Showing posts with label Money Matters. Show all posts
Showing posts with label Money Matters. Show all posts

Saturday, August 20, 2011

MONEY பற்றி மணி செய்திகள்




1)சென்னை சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் கணக்கில் காட்டாத 100 கோடி மதிப்புள்ள பொருள்களை இருப்பு வைத்திருந்ததை வருமானவரித்துறை கண்டுபிடித்துள்ளது.இதுதவிர கணக்கில் காட்டப்படாத 15 கிலோ தங்கம்,1.5 கோடி ரூபாய் ஆகியவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.

2)கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் அலட்சியத்தால் நெசவாளர் சங்கங்களில் 67 கோடி மதிப்புள்ள பட்டுச் சேலைகள்,கைத்தறி வேட்டிகள் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கியுள்ளன

3)1.5 லட்சம் கிளைகள். அவற்றில் 90 சதவிகிதம் கிராமங்களில்..ஆம்..நாட்டின் மிகப் பெரிய வங்கியாக அஞ்சல் துறை மாற இருக்கிறது.ஏடிஎம், டெபிட் கார்ட் என்று எல்லா வசதியும் உண்டாம்.

4)பட்டப்படிப்பு படிப்பதற்காக அமெரிக்கா செல்லும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை 2010-11 ஆம் ஆண்டில் 8 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக அமெரிக்காவின் கவுன்ஸில் ஆஃப் கிராஜூவேட் ஸ்கூல் தெரிவித்துள்ளது.

5)இந்தியாவில் 2015ஆம் ஆண்டில் 55 மில்லியன் கூடுதல் வேலைவாய்ப்புகளுக்கான தேவை ஏற்படுமாம்.

6)கரன்ஸி நோட்டுகளில் போலியை கண்டுபிடிக்க இப்படி ஒரு வழி இருப்பது தெரியுமா?
 நோட்டுகளின் வெற்றிடத்தில் அசோக சக்கிரத்திற்கு மேல் மதிப்பிற்கேற்றபடி தொட்டு உணரும் வண்ணம் குறியீடு இருக்கும்.20 ரூபாயானால் செவ்வகமாகவும்,50 ரூபாய்   சதுரமாகவும், 100 ரூபாய் முக்கோணமாகவும், 500 ரூபாய் வட்டமாகவும், 1000 ரூபாய் டயமண்ட் ஆகவும் இந்தக் குறியீடு இருக்கும்.10 ரூபாய்க்கு இருக்காது.

7) ஆசிய கண்டத்தில் அதிக கடன் சுமை உள்ள நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.அதாவது மொத்த உள்நாட்டூ உற்பத்தி மதிப்பில் கடன் 68 சதவிகித பங்கு வகிப்பதாக புள்ளி விவரம் சொல்கிறது.மத்திய அரசுக்கு 39.3 லட்சம் கோடி கடன் உள்ளது.    

Saturday, August 13, 2011

MONEY பற்றி மணி செய்திகள்..




இன்று பரபரப்பாய் பேசப்படும் ஐ.டி., தொழில் சில ஆண்டுகளில் பபரப்பை இழந்துவிடுமாம்.30 விழுக்காடு 40 விழுக்காடு லாபம் என்பதெல்லாம் போய் மற்ற தொழில்கள் மாதிரி ஆகிவிடுமாம்.

2)பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தியதால் கடனுக்கான வட்டிகள் உயர்ந்துள்ளன.ஆயினும் நிரந்திர வைப்பு நிதிக்கான வட்டி விகிதமும் உயர்ந்துள்ளது.இதனால் முதலீட்டு விஷயங்களில் ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் இதில் முதலீடு செய்வதன் மூலம் கணிசமாய் வட்டித் தொகையைப் பெறலாம்

3)ஆஸ்திரேலியாவிலும் வேலையில்லாத் திண்டாட்டம் படுபயங்கரமாக அதிகரித்து வருகிறதாம்.வேலையில்லாதார் எண்ணிக்கை சுமார் 18 ஆயிரத்திலிருந்து 6 லட்சத்திற்கும் அதிகமாக உயர்ந்துவிட்டதாம்

4)அமெரிக்க பொருளாதார நெருக்கடியின் தொடர்ச்சியாக மூன்று மாகாணங்களில் பேருந்தில் பயணம் செய்து மக்களின் பொருளாதார நிலை,வேலை வாய்ப்பு சூழல் போன்றவற்றை ஆய்வு செய்யப் போகிறாராம் ஒபாமா

5)டெலிகாம் நிறுவனங்கள் தாங்கள் விற்கும் சிம் கார்டுகளுக்கு சேவை வரி கட்ட வேண்டும் என கேரள உயர் நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது..இதன் பளூ கடைசியில் யார் மீது விழும் என சொல்ல வேண்டியதில்லை

6)2010 ஆம் ஆண்டில் மட்டும் 3200 கோடி ரூபாய் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருந்தது.ரூபாய் நோட்டுகளில் ஆயிரத்தில் நாங்கு ஓட்டுகள் கள்ள நோட்டுகளாக இருப்பதாக அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது

7பங்குச் சந்தை வீழ்ச்சி அடையும் ஒவ்வொரு சமயத்திலும்..சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நீண்ட காலத்திர்கு முதலீடு செய்துவிட்டு நாட்டில் நடப்பதை வேடிக்கைப் பாருங்கள்.லாபம் அதுவாக உங்களைத் தேடிவரும்.வெறும் வார்த்தைகள் அல்ல இவை..எதிர்காலத்தின் நிஜங்கள்.

(தகவல்கள்- நாணயம் விகடன்)

Saturday, August 6, 2011

MONEY பற்றி மணி செய்திகள்




1) கடம் கேட்டு சர்வதேச நிதியத்தின் கதவுகளைத் தட்டிக் கொண்டிருந்த நாம், ஐரோப்ப நாடுகளின் பொருளாதார சிக்கலைத் தீர்க்க ஒன்பதாயிரம் கோடியை சர்வதேச நிதியத்திடம் கொடுத்துள்ளோம்.

2)இன்றைய தேதியில் அமெரிக்க அரசிடம் இருக்கும் பணத்தைவிட ஆப்பிள் நிறுவனத்திடம் இருக்கும் பணம் அதிகமாம்

3)ஏர் இந்தியா நிறுவனத்தின் நிதிப் பிரச்னைகளை சமாளிக்க அதற்கு 1732 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது

4)பார்தி ஏர்டெல்லின் தலைவர் சுனில் மிட்டலின் சம்பளத்தை ஆண்டுக்கு 70 கோடியாக நிர்ணயிக்க பங்குதாரர்களின் ஒப்புதலைப் பெற உள்ளதான் அந்நிறுவனம்

5)இந்தியவின் டாப் 200 ஐடி நிறுவனங்கள் கடந்த நிதியாண்டில் 25 விழுக்காடு அதிக வளர்ச்சியடைந்து 84 பில்லையன் டாலர் வருமானம் ஈட்டியுள்ளனவாம்

6)நாட்டிலுள்ள 1.5 லட்சம் தபால் நிலையங்களை வங்கிகளாக மாற்ற RBI யிடம் உரிமம் பெற உள்ளதாம் மைய அரசு

7)நான்காம் ஆண்டு பொறியியல் படிக்கும் மாணவர்களிடம் மைக்ரோ சாஃப்ட், அமேசான் போன்ற நிறுவனங்கள் நேர்காணல் மூலம் 3000 பேரை அமெரிக்காவில் வேலை செய்ய ஆண்டு வருமானம் 14 முதல் 16 லட்சம் ரூபாய்வரை பெரும்படியாக வேலைக்குத் தேர்ந்தெடுத்துள்ளதாம்.