Saturday, August 13, 2011

MONEY பற்றி மணி செய்திகள்..




இன்று பரபரப்பாய் பேசப்படும் ஐ.டி., தொழில் சில ஆண்டுகளில் பபரப்பை இழந்துவிடுமாம்.30 விழுக்காடு 40 விழுக்காடு லாபம் என்பதெல்லாம் போய் மற்ற தொழில்கள் மாதிரி ஆகிவிடுமாம்.

2)பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தியதால் கடனுக்கான வட்டிகள் உயர்ந்துள்ளன.ஆயினும் நிரந்திர வைப்பு நிதிக்கான வட்டி விகிதமும் உயர்ந்துள்ளது.இதனால் முதலீட்டு விஷயங்களில் ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் இதில் முதலீடு செய்வதன் மூலம் கணிசமாய் வட்டித் தொகையைப் பெறலாம்

3)ஆஸ்திரேலியாவிலும் வேலையில்லாத் திண்டாட்டம் படுபயங்கரமாக அதிகரித்து வருகிறதாம்.வேலையில்லாதார் எண்ணிக்கை சுமார் 18 ஆயிரத்திலிருந்து 6 லட்சத்திற்கும் அதிகமாக உயர்ந்துவிட்டதாம்

4)அமெரிக்க பொருளாதார நெருக்கடியின் தொடர்ச்சியாக மூன்று மாகாணங்களில் பேருந்தில் பயணம் செய்து மக்களின் பொருளாதார நிலை,வேலை வாய்ப்பு சூழல் போன்றவற்றை ஆய்வு செய்யப் போகிறாராம் ஒபாமா

5)டெலிகாம் நிறுவனங்கள் தாங்கள் விற்கும் சிம் கார்டுகளுக்கு சேவை வரி கட்ட வேண்டும் என கேரள உயர் நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது..இதன் பளூ கடைசியில் யார் மீது விழும் என சொல்ல வேண்டியதில்லை

6)2010 ஆம் ஆண்டில் மட்டும் 3200 கோடி ரூபாய் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருந்தது.ரூபாய் நோட்டுகளில் ஆயிரத்தில் நாங்கு ஓட்டுகள் கள்ள நோட்டுகளாக இருப்பதாக அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது

7பங்குச் சந்தை வீழ்ச்சி அடையும் ஒவ்வொரு சமயத்திலும்..சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நீண்ட காலத்திர்கு முதலீடு செய்துவிட்டு நாட்டில் நடப்பதை வேடிக்கைப் பாருங்கள்.லாபம் அதுவாக உங்களைத் தேடிவரும்.வெறும் வார்த்தைகள் அல்ல இவை..எதிர்காலத்தின் நிஜங்கள்.

(தகவல்கள்- நாணயம் விகடன்)

6 comments:

vidivelli said...

எதிர்காலத்தின் நிஜங்கள்............
நல்ல பகிர்வு..
வாழ்த்துக்கள்...

http://sempakam.blogspot.com/

Ashok D said...

thank u :)

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி vidivelli

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி Ashok

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி Ashok

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி priya