Showing posts with label தேர்தல் 2009. Show all posts
Showing posts with label தேர்தல் 2009. Show all posts

Saturday, May 16, 2009

தேர்தல் முடிவுகளும்...மக்களும்...

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு..

பணநாயகம் வென்றது..தோற்ற கட்சியினர்கள் சொல்வது..எப்போதுமே வழக்கம்.தி.மு.க., முதன் முதலில் தமிழக அரசை பிடித்தவுடன்..அப்போதைய முதல்வர்...'நாட்டில் விஷக்கிருமிகள்' நுழைந்து விட்டன.' என்று சொல்லவில்லையா.

அதாவது..தோல்வியை நம்மால் தாங்க முடியவில்லை..அதற்கான காரணம் எதாவது சொல்ல வேண்டாமா?

தேர்வில் தோற்ற மாணவன்..வாத்தியார் சரியா பேப்பரை திருத்தவில்லை..அவுட் ஆஃப் சிலபஸ்ல கேள்வி கேட்டுட்டாங்க..என்றெல்லாம் சொல்வதில்லையா? அப்படித்தான்.

பாதி முடிவுகள் வந்த போதே..காங்கிரஸ் முன்னிலை என தெரிந்ததும்..அத்வானி, மன்மோகனுக்கு வாழ்த்து தெரிவித்த..அரசியல் பண்பாடு..நம் தமிழகத்தில் இல்லை.

5 தொகுதிகளில் மட்டுமே வென்ற லாலு..காங்கிரஸுடன் கூட்டு வைக்காதது தவறு..என்று சொன்னது போல நம் தலைவர்களால் சொல்ல முடியவில்லை.

மக்கள் மனோநிலை எல்லா மாநிலங்களிலும் ஒரே மாதிரிதான் இருந்திருக்கிறது.அவர்களுக்கு தேவை..நிலையான ஆட்சி.அதற்கேற்ப ஓட்டளித்துள்ளார்கள்.

பல இடங்களில்...மாநிலக் கட்சிகள்..தங்கள் பலத்தை தவறாக கணக்குப் போட்டு விட்டன.

ஆந்திராவில்..தனியாக ஆட்சி அமைப்போம்..என..சிரஞ்சீவியும்...தெலுங்கு தேசம்கட்சியும் சொன்னாலும்..வென்றது..தனிப்பெரும்பான்மையாக காங்கிரஸ்தான்.

தமிழகத்தில்...அரித்மெடிக் சரியாகத்தான் ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.அ.தி.மு.க.உடன் இருந்த கூட்டணிக் கட்சிகள் ..தி.மு.க.,வில் இருந்த போது 40க்கு 40 கிடைத்தது.அது பிரிந்ததால்தான் 9 இடங்களில் அ.தி.மு.க., வென்றது.

சில காங்கிரஸ் தலைவர்கள் வெல்லக் கூடாது என்ற மனோபாவம் தமிழக மக்களிடம் எல்லா இடங்களிலும் இருந்ததால்தான்..இவ்வளவு வெற்றியிலும்..தங்கபாலு,இளங்கோவன்.மணிசங்கர், தோல்வி யுற்றனர்.

எப்படியானாலும்.....நிலமை சாதகமாக இல்லை என பரவலாக செய்திகள் இருந்தும்..மா பெரும் வெற்றி பெற்ற தி.மு.க., வை வாழ்த்துவோம்.

தமிழக புத்திசாலி வாக்காளர்கள்...

தமிழக..அதுவும் குறிப்பாக சேலம்,,ஈரோடு,மயிலாடுதுரை வாக்காளர்களுக்கு நன்றி.என் பதிவுகளில்..காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில்..காங்கிரஸ் தோற்கடிக்கப் படவேண்டும் என எழுதி இருந்தேன்.குறிப்பாக அடக்கமின்றி..பேசிய தங்கபாலு,இளங்கோவன் ஆகியோரை குறிப்பிட்டிருந்தேன்.

இவர்களுடன்..மத்தியில் அமைச்சர் பதவி வகித்த மணிசங்கர ஐயர் தோற்கடிக்கப் பட்டிருக்கிறார்.

இவர்களை மக்கள் சரியாக தண்டித்து விட்டனர்.

அடுத்து..தேர்தலுக்கு தேர்தல் ஆதாயத்திற்காக கூட்டணி மாறிய..பா.ம.க., ஒரு தொகுதியிலும் வெற்றி பெற வில்லை.

