Friday, August 26, 2011

உன் உயிரை மாய்த்துக் கொள்ள உனக்கு உரிமை உண்டா..?




ஒரு பழைய நாடகமொன்றில் வரும் வசனம் இது...

கடற்கரையில் தன் உயிரை மாய்த்துக் கொள்ள ஒருவன் செல்கிறான்.அதை ஒரு போலீஸ்காரர் பார்த்துவிடுகிறார்.அவரிடம் சென்று சொல்கிறார் "ஏம்பா..உனக்கு ஒரு குழந்தை இருந்தா அதை சாகடிக்கும் உரிமை உனக்கு உண்டா?"
"இல்லை"
"நீ பெத்த குழந்தையையே சாகடிக்க உனக்கு உரிமை இல்லை என்னும் போது..உங்கப்பா பெத்த குழந்தையை சாகடிக்க உனக்கு உரிமை ஏது?" என்பார்.
படிக்க..இது நகைச்சுவையாய் தெரிந்தாலும்..பல அர்த்தங்களை உள்ளடக்கியது இது.
இயற்கை படைத்த ஒன்றை அழிக்க நமக்கு உரிமை உள்ளதா?
ஒரு மரத்தை வெட்டக்கூட நமக்கு உரிமை கிடையாது...
வருஷக்கணக்கில் கோமா வில் இருக்கும் ஒரு நோயாளியின் வாழ்வு இறுதிவரை அப்படித்தான் என்ற நிலையிலும் கருணைக்கொலை செய்ய சட்டம் அனுமதிப்பதில்லை.
அப்படிப்பட்ட சட்டத்தில்..மரணதண்டனை மட்டும் ஏன் இருக்கிறது..
ஒரு உயிரை பறித்தவனுக்கு தண்டனை அவன் உயிர் என்றால் அது நியாயமா?
கண்ணுக்கு கண், கைக்கு கை, உயிருக்கு உயிர் ...என்றால் நாமெல்லாம் இன்னும் கற்காலத்திலா இருக்கிறோம்..
ஒரு உயிர் போனதற்கு இந்தியா பல்லாயிரக்கணக்கான அப்பாவிகள் உயிர் போவதைத் தடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்ததே..அது போதாதா..
அப்படியே...உயிருக்கு உயிர் என்ற காட்டுமிராண்டித்தன வாதத்தை , வாதத்திற்காக ஏற்றுக் கொண்டாலும்...
அந்த உயிர்கள் எடுத்துக் கொள்ளப்பட்டுவிட்டன.
இப்போது இருப்பவை உயிரை எடுத்தவை அல்ல..
எய்தவனே இல்லாத போது..வெறும் அம்புகளை தண்டிப்பது முறையா?
உடனே..சம்பந்தப்பட்டவர்கள்...குறிப்பாக தமிழக அரசு குறிக்கிட வேண்டும்..
தமிழுக்காக வாழ்கிறேன் என்று வெறும் சொல்லாக இல்லாமல்..மத்தியில்..தான் சொல்வதைக் கேட்பார்கள் என்னும் தலைவர் ஆவன செய்ய வேண்டும்..
அப்பாவி உயிர்கள் காக்கப்பட வேண்டும்..
செய்வார்களா?

1 comment:

aotspr said...

"நீ பெத்த குழந்தையையே சாகடிக்க உனக்கு உரிமை இல்லை என்னும் போது..உங்கப்பா பெத்த குழந்தையை சாகடிக்க உனக்கு உரிமை ஏது?"

நல்ல வரிகள்.....

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com