Showing posts with label kavithai. Show all posts
Showing posts with label kavithai. Show all posts

Monday, November 10, 2008

நான் யார்...நான் யார்...(கவிதை)

நான்
உடல் வலிமையுள்ளவன் என்கிறாயே
உன் அன்னைக்கு நன்றி சொல்
உதிரத்தை பாலாய் கொடுத்தவள்
அவர்

நான்
பண்புள்ளவன் என்கிறாயே
உன் தந்தையை வணங்கு
உன்னை ஆக்கியவர்
அவர்

நான்
அறிவாளி என்பவனே
உன் ஆசிரியரை நினை
உன் அறிவை வளர்த்தவர்
அவர்

நான்
நல்ல கணவன் என்கிறாயே
உன் மனைவியைக் கேள்
உனக்கு அப்பெயர் வரக் காரணம்
அவள்

நான்
நல்ல தந்தை என்பவனே
உன் வாரிசுகளைக் கேள்
உன் கடமையைசெய்ததை உரைப்பவர்
அவர்

நான்
நல்லவன் என பெருமையுறுபவனே
உன் உடல் சுமக்கப்படும் போது
உன் சுற்றமும்..நட்பும் சொல்லட்டும்
அதை

Wednesday, August 6, 2008

தமிழன்...அரசியல்வாதி...கவிஞன்

1. தமிழ் வாழ்க
என்றால்
அவனுக்கு புரிவதில்லை
லாங்லிவ் டமில்
என்றால்
அவனுக்கு புரிகிறது
ஏனெனில்
அவன் ஒரு தமிழன்.

2. தமிழ்
கட்டாய பயிற்சி மொழிக்காக
ஆங்கிலப் பள்ளியில்
அரசியல் வாதி
ஆர்ப்பாட்டம்
வகுப்பறையிலிருந்து
வெளியே தந்தையை
பார்த்தான் மகன்.

3. வாழும்போது
வறியவன் நீ
தனிமனிதன் உனக்கு
உணவில்லை தரணியில்
இறந்தபின் உன்
புகழ்ப் பாடப்படும்
நினைவில்லம் கட்டப்பட்டும்
உன் ஜாதகம் அப்படி
ஏனெனில்..நீ
ஒரு தமிழ்க்கவிஞன்