Thursday, September 27, 2012

டிசிஎஸ், விப்ரோ, இன்போசிஸ்:


டிசிஎஸ், விப்ரோ, இன்போசிஸ்: அமெரிக்காவில் 'பெஞ்சில்' இருக்கும் ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!

டிசிஎஸ், விப்ரோ, இன்போசிஸ் நிறுவனங்களில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் பெஞ்சில் இருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்த நாடுகளில் நிலவி வரும் பொருளாதாரப் பிரச்சனைகளால் பல்வேறு நிறுவனங்கள் புதிய திட்டங்கள், விரிவாக்கத்தை நிறுத்தி வைத்துள்ளன.

ஆனால், இந்த நிறுவனங்களின் திட்டங்களுக்காக அந்த நாடுகளில் ஏராளமான உள்ளூர் நபர்களை வேலைக்கு எடுத்த டிசிஎஸ், விப்ரோ, இன்போசிஸ் ஆகியவை, அதில் பலருக்கு எந்தப் பணியும் தர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

இதனால் இவர்கள் காத்திருக்கும் நிலையில் ('bench') உள்ளனர். இதன் காரணமாக இந்த நிறுவனங்களின் லாபத்தில் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
காண்ட்ராக்ட்களை எளிதாகப் பெறவும், வேலைவாய்ப்புகளை இந்தியா சுருட்டுகிறது என்ற பிரச்சாரத்தை எதிர்கொள்ளவும், அமெரிக்கர்களுக்கும் ஐரோப்பியர்களுக்கும் அதிக வேலைவாய்ப்புகளை வழங்குவது போல காட்டிக் கொள்ளவும் பல இந்திய சாப்ட்வேர் நிறுவனங்களும் அந் நாடுகளைச் சேர்ந்தவர்களை ஏராளமான பணியில் சேர்த்தன.
முன்பு இவர்களில் கிட்டத்தட்ட 97 சதவீதம் பேர் முழு அளவில் பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட நிலையில், இப்போது 90 சதவீதத்தினருக்கே உண்மையில் வேலை உள்ளது. இன்னும் சில சாப்ட்வேர் நிறுவனங்களில் 18 சதவீத வெளிநாட்டு ஊழியர்கள் பெஞ்சில் உள்ளனர்.

இந்தியாவில் என்றால் ஏதாவது காரணத்தைச் சொல்லி வெளியே அனுப்புவது எளிது. ஆனால், அமெரிக்கா, ஐரோப்பாவில் ஆட்களை வேலையை விட்டு நீக்கும்போது ஏராளமான கட்டுப்பாடுகள் உள்ளன. மேலும் இந்தியாவை விட பல மடங்கு பணத்தை இழப்பீடாகத் தர வேண்டும்.

வழக்கமாக இந்த நாடுகளில் பணியின் அளவு குறையும்போது சில ஊழியர்களை நீக்கிவிட்டு, மற்றவர்களை செலவு குறைந்த நாடுகளுக்கு (குறிப்பாக இந்தியா) அனுப்புவது சாப்ட்வேர் நிறுவனங்களின் வாடிக்கை.

ஆனால், இப்போது அமெரிக்கத் தேர்தல் பிரச்சாரம் உச்சத்தில் இருப்பதால் அமெரிக்க ஊழியர்களை வேலையை விட்டு நீக்குவது, உள்ளூர் பணியாளர்களை வேறு நாடுகளுக்கு இடம் மாற்றுவது போன்ற வேலைகளை செய்ய முடியாத நிலைக்கு சாப்ட்வேர் நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன.
இதைச் செய்யும் நிறுவனத்துக்கு எதிராக அமெரிக்காவின் ஆளும் தரப்பும், எதிர்க் கட்சிகளும் பிரச்சாரத்தில் இறங்கி ஓட்டு வேட்டைக்கு முயலக் கூடும். இதனால் இந்த நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கை கூட எதிர்காலத்தில் பாயலாம்
.
மேலும் ஒரு அப்ளிகேஷனில் திறமையாக இருந்தார் என்பதற்காக ஒரு புராஜெக்டுக்காக எடுக்கப்பட்ட ஊழியரை வெறொரு அப்ளிகேஷன் பயன்படுத்தும் இன்னொரு திட்டத்தில் ஈடுபடுத்த முடியாத நிலையும் உள்ளது. குறிப்பாக கோடிங், மெயின்டெனென்ஸ் என்று இருந்த நிலை மாறி இப்போது enterprise mobility, cloud computing and data analytics ஆகிய பிரிவுகளுக்கே அதிக தேவைகள் உருவாகியுள்ளன.

ஆனால், இந்தத் திறமைகள் கொண்ட அமெரிக்க-ஐரோப்பிய ஊழியர்கள் மிக மிகக் குறைவு.
இந்தக் காரணங்களால் இந்திய சாப்ட்வேர் நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களை பெஞ்சில் சும்மா காத்திருக்க வைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
இந்தியாவின் பெரிய சாப்ட்வேர் நிறுவனங்களைப் பொறுத்தவரை மொத்த ஊழியர்களில் 10 முதல் 15 சதவீதம் பேர் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ளனர்.
இன்போசிஸ் நிறுவனத்தைப் பொறுத்தவரை 13,000 பேர் அமெரிக்காவில் மட்டும் பணியாற்றுகின்றனர். விப்ரோவில் 10,000 பேரும், எச்சிஎல் நிறுவனத்தில் 8,000 பேரும், டிசிஎஸ்சில் 6,000 பேரும் அந்த நாட்டில் பணியாற்றி வருகின்றனர்.

இந் நிலையில் அமெரிக்கா, ஐரோப்பாவில் நிலைமை சீராகாத வரை, அதிக செலவு வைக்கும் அமெரிக்க, ஐரோப்பிய நாட்டு உள்ளூர் ஊழியர்கள் பெஞ்சிலிருந்து உண்மையான பணிக்குத் திரும்பாத வரை, இந்திய சாப்ட்வேர் நிறுவனங்களின் லாபம் அதிகரிப்பது சிரமமே.

(couetesy - That's thamizh

6 comments:

Unknown said...

இன்றைய நிலைபற்றி தெளிவான விளக்கம்! நன்றி!

தமிழ் காமெடி உலகம் said...

இன்றைய நிலையை விளக்கி சொல்லியதற்கு நன்றி...

நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)

Easy (EZ) Editorial Calendar said...

அருமையான உண்மை பகிர்வு.....பகிர்வுக்கு நன்றி....

நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி புலவர் சா இராமாநுசம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி தமிழ் காமெடி உலகம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Easy