Sunday, December 23, 2012

மூன்று பட விமரிசனங்கள் ஓரிரு வரிகளில்..




நான் பார்க்கும் படங்களில்..மற்றவர்களுக்கு பிடித்தும்..எனக்குப் பிடிக்காத படங்களை நான் விமரிசப்பதில்லை.அதே நேரம் சில படங்கள் எனக்கு பிடித்திருந்தால்..எவ்வளவு நாட்கள் கழித்து அப்படத்தைப் பார்த்திருந்தாலும்..நான் விமரிசிக்கத் தயங்கியதில்லை.

இப்பதிவில் நான் பார்த்த மூன்று படங்கள் பற்றிய சிறு விமரிசனம்.

ந.கொ.ப,கா..- தமிழ்திரைப்படம் இடைவிடாது சிரித்துப் பார்த்து நாளாகிவிட்டதே என்ற ஏக்கத்தை தீர்த்த படம்.ஆனாலும்..ஒருவருக்கு ஏற்படும் குறைபாட்டை வைத்து சிரிக்கிறோம்.உண்மையிலேயே இப்படிப்பட்ட மெமரி லாஸ் உள்ள நோயாளிகள் இல்லத்தில் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்று நினைத்தால் நமக்கு சிரிப்பு வராது.ஆனாலும் நகைச்சுவை என்று இதை சீரியஸாக எடுக்காவிடின் படம் அருமை.படத்தின் நீளத்தை 40 நிமிடங்கள் குறைத்திருந்தால்...இன்னும் விறுவிறுப்பாய் இருந்திருக்கும்.
எனி வே...இப்படக் குழுவினருக்கு பாராட்டுகள்.விஜய் சேதுபதிக்கு ஸ்பெஷல் பாராட்டு..(சுந்தர பாண்டியன், பீட்ஸா, ந.கொ.ப.கா...கலக்குங்க..

கும்கி- மைனாவிற்கு பின் பிரபு சாலமனிடம் ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பை ஏமாற்றவில்லை இயக்குநர்.விக்ரம் பிரபு நன்கு நடித்துள்ளார்.புதிய கதைக்களன்..ஒளிப்பதிவு தரம்.ஒரே குறை...கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் நிறைவைத் தரவில்லை.தம்பி ராமய்யா அனுபவமிக்க நடிப்பு ரசிக்க வைக்கிறது.ஒன்றின் தோல்வி..மற்றதன் வெற்றி..என்று சொல்வர்.அப்படி ஒன்று நடந்து..இப்படத்திற்கு கிடைப்பதற்கு மேல் கிடைத்துள்ளது அதிர்ஷ்டமே..

நீதானே....= மீண்டும் ஏமாற்றிவிட்டார்..சில நேரங்களில் இயக்குநர்கள் மக்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திவிடுகிறார்கள்.அதனால் மக்கள் அதிகம் எதிர்ப்பார்க்க..அதில் சிறிது குறைந்தாலும் படம் வீழ்ந்து விடுகிறது.அந்த வகையில் இதுவும் ஒன்று.

இதைத் தவிர்த்து..அம்மாவின் கை பேசி, போடா போடி...

எப்படி இவர்களுக்கு இப்படியெல்லாம் படமெடுக்கும் தைரியம் வருகிறது.


No comments: