Monday, December 10, 2012

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடும்..கலைஞரும்




கலைஞர் ஒரு அறிக்கையில் சொல்லியுள்ளது..
கேள்வி: சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டினை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று தமிழக முதல்வர் திட்டவட்டமாக தெரிவித்த போதிலும், 'வால்மார்ட்' நிறுவனம் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டினை தமிழகத்தில் கொண்டு வருவதற்கான முயற்சியினை மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறதே?.

பதில்: வானகரத்தில் 'வால்மார்ட்' நிறுவனத்தின் சார்பில் 7 ஏக்கர் பரப்பளவில் வணிக வளாகமும், அண்ணா நகரில் மாக்கெட்டிங் அலுவலகமும் தொடங்கி அதற்கான பணிகள் நடைபெறுவதாக தகவல்கள் வருகின்றன. மளிகை கடைக்காரர்களை அணுகி குறைந்த விலையில் உங்களுக்கு பொருட்களை விநியோகிக்கிறோம் என்று கூறி, அவர்களை உறுப்பினர்களாக ஆக்குவதற்கான முயற்சியில் தீவிரமாக அந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறதாம்.

இந்த செய்திகள் உண்மையாக இருக்குமேயானால் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடுகள் நுழைந்துவிடக்கூடும். சம்பந்தப்பட்டவர்களின் இந்த நிறுவனத்தின் நடவடிக்கைகள் பற்றி விசாரித்தபோது, நாங்கள் சில்லறை வர்த்தகம் செய்யவில்லை, கடைகளுக்கு மொத்தமாக பொருட்களை வழங்கப் போகிறோம் என்று கூறுகிறார்களாம். எனவே தமிழக அரசு இந்த செய்தி உண்மையா என்பதை அறிந்து உடனடியாக அதன் மீது தக்க நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

டிஸ்கி-
மகன்-அப்பா...குழந்தையையும் கிள்ளி விட்டு..தொட்டிலையும் ஆட்டுவது என்று ஏன் சொல்கிறார்கள்?
அப்பா-ஏதேனும் ஒன்றிற்கு ஆதரவாகவும்...அடுத்த நிமிடமே மறுப்பாகவும் பேசுவதற்கு என்ன சொல்வது...தெரியுமா?
மகன்-தெரியாது
அப்பா-சில விஷயங்கள் தெரியாமல் இருப்பதே நல்லது..
மகன்-நீ என்ன சொல்றேன்னும் புரியல
அப்பா-உனக்குமட்டுமா புரியலை..புரியாது மாதிரி நடிபவங்களுக்குக் கூட புரியலை


1 comment:

Easy (EZ) Editorial Calendar said...

உரையாடல் உண்மையை அப்படியே எடுத்து உறைக்கிறது.....ஆனால் அனைவரும் இதை அறிந்ததே......ஆனால் வெளியே தெரியாது போல நடிக்கிறார்கள்.....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)