Tuesday, January 29, 2019

தினம் ஒரு தகவல் - 2


வள்ளுவன் வாக்கு

சாதாரணமாகவே. ஏதேனும் ஒரு துறையில் வல்லுனராக உள்ளவர்களுக்கு சற்று அகந்தை இருக்கும்.

பள்ளியில் நன்கு படிக்கும் மாணவன் மற்ற மாணவர்களை சற்று (வித்யா)கர்வத்துடன் பார்ப்பான்


உயர் அதிகாரி, தன் கீழ் வேலை செய்பவர்கள் தவறு செய்கையில், அதைத் தட்டிக் கேட்கும் போது...தான் அவர்களுடன் உயர்ந்தவன் என்ற அகந்தையை அடைவார்.


பக்கத்துவீட்டுக் காரர் கார் வாங்கிவிட்டால், நேற்றுவரை சகஜமாகப் பேசியவர், இன்று கண்டும் காணாமல் போவார்.


இதெல்லாம் சில உதாரணங்களே..


மனிதனாய் பிறந்த அனைவருமே, ஏதேனும் ஒரு கோட்டில் சற்று அகந்தைப் பிடித்தவர்களாகவே இருப்பார்கள்.


மனிதர்களே இப்படியெனில்..அவர்களைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் பூமிக்கு எவ்வளவு அகந்தை இருக்கும்.அது என்ன அகந்தை? என்பதை வள்ளுவர் சொல்கிறார்.


"நெருந லுளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை யுடைத்துவ் வுலகு"
(இந்த உலகமானது, நேற்றுவரை உயிருடன் இருந்தவனை இன்று இல்லாமல் செய்து விட்டோம் என்ற அகந்தையைக் கொண்டதாகும்)

No comments: