1)சென்னை சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் கணக்கில் காட்டாத 100 கோடி மதிப்புள்ள பொருள்களை இருப்பு வைத்திருந்ததை வருமானவரித்துறை கண்டுபிடித்துள்ளது.இதுதவிர கணக்கில் காட்டப்படாத 15 கிலோ தங்கம்,1.5 கோடி ரூபாய் ஆகியவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.
2)கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் அலட்சியத்தால் நெசவாளர் சங்கங்களில் 67 கோடி மதிப்புள்ள பட்டுச் சேலைகள்,கைத்தறி வேட்டிகள் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கியுள்ளன
3)1.5 லட்சம் கிளைகள். அவற்றில் 90 சதவிகிதம் கிராமங்களில்..ஆம்..நாட்டின் மிகப் பெரிய வங்கியாக அஞ்சல் துறை மாற இருக்கிறது.ஏடிஎம், டெபிட் கார்ட் என்று எல்லா வசதியும் உண்டாம்.
4)பட்டப்படிப்பு படிப்பதற்காக அமெரிக்கா செல்லும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை 2010-11 ஆம் ஆண்டில் 8 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக அமெரிக்காவின் கவுன்ஸில் ஆஃப் கிராஜூவேட் ஸ்கூல் தெரிவித்துள்ளது.
5)இந்தியாவில் 2015ஆம் ஆண்டில் 55 மில்லியன் கூடுதல் வேலைவாய்ப்புகளுக்கான தேவை ஏற்படுமாம்.
6)கரன்ஸி நோட்டுகளில் போலியை கண்டுபிடிக்க இப்படி ஒரு வழி இருப்பது தெரியுமா?
நோட்டுகளின் வெற்றிடத்தில் அசோக சக்கிரத்திற்கு மேல் மதிப்பிற்கேற்றபடி தொட்டு உணரும் வண்ணம் குறியீடு இருக்கும்.20 ரூபாயானால் செவ்வகமாகவும்,50 ரூபாய் சதுரமாகவும், 100 ரூபாய் முக்கோணமாகவும், 500 ரூபாய் வட்டமாகவும், 1000 ரூபாய் டயமண்ட் ஆகவும் இந்தக் குறியீடு இருக்கும்.10 ரூபாய்க்கு இருக்காது.
7) ஆசிய கண்டத்தில் அதிக கடன் சுமை உள்ள நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.அதாவது மொத்த உள்நாட்டூ உற்பத்தி மதிப்பில் கடன் 68 சதவிகித பங்கு வகிப்பதாக புள்ளி விவரம் சொல்கிறது.மத்திய அரசுக்கு 39.3 லட்சம் கோடி கடன் உள்ளது.