தென் சென்னை..தி.மு.க., வேட்பாளர் அறிவிக்கப் பட்ட போதே வீக்கான வேட்பாளர் என எண்ணினேன்.அது உண்மை ஆயிற்று.

மற்றபடி..தி.மு.க.,விற்கு ஓட்டளித்து அது போட்டியிட்ட 21 தொகுதிகளில் 18ல் வெற்றிக் கனியை கொடுத்த வாக்காளர்களுக்கு நன்றி.

முதலில் தோற்றதாக அறிவிக்கப்பட்ட சிதம்பரம் அதே 3000 வாக்குகள் வித்தியாசத்தில் மறு எண்ணிக்கையில் வென்றதாக அறிவிக்கப்பட்டார்.:-)))

Monday, March 16, 2009

தமிழக அரசியலின் குழப்பவாதி..ராமதாஸ்

தினமும் ஒன்று பேசுகிறார் என கலைஞரை விமரிசிக்கும்..இவர்..அவ்வப்போது என்ன பேசுகிறார்.. ஏன் இப்படி இப்படி பேசுகிறார் என்பதே புரியாது.

ஆட்சி போய்விடும் என்பதால்...அவருக்கு பயம் வந்துவிட்டது என கலைஞரை ராமதாஸ் சொல்வதும்...அதற்கு பதிலாக கலைஞர்..'மத்திய மாநில அரசுகளுக்கிடையே மோதலை உண்டாக்கி ஆதாயம் அடையப்பார்க்கிறார் ராமதாஸ்' எனக் கூறுவதும்...இவர்களிடையே நடக்கும் வார்த்தை பரிமாற்றம்..வராத நாட்களே இல்லை எனலாம்.

இலங்கையில் போர் நிறுத்தம் வரவேண்டும்..அதனால் அதற்காக ஆட்சியை கவிழ விட மாட்டோம்..என்கிறார் ராமதாஸ்.

பா.ம.க., விஷயத்தில்..2001 சட்டசபை தேர்தலை மனதில் வைத்து...அவர்கள் பலத்தை தப்புக் கணக்கு போட்ட கலைஞர்..சென்ற சட்டசபை தேர்தலில் 31 இடங்களை இவர்களுக்கு ஒதுக்கினார்.ஆனால் இவர்கள் வெற்றி பெற்றதோ 18 இடங்களே..

விஜய்காந்த் பல இடங்களில் ஓட்டுகளை பிரித்தார்..அவர்கள் கோட்டையிலேயே..அவர் வெற்றி பெற்று காண்பித்தார்.இதனால் பா.ம.க.,காங்கிரஸ்.,அ.தி.மு.க., கட்சிகள் சில இடங்களில் தோற்றன.

தி.மு.க., கூட்டணியில் இருந்துக் கொண்டே..கலைஞரின் இரண்டாண்டு ஆட்சிக்கு '0' மதிப்பெண் தந்தார் ராமதாஸ்.

காடுவெட்டி விவகாரத்தில்..பா.ம.க.,வை கூட்டணியிலிருந்து விலக்கினார் கலைஞர்.ஆனாலும் பா.ம.க., விலகாததுபோல் செயல்பட்டது.ஒரு கட்டத்தில்..குருவும் விடுவிக்கப்பட்டார். கலைஞருக்கு இது காலத்தின் கட்டாயமாக அமைந்தது.

ஆனால்..பா.ம.க.வோ..இனி வரும் தேர்தல்களில்..தி.மு.க.வின் கூட்டணியில் இருக்க மாட்டோம் என்றதுடன்...காங்கிரஸ் கூட்டணியில் இருப்போம் என்றது.

இன்று...திருமாவளவன்..கலைஞரை சந்தித்தார்...பா.ம.க.,வின் பிரதிநிதிபோல பா.ம.க.வும்..கூட்டணியில் நீடிப்பதாகக் கூறினார்.(ஒரு வேளை..இதுவும் அவர்கள் ஏற்பாடோ)

ஆனால் ஒன்றுமட்டும் நிச்சயம்...

பா.ம.க.வும்...ஏதேனும்..திராவிட கட்சியின் முதுகில் சவாரி செய்தால் மட்டுமே..சில தொகுதிகளில் வெற்றிபெற முடியும்.

இது அவர்களுக்கு தெரியாமலா இருக்கும்.