கப்பட்டது.ஆகவே அவர் 1991 ஆம் ஆண்டு உச்ச நீதி மன்ற நீதிபதிக்கு கடிதம் எழுதினார்.அதை மனுவாக ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், தயாசிங் நீண்ட காலம் சிறையில் இருந்து விட்டதால்.விதிக்கப்பட்ட மரணதண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது.
அதேபோன்று விஷ ஊசி வழக்கில் காலதாமதம் ஆனதால் 8 ஆண்டுகள் சிறையில் இருந்த வைத்தி என்னும் குற்றவாளி மனு செய்தார்.அவர் தண்டனையையும் ஆயுள் தண்டனையாய் நீதிமன்றம் குறைத்தது.
அதே போன்று தான் ராஜீவ் கொலை வழக்கும்.இதிலும் கருணை மனுக்கள் மீது முடிவெடுக்க தாமதமாகியுள்ளது.குற்றம் நடந்து 20 ஆண்டுகளுக்கும் மேல் முருகன், சாந்தன் ,பேரறிவாளன் ஆகியோர் சிறையில் உள்ளனர்.இப்போது மரணதண்டனையையும் நிறைவேற்றினால் ஒரே குற்றத்திற்காக இரண்டு முறை தண்டனை கொடுப்பது போலாகும்..

டிஸ்கி-
ராஜீவ் இருந்திருந்தா இவர்களை மன்னித்திருப்பார்னு தலைவர் சொல்றாரே!
அவர் இருந்திருந்தா ..அவரைக் கொன்றதற்கான தண்டனையை எப்படிக் கொடுக்க முடியும்? இவர்கள் குற்றவாளியே ஆகி இருக்க முடியாதே !!

Friday, August 26, 2011

உன் உயிரை மாய்த்துக் கொள்ள உனக்கு உரிமை உண்டா..?




ஒரு பழைய நாடகமொன்றில் வரும் வசனம் இது...

கடற்கரையில் தன் உயிரை மாய்த்துக் கொள்ள ஒருவன் செல்கிறான்.அதை ஒரு போலீஸ்காரர் பார்த்துவிடுகிறார்.அவரிடம் சென்று சொல்கிறார் "ஏம்பா..உனக்கு ஒரு குழந்தை இருந்தா அதை சாகடிக்கும் உரிமை உனக்கு உண்டா?"
"இல்லை"
"நீ பெத்த குழந்தையையே சாகடிக்க உனக்கு உரிமை இல்லை என்னும் போது..உங்கப்பா பெத்த குழந்தையை சாகடிக்க உனக்கு உரிமை ஏது?" என்பார்.
படிக்க..இது நகைச்சுவையாய் தெரிந்தாலும்..பல அர்த்தங்களை உள்ளடக்கியது இது.
இயற்கை படைத்த ஒன்றை அழிக்க நமக்கு உரிமை உள்ளதா?
ஒரு மரத்தை வெட்டக்கூட நமக்கு உரிமை கிடையாது...
வருஷக்கணக்கில் கோமா வில் இருக்கும் ஒரு நோயாளியின் வாழ்வு இறுதிவரை அப்படித்தான் என்ற நிலையிலும் கருணைக்கொலை செய்ய சட்டம் அனுமதிப்பதில்லை.
அப்படிப்பட்ட சட்டத்தில்..மரணதண்டனை மட்டும் ஏன் இருக்கிறது..
ஒரு உயிரை பறித்தவனுக்கு தண்டனை அவன் உயிர் என்றால் அது நியாயமா?
கண்ணுக்கு கண், கைக்கு கை, உயிருக்கு உயிர் ...என்றால் நாமெல்லாம் இன்னும் கற்காலத்திலா இருக்கிறோம்..
ஒரு உயிர் போனதற்கு இந்தியா பல்லாயிரக்கணக்கான அப்பாவிகள் உயிர் போவதைத் தடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்ததே..அது போதாதா..
அப்படியே...உயிருக்கு உயிர் என்ற காட்டுமிராண்டித்தன வாதத்தை , வாதத்திற்காக ஏற்றுக் கொண்டாலும்...
அந்த உயிர்கள் எடுத்துக் கொள்ளப்பட்டுவிட்டன.
இப்போது இருப்பவை உயிரை எடுத்தவை அல்ல..
எய்தவனே இல்லாத போது..வெறும் அம்புகளை தண்டிப்பது முறையா?
உடனே..சம்பந்தப்பட்டவர்கள்...குறிப்பாக தமிழக அரசு குறிக்கிட வேண்டும்..
தமிழுக்காக வாழ்கிறேன் என்று வெறும் சொல்லாக இல்லாமல்..மத்தியில்..தான் சொல்வதைக் கேட்பார்கள் என்னும் தலைவர் ஆவன செய்ய வேண்டும்..
அப்பாவி உயிர்கள் காக்கப்பட வேண்டும்..
செய்வார்களா?